Wednesday, 29 June 2016

சங்கீதம் 77:1-10

நீ உன் தேவனை நோக்கி உன் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சு, உன் சத்தத்தைத் தேவனிடத்தில் உயர்த்தினாய், அவர் உனக்குச் செவிகொடுப்பார். உன் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினாய், இரவிலும் உன் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது, உன் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. நீ உன் தேவனை நோக்கி அலறினாய், நீ தியானிக்கும்போது உன் ஆவி தொய்ந்துபோயிற்று. நீ தூங்காதபடி உன் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறார், நீ பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறாய். பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்தி. இராக்காலத்தில் உன் சங்கீதத்தை நீ நினைத்து, உன் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறாய், உன் ஆவி ஆராய்ச்சிசெய்தது. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே அவரது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்கிறாய். அப்பொழுது நீ் இது என் பலவீனம் என சொல், ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூரு. சங்கீதம் 77:1-10

No comments:

Post a Comment