Saturday, 25 June 2016

சங்கீதம் 74 :8-14

தேவனுடைய ஜனங்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று சத்துரு தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். தேவனுடைய ஜனங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம், தீர்க்கதரிசியும் இல்லை, இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் அவர்களிடத்தில் இல்லை. எதுவரைக்கும் சத்துரு தேவனை நிந்திப்பான்? பகைவன் அவரது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? தேவன் அவரது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறார்? தேவன் அதை அவரது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்குவார். பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் உன்னுடைய ராஜா. தேவன் அவரது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தார். அவர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தார். சங்கீதம் 74 :8-14

No comments:

Post a Comment