Thursday, 16 June 2016

சங்கீதம் 70 :1-5

தேவன், உன்னை விடுவிப்பார், கர்த்தர், உனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரிப்பார். உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்கள், உனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலட்சையடைவார்கள். ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்கள். கர்த்தரைத் தேடுகிற யாவரும் கர்த்தரில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள், அவரது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்கள். நீயோ சிறுமையும் எளிமையுமானவன், தேவன், உன்னிடத்தில் வருவார்: அவரே உன் துணையும் உன்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தர், தாமதிக்கமாட்டார். சங்கீதம் 70 :1-5

No comments:

Post a Comment