Wednesday, 8 June 2016

சங்கீதம் 69 :1-5

தேவன், உன்னை இரட்சிப்பார்! வெள்ளங்கள் உன் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறாய்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறாய்; வெள்ளங்கள் உன் மேல் புரண்டுபோகிறது. நீ கூப்பிடுகிறதினால் இளைத்தாய், உன் தொண்டை வறண்டுபோயிற்று, உன் தேவனுக்கு நீ காத்திருப்பதால், உன் கண்கள் பூத்துப்போயிற்று நிமித்தமில்லாமல் உன்னைப் பகைக்கிறவர்கள் உன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள், வீணாக உனக்குச் சத்துருக்களாகி உன்னைச் சங்கரிக்கவேண்டு மென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள், நீ எடுத்துக்கொள்ளாததை நீ கொடுக்க வேண்டியதாயிற்று. தேவன் உன் புத்தியீனத்தை அறிந்திருக்கிறார், உன் குற்றங்கள் தேவனுக்கு மறைந்திருக்கவில்லை. சங்கீதம் 69 :1-5

No comments:

Post a Comment