Wednesday, 4 May 2016

சங்கீதம் 54 :1-7

தேவன் அவரது நாமத்தினிமித்தம் உன்னை இரட்சித்து, அவரது வல்லமையினால் உனக்கு நியாயஞ்செய்வார் தேவன் உன் விண்ணப்பத்தைக்கேட்டு, உன் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பார் அந்நியர் உனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடியர் உன் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். இதோ, தேவன் உனக்குச் சகாயர், ஆண்டவர் உன் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். அவர் உன் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், அவரது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்குவார் உற்சாகத்துடன் நீ கர்த்தருக்குப் பலியிடு , கர்த்தருடைய நாமத்தைத் துதி அது நலமானது. கர்த்தர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, உன்னை விடுவிப்பார் உன் கண்கள் உன் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் காணும். சங்கீதம் 54 :1-7

No comments:

Post a Comment