Monday, 3 October 2016

சங்கீதம் 126 :1-6

உண்ணுடைய சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தாய். அப்பொழுது உன்னுடைய வாய் நகைப்பினாலும், உன்னுடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது, அப்பொழுது: கர்த்தர் இவனுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். கர்த்தர் உனக்குப் பெரிய காரியங்களைச் செய்தார், இதினிமித்தம் நீ மகிழ்ந்திருக்கிறாய். கர்த்தர், தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, உன் சிறையிருப்பைத் திருப்புவார். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருகிறான். சங்கீதம் 126 :1-6

No comments:

Post a Comment