Wednesday, 26 October 2016

சங்கீதம் 144 :1-8

உன் கைகளைப் போருக்கும் உன் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற உன் கன்மலையாகிய கர்த்தரை ஸ்தோத்தரி. அவர் உன் தயாபரரும், உன் கோட்டையும், உன் உயர்ந்த அடைக்கலமும், உன்னை விடுவிக்கிறவரும், உன் கேடகமும், நீ நம்பினவரும், உன் ஜனங்களை உனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். கர்த்தர், மனுஷனை கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை அவர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான், அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். கர்த்தர் அவரது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடுவார். மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடிப்பார், அவரது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடிப்பார். உயரத்திலிருந்து அவரது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு உன்னை விலக்கித் தப்புவிப்பார். சங்கீதம் 144 :1-8

No comments:

Post a Comment