Friday, 28 October 2016

சங்கீதம் 145 :11-21

மனுபுத்திரருக்கு கர்த்தருடைய வல்லமையுள்ள செய்கைகளையும், கர்த்தருடைய ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு. கர்த்தருடைய ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, கர்த்தருடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். கர்த்தருடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், கர்த்தருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். எல்லா ஜீவன்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது, ஏற்ற வேளையிலே அவர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறார். கர்த்தர் அவரது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறார். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். உன் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக, மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது. சங்கீதம் 145 :11-21

No comments:

Post a Comment