Thursday, 27 October 2016

சங்கீதம் 144 :9-15

கர்த்தருக்கு, நீ புதுப்பாட்டைப் பாடு, தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணு. அவரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, தமதடியானாகிய உன்னைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறார். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு உன்னை விலக்கித் தப்புவிப்பார். அப்பொழுது உன் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், உன் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். உன் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும், உன் கிராமங்களில் உன் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். உன் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும், சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது, உன் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. இவ்விதமான சீரைப்பெற்ற உன் ஜனம் பாக்கியமுள்ளது, கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்கீதம் 144 :9-15

No comments:

Post a Comment