Friday, 7 October 2016

சங்கீதம் 129 :1-8

துன்மார்க்கர் உன் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் உன்னை நெருக்கினார்கள். உன் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் உன்னை நெருக்கியும், உன்னை மேற்கொள்ளாமற்போனார்கள். உழுகிறவர்கள் உன் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள். கர்த்தரோ நீதியுள்ளவர், துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள். வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக, அது வளருமுன் உலர்ந்துபோம். அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக, கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை. சங்கீதம் 129 :1-8

No comments:

Post a Comment