Tuesday, 4 October 2016

சங்கீதம் 128 :1-6

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிற நீ பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய், உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள், உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற நீ இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவாய். கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய். சங்கீதம் 128 :1-6

No comments:

Post a Comment