Tuesday, 13 September 2016

சங்கீதம் 119 :71-80

நீ உபத்திரவப்பட்டது உனக்கு நல்லது, அதினால் கர்த்தருடைய பிரமாணங்களைக் கற்றுக்கொண்டாய். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், கர்த்தர் விளம்பின வேதமே உனக்கு நலம். கர்த்தருடைய கரங்கள் உன்னை உண்டாக்கி, உன்னை உருவாக்கிற்று, அவருடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள உன்னை உணர்வுள்ளவனாக்கியது. நீ அவருடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், கர்த்தருக்குப் பயந்தவர்கள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி உன்னை உபத்திரவப்படுத்தினாரென்றும் அறிவாய். கர்த்தர் உனக்குக் கொடுத்த அவரது வாக்கின்படி, அவரது கிருபை உன்னைத் தேற்றுவதாக. நீ பிழைத்திருக்கும்படிக்கு அவரது இரக்கங்கள் உனக்குக் கிடைப்பதாக, அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி. அகங்காரிகள் உன்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக, நீயோ கர்த்தருடைய கட்டளைகளைத் தியானி. கர்த்தருக்குப் பயந்து, அவரது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் உன்னண்டைக்குத் திரும்புவார்கள். நீ வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, உன் இருதயம் அவரது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. சங்கீதம் 119 :71-80

No comments:

Post a Comment