Sunday, 11 September 2016

சங்கீதம் 119 :61-70

துன்மார்க்கரின் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையிட்டும், கர்த்தருடைய வேதத்தை நீ மறக்காதே. கர்த்தருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், கர்த்தரைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திரு. கர்த்தருக்குப் பயந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நீ தோழன். பூமி கர்த்தருடைய கிருபையினால் நிறைந்திருக்கிறது, கர்த்தர் அவருடைய பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். கர்த்தர் அவருடைய வசனத்தின்படி உன்னை நன்றாய் நடத்துவார். உத்தம நிதானிப்பையும் அறிவையும் உனக்குப் போதிப்பார், அவருடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிரு. நீ உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தாய், இப்பொழுதோ கர்த்தருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறாய். கர்த்தர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார். அகங்காரிகள் உனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள், நீயோ, முழு இருதயத்தோடும் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள். அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது, நீ கர்த்தருடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிரு. சங்கீதம் 119 :61-70

No comments:

Post a Comment