Saturday, 10 September 2016

சங்கீதம் 119 :51-60

அகந்தைக்காரர் உன்னை மிகவும் பரியாசம்பண்ணினாலும், நீ கர்த்தருடைய வேதத்தைவிட்டு விலகாதே. ஆதிமுதலான கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளை நீ நினைத்து உன்னைத் தேற்று. கர்த்தருடைய வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் உன்னைப் பிடித்தது. நீ பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே கர்த்தருடைய பிரமாணங்கள் உனக்குக் கீதங்களாயின. இராக்காலத்தில் கர்த்தருடைய நாமத்தை நினைத்து, அவரது வேதத்தைக் கைக்கொள்ளுவாயாக. நீ கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது உனக்குக் கிடைத்தது. கர்த்தரே உன் பங்கு, நீ அவரது வசனங்களைக் கைக்கொள். முழு இருதயத்தோடும் கர்த்தருடைய தயவுக்காகக் கெஞ்சு. அவரது வாக்கின்படி உனக்கு இரங்குவார். உன் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, உன் கால்களை அவருுடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பு. அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நீ தாமதியாமல் தீவிரி. சங்கீதம் 119 :51-60

No comments:

Post a Comment