Wednesday, 31 August 2016

சங்கீதம் 116 :1-9

கர்த்தர் உன் சத்தத்தையும் உன் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூரு. அவர் தமது செவியை உனக்குச் சாய்த்தபடியால், நீ உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள். மரணக்கட்டுகள் உன்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் உன்னைப் பிடித்தது, இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தாய். அப்பொழுது நீ கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சு. கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார், நீ மெலிந்துபோனாய், அவர் உன்னை இரட்சித்தார். உன் ஆத்துமா! கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், அதின் இளைப்பாறுதலுக்குத் திரும்பட்டும். கர்த்தர்! உன் ஆத்துமாவை மரணத்துக்கும், உன் கண்ணைக் கண்ணீருக்கும், உன் காலை இடறுதலுக்கும் தப்புவித்தார். நீ கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நட. சங்கீதம் 116 :1-9

No comments:

Post a Comment