Monday, 15 August 2016

சங்கீதம் 106 :1-12

அல்லேலூயா, நீ கர்த்தரைத் துதி, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்து. நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள். கர்த்தர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நீ கண்டு, அவருடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, அவருடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, அவருடைய ஜனங்களுக்கு அவர் பாராட்டும் கிருபையின்படி உன்னை நினைத்து, அவருடைய இரட்சிப்பினால் உன்னைச் சந்தித்தருளுவார். அவர்கள் பிதாக்களோடுங்ளோடுங்கூட அவர்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினார்கள். அவர்கள் பிதாக்கள் எகிப்திலே அவருடைய அதிசயங்களை உணராமலும், அவருடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள். ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று, வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது, அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். சங்கீதம் 106 :1-12

No comments:

Post a Comment