Saturday, 17 December 2016

நீதிமொழிகள் 14 :22-28

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்: வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு: அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை: ஜனக்குறைவு தலைவனின் முறிவு. நீதிமொழிகள் 14 :22-28

No comments:

Post a Comment