Monday, 12 December 2016

நீதிமொழிகள் 13 :9-17

நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம். அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்: ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்: கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்: விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்: கற்பனைக்கு பயப்படுகிறவனோ பலனடைவான். ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று: அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;. நற்புத்தி தயையை உண்டாக்கும்: துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்: மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்: உண்மையுள்ள ஸ்தானாதிபதியோ ஒளஷதம். நீதிமொழிகள் 13 :9-17

No comments:

Post a Comment