Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 10 :20-26

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி: துன்மார்க்கனுடைய மனம் அற்ப விலையும் பெறாது. நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். தீவினை செய்வது மூடனுக்கு விளையாட்டு: புத்திமானுக்கோ ஞானம் உண்டு. துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்: நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும். சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்: நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன் பற்களுக்கு காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். நீதிமொழிகள் 10 :20-26

No comments:

Post a Comment