Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 11 :9-16

@@@@@@ மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்: நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்: துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்: துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்: புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெறிப்படுத்துகிறான்: ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்;: அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்: பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். நீதிமொழிகள் 11 :9-16

No comments:

Post a Comment