Saturday, 17 December 2016

நீதிமொழிகள் 14 :15-21

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்: மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். முற்கோபி மதிகேட்டைச் செய்வான்: துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு. பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்: தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். நீதிமொழிகள் 14 :15-21

No comments:

Post a Comment