Wednesday, 14 December 2016

நீதிமொழிகள் 14 :1-7

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள். நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு: ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்: காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்: பொய்ச்சாட்சிக் காரனோ பொய்களை ஊதுகிறான். பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும். மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ: அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். நீதிமொழிகள் 14 :1-7

No comments:

Post a Comment