Tuesday, 13 December 2016

நீதிமொழிகள் 13 :18-25

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது: தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்: மூடருக்குத் தோழனோ நாசமடைவான். பாவிகளை தீவினை தொடரும்: நீதிமான்களுக்கோ நன்மை பயனாக வரும். நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்: நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. பிரம்பைக் கையாடாதவன் தன்மகனைப் பகைக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்: துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும். நீதிமொழிகள் 13 :18-25

No comments:

Post a Comment