Friday, 9 December 2016

நீதிமொழிகள் 12 :15-21

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்: ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி. சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு: ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம். சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்: பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும் தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்: சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம். நீதிமானுக்கு ஒரு கேடும் வராது: துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள். நீதிமொழிகள் 12 :21

No comments:

Post a Comment