Tuesday, 26 July 2016

சங்கீதம் 94 :5-7,15-23

துன்மார்க்கர், கர்த்தருடைய ஜனத்தை நொறுக்கி, அவரது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். நியாயம் நீதியினிடமாகத் திரும்பும், செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். துன்மார்க்கருக்கு விரோதமாய் கர்த்தருடையபட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் கர்த்தருடையபட்சத்தில் நிற்பவன் யார்? கர்த்தர் உனக்குத் துணையாயிராவிட்டால், உன் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். உன் கால் சறுக்குகிறது என்று நீ சொல்லும்போது, கர்த்தருடைய கிருபை உன்னைத் தாங்குகிறது. உன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், கர்த்தருடைய ஆறுதல்கள் உன் ஆத்துமாவைத் தேற்றுகிறது. தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். கர்த்தரோ உனக்கு அடைக்கலமும், உன் தேவனும் நீ நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார், நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார். சங்கீதம் 94 :5-7,15-23

No comments:

Post a Comment