Monday, 25 July 2016

சங்கீதம் 94 :1-4,8-14

நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர், பிரகாசிப்பார். பூமியின் நியாயாதிபதி, எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளிபார். துன்மார்க்கர் எது வரைக்கும் மகிழ்ந்து, எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? எதுவரைக்கும் ஜனத்தில் மிருககுணமுள்ளவர்கள், உணர்வடையார்கள், மூடர், எப்பொழுது புத்திமான்களாயிருப் இருப்பார்கள்கள்? காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? ஜாதிகளைத் தண்டிக்கிறவர்கடிந்து கொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். கர்த்தர், துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, சிட்சித்து, கர்த்தருடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். சங்கீதம் 94 :1-4,8-14

No comments:

Post a Comment