Tuesday, 19 July 2016

சங்கீதம் 89 :1-10

கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடு், கர்த்தருடைய உண்மையைத் தலைமுறை தலைமுறையாக உன்வாயினால் அறிவிப்பாயாக கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும், கர்த்தருடைய உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பார். கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைப் பண்ணி, அவர் தாசனாகிய தாவீதை நோக்கி: என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். வானங்கள் கர்த்தருடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய உண்மையும் விளங்கும். ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சேனைகளின் தேவனாகிய கர்த்தரைப் போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? அவருடைய உண்மை அவரைச் சூழ்ந்திருக்கிறது. தேவன் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர், அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறார். கர்த்தர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினார். அவரது வல்லமையான புயத்தினால் அவருடைய சத்துருக்களைச் சிதறடித்தார். சங்கீதம் 89 :1-10

No comments:

Post a Comment