Wednesday, 20 July 2016

சங்கீதம் 89 :11-17

வானங்கள் கர்த்தருைடையது, பூமியும் அவருடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் அவரே அஸ்திபாரப்படுத்தினார். வடக்கையும் தெற்கையும் அவரே உண்டாக்கினார், தாபோரும் எர்மோனும் அவருடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கிறது. அவருக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது, அவருடைய கரம் பராக்கிரமமுள்ளது, அவருடைய வலதுகரம் உன்னதமானது. நீதியும் நியாயமும் அவருடையது சிங்காசனத்தின் ஆதாரமும், கிருபையும், சத்தியமும் அவருக்கு முன்பாக நடக்கும். கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள், அவர்கள் அவருடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். அவர்கள் அவருடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, அவருடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். கர்த்தரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறார், அவருடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும். சங்கீதம் 89 :11-17

No comments:

Post a Comment