Friday, 15 July 2016

சங்கீதம் 83 :1-18

தேவன், மவுனமாயிருக்கமாட்டார், பேசாமலிருக்கமாட்டார், சும்மாயிருக்கமாட்டா். இதோ, அவருடைய சத்துருக்கள் கொந்தளித்து, அவருடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். அவரது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, அவரது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமல் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும், ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, அவருக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அசீரியரும் அவர்களோடேகூடக்கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச்செய்வார் அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்குவார். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள். அவர்களைச் சுழல் காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்குவார். நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும அவரது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, அவரது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். கர்த்தர், அவர்களை அவரது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடுவார் யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்கள். சங்கீதம் 83:1-18

No comments:

Post a Comment