Saturday, 23 July 2016

சங்கீதம் 92:1-15

கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரின் நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், பத்துநரம்பு வீணையினாலும், தம்புறாவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே அவரது கிருயையையும், இரவிலே அவரது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். கர்த்தர், அவரது செய்கைகளால் உன்னை மகிழ்ச்சியாக்கினார், அவரது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடு. கர்த்தருடைய கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! அவரது யோசனைகள் மகா ஆழமானவைகள். மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான். துன்மார்க்கர் புல்லைப்போல தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறார். கர்த்தருடைய சத்துருக்கள் அழிவார்கள், அவரது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள், சகலஅக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். கர்த்தர் உன் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவார் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுவாய். உன் சத்துருக்களுக்கு நேரிடுவதை உன் கண்கள் காணும், உனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை உன் காது கேட்கும். நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் அவர்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், உன் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, உன் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பாய். சங்கீதம் 92 :1-15

No comments:

Post a Comment