Saturday, 16 July 2016

சங்கீதம் 84 :1-12

சேனைகளின் கர்த்தருடைய வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! உன் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கட்டும், உன் இருதயமும் உன் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடட்டும். உன் ராஜாவும் உன் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தருடைய, பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்தது. அவருடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் அவரைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். அவரிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள், மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். சேனைகளின் தேவனாகிய கர்த்தர், உன் விண்ணப்பத்தைக் கேட்பார், யாக்கோபின் தேவன், செவிகொடுப்பார். உன் கேடகமாகிய தேவன், கண்ணோக்கமாயிருப்பார், அவர் அபிஷேகம் பண்ணின உன் முகத்தைப் பார்ப்பார். ஆயிரம் நாளைப்பார்க்கிலும் அவரது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் உன் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள். உன் தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். சேனைகளின் கர்த்தரை, நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 84 :1-12

No comments:

Post a Comment