Saturday, 11 November 2017

சங்கீதம் 114:1-.8

@@@@@

இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

யூதா கர்த்தருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் கர்த்தருக்கு ராஜ்யமுமாயிற்று.

கடல் கண்டு விலகி ஓடிற்று, யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

கர்த்தர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

ஆகையால் கடல் விலகியோடுகிறது, யோர்தான் பின்னிட்டுத் திரும்புகிறது, 

மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறது, 

பூமி ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிருகிறது

சங்கீதம் 114:1-.8

@@@@@@@@@@@@@@

No comments:

Post a Comment