@@@@@@
கர்த்தர் அவரது கிருபையினிமித்தமும், அவரது சத்தியத்தினிமித்தமும், அவருடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணுவார்.
நம்முடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்லுகிறார்கள்.
நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார், தமக்குச் சித்தமானயாவையும் செய்கிறார்.
புறஜாதிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது, அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது, அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது, தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்களும் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு, அவரே உனக்குத் துணையும், கேடகமுமாயிருக்கிறார். சங்கீதம் 115:1-9
@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment