Sunday, 31 May 2020

Christian Missionary History Tamil Part 9

பிறந்த நாள்: ஆகஸ்ட் 3 - 1949

பிறந்த ஊர்: சூசைபட்டி, மதுரை

பெற்றோர் வேலை: விவசாயம்

படித்தது: 12ம் வகுப்பு (PUC)

பின்பு வேதாகம கல்லூரியில் இணைந்து கத்தோலிக்க போதகருக்கான படிப்பை தொடர்ந்தார்.

படித்த பள்ளி: செயின்ட் மேரீஸ் உயர் நிலைப்பள்ளி, மதுரை

பார்த்த வேலை: கத்தோலிக்க பாதிரியார்

பார்க்கிற வேலை: இயேசு கிறிஸ்துவின் ஊழியன்

கத்தோலிக்க பாதிரியாரான வருடம்:1974

இரட்சிக்கப்பட்ட வருடம்:1983

யார் மூலமாக?: சகோதிரர் DGS தினகரன் அவர்கள்.

வெளியிட்டுள இசைத்தட்டுகள்: 50க்கும் மேல் பாடல்கள்: 350 கும் மேல் மொழிகள்: தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், சிங்களம் (இவர் பாடல்கள் பலரால் பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)

இசை ஞானம்: தேவன் கொடுத்த வரம்

இருக்கும் இடம்: காளையர் கோயில், சிவகங்கை மாவட்டம்

திருமணம்: இல்லை

சொந்த நிலம்: இல்லை...

இருக்கும் இடம் காளையார்கோவில் பகுதி மக்கள் ஊழியத்திற்காக கொடுத்தது 5 ஏக்கர் நிலம்.

இடத்தின் பெயர்: ஜெபத்தொட்டம் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஓர் நபர். அவரை குறித்த நண்பர் ஒருவரின் சாட்சி....

2009ம் ஆண்டு மலேசியா தேசத்திற்கு சென்ற பொழுது அங்கொரு மேதடிஸ்ட் ஆலயத்தில் ஆராதனையை முடித்த பின்னர் ஓர் சபை அங்கத்தினர் (தமிழர்) எங்களை தங்களுடைய வாகனத்தில் கூட்டிக்கொண்டு போனார். அவர் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். மனைவி, பிள்ளைகள் கைவிட்ட நிலைமையில், வருமானம் சரியாக இல்லாததால் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தன் காரை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் ஓட்டினார். அப்போது யாரோ ஒருவர் கொடுத்த பெர்க்மான்ஸ் ஐயா பாட்டு இசைத்தட்டு தட்டுபட்டது. அதில் உள்ள பாடலை கேட்க ஆரம்பித்தார். "விண்ணபத்தை கேட்பவரே, என் கண்ணீரை காண்பவரே" என்கிற பாடலை கேட்டதும் கதறி அழுதார். இயேசுவை தேடினார். கண்டுகொண்டார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. எங்கே ஓர் மூலையில் உள்ள பெர்க்மான்ஸ் ஐயா அவர்களின் பாடல், இன்னொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்து குடும்பத்தை சேர்ந்த, இயேசுவை யார் என்றே தெரியாத நபரை இரட்சிக்கப்பட வைத்ததே.. இவருடைய ஆசை எப்படியாவது இறப்பதற்குள் பெர்க்மான்ஸ் அவர்களை பார்த்து விடவேண்டும் என்பதுதான்.

இன்று குடும்பமாய் இயேசுவை ஏற்றுக்கொண்டு சந்தோசமாய் உள்ளனர். நம்மால் கொடுக்கப்படும் செய்திகள், ஆலோசனைகள் மட்டும் அல்ல.

ஓர் சிறிய பாடல், தேவனை நேசிக்கும் உணர்வோடு நீங்கள் எழுதும் அல்லது பாடும் ஒவ்வொரு பாடலும் ஒரு நபரை தேவனுக்குள் வழிநடத்தும்.

ஒருவேளை ஐயா அவர்களுக்கு இந்நபரை தெரியாமல் இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள பல கோடிக்கணக்கான தமிழ் கிறிஸ்தவர்கள் இவரை மறக்கவே முடியாது. கிறிஸ்தவ கீர்த்தனைகள், பாமாலைகள் போன்ற சிறந்த பாடல்களுக்கு பிறகு ஜிக்கி அம்மா, FMPB பாடல்கள், தினகரன் ஐயா பாடல்கள் என்று பல வந்தன.

இதில் FMPB பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. சகோதரர் பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் சிறப்புற்றது.

இன்று திருச்சபைகளில், ஆலயங்களில், சபைகளில், ஜெபங்களில், கூட்டங்களில், இவருடைய பாடல்கள் இல்லாமல் இல்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டது.

இந்த ஓர் தனி நபருடைய சாதனை விண்ணை தாண்டிவிட்டது. இவரை எடுத்து பயன்படுத்தின கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. யார் இந்த தந்தை பெர்க்மான்ஸ்? இவர் கத்தோலிக்க சபையில், சித்தாந்தத்தில் ஊறிப்போன பெற்றோருக்கு மகனாய் பிரிந்தவர்.

சிறுவயது முதலே தாய்க்கு மிகவும் கீழ்ப்படிந்து நடந்தபடியால் கட்டுகொப்புடன் வாழ்ந்து வந்தார். தன்னை கத்தோலிக்க போதகராக அர்ப்பணித்து கொண்ட இவர். தன்னுடைய படிப்பை கத்தோலிக்க கல்லூரியில் தொடர்ந்தார்.

இசைக்கருவி வாசிப்பதில் மிகவும் தேர்ந்த இவர் வாலிப வயதில் பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பார். கத்தோலிக்க குருப்பட்டத்திற்கு படித்தாலும் பாவ மன்னிப்பு நிச்சயம் பெறாமல் மனம் போன போக்கில் வாழ்ந்தார்.

இவர் நாடகம் போடுவதில் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை மதுரையில் உள்ள ஓர் சிறு கிராமத்தில் இரவு நாடகம் நடந்து கொண்டிருந்தது, வாலிபர் மற்றும் கத்தோலிக்க போதகரான பெர்க்மான்ஸ் தான் ஓர் காதல் இசைவுக்கு ராகம் மீட்டிகொண்டிருந்தார்.

புனிதமாக கருதவேண்டிய போதகருக்கான அங்கியை போட்டு இசை வாசிப்பதை பார்த்த ஓர் வயதான தாயார் பெர்க்மான்சிடம் வந்து

"எயா.. இதற்க்கு தானா சாமியார் ஆனீர்கள்? எஞ்சாமி இந்த கேவலத்திற்க்கா இசை போடுகிறீர்கள்?" என்று வேதனையுடன் கேட்டார். கடவுளே நேராக வந்து பேசினதை போல உணர்ந்தார்.

மனம் நொந்தவராய் நாடகத்தின் பாதியிலேயே ஓடிவிட்டார். தேவன் தெளிவாக பேசுவதை உணர்ந்தார். "நீ பரலோகத்தை காட்ட வேண்டியவன். இந்த அசிங்கத்தை காட்றியேடா? இது உனக்கு வேலையா? என்று தேவன் தன்னுடைய ஊழியத்தை செய்ய அழைத்தார்.

அன்றே ரட்சிக்கபட்டார். 1991 ம் வருடம் கத்தோலிக்க போதக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அதை பற்றி கவலைபடாமல் இன்றும் தேவனுக்காக உழைத்து வருகிறார். இவர் பாடல்களின் விசேஷம் பரிசுத்த வேதாகமத்தை மையமாக வைத்தே பாடல்களை எழுதிவருகிறார். படிக்காத பாமரர் முதல் படித்த மேதைகள் வரை இவர் பாடல்கள் பாடி தேவனை மகிமைபடுத்துகின்றனர். ஒரு முறை எங்கள் ஊழியத்தின் சார்பாக ஆனைகட்டி மலைக்கு சென்றிருந்தோம். அங்கே மலை மேலே ஏறி செல்ல பாதை இல்லை. செடி, மர வேர்களை பிடித்து ஏறினோம். மலை உச்சியில் ஓர் கிறிஸ்தவ சபை. படிப்பறிவே இல்லாத அங்குள்ள மக்கள் சகோதரர் பாடலை பாடி தேவனை ஆராதித்தபோது தேவன் சகோதரர் அவர்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று தெளிவாக அறிந்து கொண்டேன்.

இந்த சாட்சியை படிக்கும் சகோதர சகோதரிகளே.. நீங்கள் தாலந்து படைத்தவராக இருக்கலாம். அதை தேவனுக்கென்று படைக்கும் போது நிச்சயம் தேவன் உங்களை உயர்த்துவார். அவரிடம் உங்களை ஒப்புகொடுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் தேவன் அளிக்கும் மாற்றத்தை உணர்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

தியோடர் வில்லியம்ஸ் (1935-2009)

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 1935 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் நாள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்னும் ஊரில் திரு. ஏசுதாசன், திருமதி. கிரேஸ் தம்பதியினருக்கு பிறந்தார். தியோடர் அவர்களின் தாத்தா ஒரு குருவானவராக ஊழியம் செய்து கொண்டிருந்தார். தகப்பனார் ஒரு ஆசிரியர். ஆகவே மிகவும் பக்தியும் கண்டிப்பும், ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வளர்ந்தார்.

தினமும் காலையில் வேதாகமம் வாசித்து, இரண்டு வசனங்கள் மனப்பாடம் செய்தால்தான் தியோடர் அவர்களின் பெற்றோர்கள் காலை ஆகாரம் கொடுப்பது வழக்கம். இதனால் சிறுவயது முதற்கொண்டே அநேக வேதவசனங்களை மனப்பாடம் செய்திருந்தார்.

இந்நிலையில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 18 வயது இருக்கும்போது 1953 ம் ஆண்டில் சகோ. பகத்சிங் மூலமாக இம்மானுவேல் ஆலயம், சென்னையில் நடைபெற்ற ஒரு எழுப்புதல் கூட்டத்தில், இசையையும் பாடலையும் ரசிப்பதற்காக சென்ற தியோடரை, பிரசங்க நேரத்தில் கர்த்தர் ஊழியத்திற்கு அழைப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் தியோடருடன் தொடர்ந்து கர்த்தர் பேச ஆரம்பித்தார்.

ஆகவே 1954 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் நாள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுங்கொண்டு, கிடைத்த நேரங்களில் எல்லாம் சுற்றியுள்ள கிராமங்களின் திருச்சபைகளுக்கு சென்று சிறுவர்கள் மத்தியில் நற்செய்திபணி அறிவிப்பதிலும் தெருக்களில் நடைபெரும் சுவிசேஷ பணியில் ஈடுபட்டு, ஊழிய அழைப்பில் செயல்பட தன்னை அற்பணித்தார். சென்னையில் இம்மானுவேல் திருச்சபையில் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியராக ஊழியம் செய்தார்.

தியோடர் அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்து பின்னர் முதுகலை பட்டத்தில் புள்ளியியல் துறையில் சிறந்த மாணவராக வந்தார். அப்போது இந்தி மொழியையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தட்டச்சு செய்வதையும் சிறப்பாய் கற்றுக்கொண்டார். அப்போது நடைபெற்ற இந்திய பொதுத்துறை தேர்வையும் சிறப்பா க எழுதினார். இதனால் அரசாங்கத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடி வந்தது. ஆயினும் ஆண்டவருடைய ஊழியத்திற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை நற்செய்திபணி செய்வதற்கு முழுவதுமாய் அற்பணித்தார்.

இந்நிலையில் 1955 ம் ஆண்டு பெங்களூரில் பங்கார்பேப் பகுதியில் இருந்த South Indian Bible Institute என்ற வேதாக கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இறையியல் பாடங்களையும் நன்கு கற்று கொள்ள ஆரம்பித்தார். இறையியல் புத்தகங்கள் வாங்குவதற்காக கல்லூரி நேரம் முடிந்ததும் அங்குள்ள குளியல் அறைகளை சுத்தம் செய்து, கல்லூரி விடுதிக்கு தேவையான மளிகைபொருட்களை வாங்கி தன்படிப்பு செலவை பார்த்துக்கொண்டார். தியோடர் அவர்களின் அறிவார்ந்த புத்திசாலித்தனம் வேதாகம கல்லூரியில் பிரகாசித்தது. வேதாகம படிப்பில் சிறந்து விளங்கினார்.

பின்னர் செராம்பூர் பல்கலை கழகத்தில் 1957 ம் ஆண்டு B.D. படிப்பை 4 ஆண்டுகள் பயின்று வேதாகமத்தை எபிரேயம், கிரேக்கு மொழிகளில் கற்று தேர்ந்து பின்னர் 1961 ம் ஆண்டில் பெங்களூரில் SIBS வேதாகம கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அளவிற்கு சிறந்த வேத பண்டிதராக விளங்கினார்.

தியோடர் வில்லியம் பல திருச்சபைகளுக்கு சென்று வேதபாட வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார். இவருடைய வேதாக ஞானத்தினாலும், வேத போதனைகளினால் அழிந்துவரும் இந்த உலகில் மீட்பரின் தேவை பற்றிய செய்திகள் ஈர்க்கப்பட்ட அநேக வாலிபர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாய் பேசக்கூடிய தாலந்துகளை ஆண்டவர் கொடுத்திருந்ததார். இவருடைய சமரசம் செய்யாத வேதாகம போதனைகள் அநேக படித்த வாலிபர்களின் ஆத்துமாக்களை தூண்டியது. ஆகவே அநேக வாலிபர்கள் மற்றும் யுவதிகள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் 1963 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேத வசனங்களை போதிக்கும் வரத்தை அகில இந்தியாவும் கேட்க செய்யும்படி *வேதத்திற்கு திரும்புவோம்* என்ற பெயரில் வானொலி நிகழ்சி ஆங்கிலத்திலும், தமிழில் *சத்திய வசனம்* என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக ஒலிபரப்பப்பட்டது. இதன் மூலம் இவருடைய வேதஞானம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஆண்டவர் தியோடர் வில்லியம்ஸ் அவர்களை வல்லமையாக பயன்படுத்தினார். பல நாட்டு திருச்சபைகள் அவருக்கு அழைப்பு கொடுத்தது. இதனால் உலகம் முழுவதும் சென்று வேதாகமத்தை பிரசங்கித்ததால் அமெரிக்க வேதாகம கல்லூரி இவருடைய வேத ஞானத்திற்காக முனைவர் என்ற *வேத பண்டிதர்* பட்டமும் கொடுத்து கௌரவித்தது.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் வேத ஞானத்தினால் அநேக ஆவிக்குறிய நண்பர்கள் பலரின் தொடர்பு ஏற்பட்டது. சகோ. சாம் கமலேசன், டேனிஸ்பேட்டை சகோ. P. சாமுவேல் மற்றும் சகோ. பிரட் டேவிட், சேலம் Dr. புஷ்பராஜ், மெஞ்ஞானபுரம் எமில் ஜெபசிங் இவர்களுடன் ஐக்கியம் ஏற்பட்டது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து *நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு* என்ற நற்செய்திபணி இயக்கம் உருவாவதற்கு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் காரணமாய் இருந்தார்கள்.

இந்நிலையில் 1964 ம் ஆண்டில் இந்திய சுவிசேஷ ஐக்கியத்தின் தலைவரா நியமிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியாவில் நற்செய்திபணிக்கு மேலைநாட்டு மிஷனெரிகளையும் அவர்கள் பண உதவியையும் சார்ந்திராமல், உள்நாட்டு மிஷனெரிகள் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மேலூம் நற்செய்தி பணியானது மேற்கத்திய முறைக்கு மாறாக இந்திய முறையில், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட மக்கள் மத்தியிலே ஊழியம் செய்யாமல் கிறிஸ்துவைப் பற்றி அறியப்டாத இடங்களுக்கும் சென்று நற்செய்திபணி செய்யவேண்டும் என்ற அறைகூவல் விடுத்தார்.

இதன் காரணமாக 1965 ம் ஆண்டு மூலம் தனது 30 ம் வயதில் *இந்திய அருட்பணி இயக்கம் (IEM)* என்ற மிஷனெரி இயக்கத்தை சில நூறு ருபாய்கள் மூலமாக மிதிவண்டிகள் வாங்கி, சபை பாகுபாடற்ற நிலையில் அறியப்படாத மக்கள் இனக்கூட்டங்களுக்கு சென்று நற்செய்திபணி அறிவித்தார்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இந்திய அருட்பணி இயக்கத்தில் நான்கு கோட்பாடுகளை மைய்ப்படுத்தினார்.

  1. நற்செய்திபணி செய்தல்,
  2. திருச்சபைகளை நிறுவுதல்
  3. மருத்துவ ஊழியங்கள் மற்றும்
  4. வேதபாட வகுப்புகள் நடத்துதல்

என்ற தரிசனத்தோடு இந்தியா முழுவதும் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தமிழ்நாட்டு திருச்சபைகளில் மிஷனெர்களின் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இதனால் திருச்சபையில் எழுப்புதல் ஏற்பட்டதால், அநேக வாலிபர்கள் தங்களை நற்செய்திபணிக்கு அற்பணித்தார்கள். அநேகர் நற்செய்திபணி செய்யும் மிஷனெரிகளின் தேவைக்காக தியாகத்தோடு கொடுக்க முன்வந்தார்கள். இதன் மூலமாக இந்திய அருட்பணி இயக்கம் பெரிய வளர்ச்சி கண்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் நற்செய்திபணி அறிவிக்க கடந்து சென்றார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் நற்செய்திபணி சிறப்பாக செய்வதற்கு ஏற்ற வாழ்க்கை துணையாக எஸ்தர் என்ற பெண்மணியை 1971 ம் ஆண்டில் ஜூன் 14 ம் நாள் திருமணம் செய்துகொண்டார். மேலும் கணவன் மனைவியாக சேர்ந்து நற்செய்திபணி அறிவிப்பதிலும் சமுதாய சேவை செய்வதிலும் தங்களை அற்பணித்துக்கொண்டார்கள். அநேக ஏழை பிள்ளைகளை படிக்க வைக்க நிதி திரட்டி கல்வி கற்று கொடுக்க உதவி செய்தார்கள்.

இந்நிலையில் பெங்களூரில் 1972 ம் ஆண்டு மெத்தடிஸ்ட் திருச்சபையின் குருவானவராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் பெங்களூரில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *விடுமுறை வேதாகம பள்ளி (VBS)* ஏற்படுத்தினார்கள்.

எஸ்தர் அம்மையார் சிறுபிள்ளைகள் மத்தியில் விடுமுறை வேதாக பள்ளி மாணவர்களுக்கு சுவிசேஷ பணியை செய்வதற்கு ஏதுவாக சிறப்பு பாடதிட்டங்களை பெங்களூரில் உறுவாக்கினார்கள். இதனால் அநேக சிறுபிள்ளைகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு கல்வியிலும் ஒழுக்கத்திலும் வேத அறிவிலும் வளர்ந்தார்கள்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் இரண்டாம் தலைமுறை நற்செய்திபணி செய்யும் தலைவர்களை உறுவாக்குவதற்காக கர்த்தர் கொடுத்த வேதஞானம் முழுவதையும் பயன்படுத்தி அநேகரை சிறந்த வேதாகம வல்லுனர்களையும், நற்செய்திபணியாளர்களையும் உறுவாக்கினார். இவர்களுக்கு வேதத்தை மிகவும் நேர்த்தியாக கற்றுக்கொடுத்து, ஜெபத்திலும், வேத ஞானத்திலும் அநேக நேரம் செலவு செய்து பல வேதாகம பாட புத்தகங்களையும், ஒலி பேழைகளையும் (CD) வெளியிட்டு தரமான திருச்சபை தலைவர்களை உருவாக்கினார்.

இந்நிலையில் 1975 ம் ஆண்டு தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் *இந்தி மிஷனெரி ஐக்கியம்(IMA)* தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால் உலகம் முழுவதும் சென்று இந்திய நற்செய்திபணிகளை குறித்து விளக்கினார். அப்படியே *இந்திய சுவிசேஷ ஐக்கியம் (EFI)* செயலாளராக நியமிக்கப்பட்டு இந்தியாவின் மிஷனெரி இயக்கங்ளிடையே ஐக்கியத்தை பலப்படுத்தி இந்தியாவில் சுவிசேஷம் பல இடங்களுக்கும் செல்வதற்கு சிறப்பாக செயல்பட்டார். மேலும் *உலக சுவிசேஷ ஐக்கியம் (WEF)* தலைமத்துவத்திற்கும் பொறுப்பாய் நியமிக்கப்பட்டு நற்செய்திபணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை பயன்படுத்தினார். இப்படியாக இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம், கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக 39 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய எஸ்தர் தியோடர் அம்மையார் பலவீனத்தின் நிமித்தமாக 2009 ம் ஆண்டு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். இவர்களுடைய இழப்பு தியோடர் வில்லியம்ஸ் அவர்களை பலமாக தாக்கியது. இதனால் ஆறுமாத காலத்தில் 74 ம் வயதில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ம் நாள் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார்.

இந்திய மிஷனெரி இயக்கங்களில் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் போல் முத்திரை பதித்தவர்கள் வெகுசிலரே. ஏனெனில் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கும் மிஷனெரிபணியை செய்வதற்கும் கடவுளால் இந்தியாவில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் ஆவார். இந்தியாவில் இவரைப்போல சிறந்த வேதபண்டிதர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கலப்படம் இல்லாத, ஆதாயத்திற்காக அல்லாத, வேத ஞானத்தை போதித்தார்.

தியோடர் வில்லியம்ஸ் அவர்களை *இந்தியாவின் பில்லிகிரகாம்* என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய நற்செய்திபணியினாலும் வேத ஞானத்தினாலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை உயிர்மீட்சி அடைய செய்தார். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சிறந்த மிஷனெரி இயக்க தலைவர் என்று அறியப்பட்டார். எல்லோராலும் செல்லமாக *அண்ணாச்சி* என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

தியோடர் வில்லியம்ஸ் என்ற ஒரு மிஷனெரி மூலம் ஆரம்பிக்கப்பட்ட *இந்திய அருட்பணி இயக்கம்* இன்று நேப்பாளம், பூட்டான் உட்பட இந்தியாவில் 960 மிஷனெரிகள் நற்செய்திபணி செய்துகொண்டு 116 இன மக்களுக்கு நற்செய்திபணி அறிவித்து, அநேகரை கிறிஸ்துவுக்குள் ஆத்தும ஆதாயம் செய்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் இராஜியத்தை கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இந்திய அருட்பணி இயக்கத்தின் மூலம் 19 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் 34 மொழிகளில் நற்செய்திபணி அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல மருத்துவ மனைகள் அமைத்து சமுதாய சேவைகள் செய்துகொண்டு இருக்கின்றார்கள். 24 விடுதிகள் அமைத்து ஆதிவாசி பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இவைகளுக்கு காரணம் ஒரு மணிதரின் ஆழமான அற்பணிப்பே.

இன்றைக்கு தியோடர் வில்லியம்ஸ் போன்ற அநேக நற்செய்தி பணியாளர்கள் நம்முடைய திருச்சபையில் இருந்து எழும்ப வேண்டும், அதற்காக ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளுக்கு நற்செய்திபணியின் தரிசனத்தையும் கொடுப்போம். ஆமென்.

No comments:

Post a Comment