Thursday, 21 May 2020

சிறுகதை 128-136




128       இங்கே என்ன செய்கிறீர்கள் ? 

ஒரு மிஷனரி துருக்கிக்குச் சென்றார் . மிகவும் கடினமாக உழைத்து , கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முயற்சித்தார் . பன்னிரெண்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாலிபன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு ரட்சிக்கப்பட்டான் .

 ஒரு நாள் அந்த மிஷனரி - சொந்த தேசத்தில் வெளியான ஒரு கிறிஸ்தவப் பத்திரிகையை நன்பனிடம் காட்டிக்கொண்டிருந்தார் . ஆலயம் நிறைய மக்கள் தம் கைகளை உயர்த்தி தேவனைத் துதிப்பதைக் கண்டு அவன் அதிர்ச் சியடைந்தான் . நெஞ்சை உடைக்கும் ஒரு கேள்வியை அவன் மிஷனரியிடம் கேட் டான் . " கோடிக்கணக்கானோர் இங்கே நரகத்திற்குப் போய்க் கொண்டிருந்கும்போது அந்தக் கிறிஸ்தவர்களெல்லாம் தேவனைத் துதித்துக் கொண்டு அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? " 

தேவனுடைய அருமையான பிள்ளையே , மக்கள் இருளில் உட்கார்ந்துகொண்டு , யாராவது தங்களுக்கு ஒளியைக் கொண்டுவர மாட்டார்களா என்று காத்திருக்கும்போது நீ என்ன செய்து கொண் டிருக்கிறாய் ?

 129                    கருப்பு பலூன் 

பலூன்காரர் ஒருவர் பல பல வர்ண பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார் - பச்சை , ஊதா , சிவப்பு , மஞ்சள் . பலவிதமான சிறுவர் , சிறுமியர் பலூன்களை வாங்கிப் பறக்கவிட்டுக் கொண்டி ருந்தனர் . கருத்த சிறுவன் ஒருவன் பலூன்காரரிடம் , கருப்பு பலூனைச் சுட்டிக்காட்டி , “ ஐயா , கருப்பு பலூன்கூடப் பறக்குமா ? " என்று கேட்டான் . பலூன்காரர் , " நிச்சயமாக கருப்பு பலூன்கூடப் பறக்கும் . பலூன் தானாகப் பறப்பதில்லை . அது என்ன நிறமா யிருந்தாலும் அதற்குள் இருக்கும் காற்றுதான் அதைப் பறக்கச் செய்கிறது , " என்றார் . அருமைப் பிள்ளையே , உன் உடல் தோற்றத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாதே . கடவுள் உன்னை நிரப்ப இடமளிப்பாயானால் விண் ணைத் தாண்டிப் பறப்பாய் ! 115

 130                மனதை_கவர்ந்த_மான்...


 ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது. அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு. இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது. அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.


 மான் தன் இடப்பக்கம் பார்த்தது. அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந் தான். 

மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எாிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது. மூன்று பக்கமும் ஆபத்து... அதுவால் எதுவுமே செய்ய முடியாது.  *என்ன நடக்கும்?...* *மான் பிழைக்குமா?...* *மகவை ஈனுமா?...* *மகவும் பிழைக்குமா?...* *இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...* *வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...* *புலியின் பசிக்கு உணவாகுமா?...* பற்றி எாியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிா் புறம். *மான் என்ன செய்யும்?...* 

மான் எதற்கும் கவலைப்படாமல் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.ஒரு உயிரை உலகத்தில் கொண்டு வருவதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்...ஆச்சாியமானது.  மானுக்காக தேவன் செய்த காரியம் 🌑 

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். 🌚

 அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது. 🌚 

தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது. 🌑 

அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது. 

#என்_அன்புக்குாியவா்களே,.. உங்கள் வாழ்விலும், இப்படிபட்ட சந்தா்ப்பங்கள் நிறைய வந்து கொண்டேயிருக்கலாம். அல்லது  இதுவரை இல்லைபென்றால்  இனி மேல் கூட  வரலாம் . அந்த நேரத்தில் பல எதிா்மறை சிந்தனைகள் உங்களைச் சுற்றி நின்று அச்சுறுத்தும். சில எண்ணங்களின் பலம், உங்களை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.

 நீங்கள் இந்த மானிடம் இருந்து கற்றுக்கொள்வது எது?  . அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது தன்னை காப்பாற்றிக்கொள்ள கை வசம் எதையும் வைத்திருக்கவுமில்லை. மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும். இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...

 எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை நம் கா்த்தராகிய இயேசுவிடம் விட்டு விடுங்கள். அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டாா். 

அவா்  தூங்குவதும் இல்லை.. உறங்குவதும் இல்லை அவா் நம்மை காக்கி்றவா் எனவே உங்கள்  செயலில் நீங்கள்  அதிக கவனம் செலுத்துங்கள் .மற்றவை  எல்லாம் நன்மையாகவும் ஆசீா்வாதமாகவுமே நடந்தே தீரும்.

 இயேசு  சொல்கிறாா். .. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே,நான்உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.- ஏசா.41:10 

பைபிள் சொல்கிறது... அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7

 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலானதேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6,7 இந்த வசனங்கள் எல்லாம் உங்கள் வேலையில், படிப்பில் ஊழியத்தில் உங்கள்  சம்பாத்தியத்தில் நீங்கள்  கவனம் செலுத்தி சாதிக்கிறவா்களாய் இருங்கள். உங்களை கவலைக்குள்ளாக்குவதை எல்லாம்  தேவனிடத்தில் விட்டு விடுங்கள்.அவா் எல்லாவற்றையும் பாா்த்துக் கொள்வாா்.  உங்களுக்கு வெற்றியைத் தருவாா்.  பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகி லும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார், அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்  -  சங்.121 : 6 - 8         நீங்கள்ஆசீா்வதிக்கப்பட்டவா்கள்

 131                  ஒரு குழந்தை என்பது 

. அப்படி ஒரு சுதந்திரம் வேண்டுமா நமக்கு ? அப்பப்போ . . . எத்தனை உயிர்கள் பாரதத் தாய்க்குக் காவு கொடுக்கப் பட்டன . மானுட இரத்தம் பாரத மண்ணில் செங்குருதியாய் ஓடியது . சுத்தியின்றி , இரத்தமின்றி சுத்த சுதந்திரம் வாங்கி விட்டோம் என்று வின் பெருமையடித்துக்கொள்ள வேண்டியதுதான் . இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நேரம் இந்து - முஸ்லீம் கலவரம் . எல்லை மின் இருபுறங்களிலுமிருந்து நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள் . துன்பம் நிறைந்த கரிநாட்கள் . உலக வரலாற்றில் கரை படிந்த இருண்ட நாட்கள் . ஒரு நிறை கர்ப்பிணிப்பெண் ஒரு புதர் அருகே வயிற்றுச் சுமையை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடி விடுகிறாள் . அதைப் பார்த்த ஒரு இராணுவ வீரர் உடனே குழந்தையைத் தூக்கிச் சென்று பக்கத்துக் கிராமத்துக்குப் போகிறார் . அது ஒரு இந்துக் கிராமம் . அங்கு ஆண்டுக்கனாக்காக அள்ளி அணைக்க ஒரு குழந்தை இல்லாத பக்கம் நிறைந்த ஒரு தம்பதியர் இருந்தனர் . அந்த இராணுவ வீரரிடம் செழக்கையைக் கொஞ்சிக் கேட்டனர் . ராணுவ வீரர் குழந்தைக் கொடுக்குமுன் , ' ' ஆனால் ஒன்று . அதைச் சொல்லபாட்டேன் என்றார் . பிள்ளை இல்லாத அந்தப் பெற்றோர் பிடிவாத மாகக் கேட்டார்கள் , இராணுவ வீரர் சொன்னார் . இந்தக் குழந்தை ஒரு முஸ்லீமிற்குப் பிறந்த குழந்தை என்றார் . உடனே . அந்த இந்துப் பெண்ணின் மறுபதில் என்ன தெரியுமா ? யார் சொன்னது ? இது கடவுளின் குழந்தை என்று சொல்லி பிள்ளையைப் பிடுங்கி எடுத்து முத்தம் கொடுத்தாள் . இதுபோன்ற மாந்தர் சிலரால் இன்றளவும் மானுட நேயம் நிலைத்து நிற்கிறது . உலகில் தோன்றும் ஒவ்வொரு குழந்தையும் கடவுளின் சிறப்பான செய்தியைத் தாங்கி வருகிறது . ஒரு குழந்தை என்பது கடவுளால் கிடைக்கும் பெரும் பேறு அல்லவா ? “ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் , கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் " ( சங் 27 - 4 ) 

132              ஆசையாய்ப் பறப்பேன்

 அன்று அந்தப் பள்ளியில் நூறாண்டு விழா . மாணவர்களின் பெற்றோர் , உற்றார் , நண்பர்கள் என்று பெருங்கூட்டம் இருக்கும் . பள்ளி கோலாகலமாக அலங்காரம் பெற்றிருந்தது . பலூன் விற்கும் பால்சாமிக்கு ஒரே மகிழ்ச்சி . இன்று விற்பனையில் ஆயிரம் ரூபாய் ஆதாயம் கிடைக்கும் என்று ஆனந்தமாய் சிறகடித்துப் பறந்தார் . பத்தடி உயரமான பெரிய களையில் பல வண்ண பலூன்களை பெரிது பெரிதாக ஊதி தொங்கவிட்டிருந்தார் . பச்சை , சிவப்பு , ஊதா , மஞ்சள் , ஆரஞ்சு , வெள்ளை என்று பல வண்ணங்களில் மாணவர்கள் பலூனைக் கேட்டு வாங்கிச் சென்றார்கள் . சில பலூன்கள் ஆகாய வீதியில் ஆடிப் பறந்தன . பால்சாமி நின்று பலூன் விற்குமிடத்தில் மூன்றடி உயரத்தில் ஒரு குத்துக்கல் இருந்தது . அதன்மீது பிரமு உட்கார்ந்து பலூன் விற்பனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் . பிரமு மூன்றாம் வகுப்புப்படிக்கும் மாணவி . அவள் சுத்தக் கறுப்பு . கறுப்பு என்றால் அண்டங்காக்காக் கறுப்பு . அவளுக்கு சிநேகிதிகளே கிடையாது போலும் . தனியாக உட்கார்ந்து கவலையோடு சிந்தித்துக்கொண்டிருந்தாள் . கறுப்பு நிறமும் ஒரு ஊனம்தான் போலும் . கறுப்பு நிறமும் கீழ்சாதி மாதிரிதான் என்று நினைத்த பலூன் பால்சாமி அவள் மீது இரக்கம் கொண்டார் . ஒரு சிவப்பு பலூனை ஊதி அவளுக்குக் கொடுத்தார் . அவள் வேண்டாம் என்று தலையை பலமாக ஆட்டினாள் . " மாமா உனக்குச் சும்மா இலவசமா தாரேன் , வாங்கிக்கோ பிரமு ” என்றார் கனிவுடன் . “ இலவசம் , பலவேசம் , கைலாசம் , வனவாசம் , சுகவாசம் . . . ” எனக்கு ஒன்றும் வேண்டாம் . இராகம் போட்டுக் கவிதையாகச் சொன்னாள் . அவளிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்த பால்சாமி அவளைக் குறித்து ஆச்சரியப்பட்டார் . அவளிடம் அன்பாகச் பேசினார் . “ பிரமு , உனக்கு ஏதாவது வேண்டுமா ? " “ எனக்கு எதுவும் தேவை இல்லை , ஆனா ஒண்ணு கேக்கணும் . " " 

கேளும்மா " “ மாமா , உங்கட்ட கலர் கலரா பலூன் இருக்கு . . . . . ஆனா , கறுப்பு பலூன் மட்டும் இல்லையே ஏன் ? அது பறக்காதா ? " பால்சாமிக்கு திக் என்றது . " கறுப்புப் பலூனை யாரும் விரும்பி வாங்குவதில்லை ” என்று மனதிற்குள் முணுமுணுத்தவாறு , அவசர அவசரமாக அவரது தோள் பையிலிருந்து இரண்டு கறுப்பு பலூன்களைத் தேடி எடுத்தார் . அவைகளை ஊதி ஒன்றைப் பறக்கவிட்டார் . அது அழகாகப் பறந்தது . 

பிரமு , பிரமிப்போடு பார்த்தாள் . பலூன் போன்று பூரித்துப் பொங்கிச் சிரித்தாள் . “ கறுப்புப் பலூனும் பறக்குமா மாமா ? ” விந்தையோடு வினவினாள் . “ பலூன் பறப்பதற்கு நிறமல்ல , உள்ளே அடைத்த வாயுதான் காரணம் . எந்தப் பலூனும் பறக்கும் . ” “ கறுப்புப் பலூனும் பறக்குமா ? " கண்களை உயர்த்தி , நெற்றியை நிமிர்த்திக் கேட்டாள் . “ சிவப்பு பலூனை விடவும் நல்லாவே பறக்கும் . நீயும் பெரிய பதவிக்கு வந்து நல்லாவே இருக்கமுடியும் ” என்றார் .

 “ ஐய் . . . கறுப்புப் பலூனும் நல்லாப் பறக்கும் . நானும் நல்லாப் பறப்பேன் ” என் குதூகலித்து இரு கைகளையும் விரித்தவாறு “ ஆசையாய்ப் பறப்பேன்  என்று பாடிக்கொண்டே ஓடினாள் பிரமு . 


133        மனம் துள்ளி மகிழ்ந்தான்

 மோகன் நல்ல ஒரு ஊழியக்காரன் . சமூக சேவகன் . கல்லூரி ஒன்றில் அலுவலகப் பணியாளன் . உண்மையும் உத்தமுமான சமூக ஆர்வலன . நண்பகல் இடைவேளையில் , “ நான் மின் கட்டணம் கட்டப்போகிறேன் . வேறு யாருக்காவது கட்டவேண்டுமானால் நான் சேர்த்துக் கட்டி வருகிறேன் " என்று வலியச் சொல்லி மூன்றுபேருக்கு உதவி செய்தான் . தேவையானவர்களுக்குத் தேவையாய் , தேடுகிறவர்களுக்கு ஓடாய் உழைப்பான் . மோகன் பணிபுரியும் கல்லூரி வளாகத்தில் அழகான ஒரு சிற்றாலயம் உள்ளது . அங்குபோய் தினமும் ஐந்து நிமிடங்கள் அமைதலோடு அமர்ந்திருந்து ஆண்டவனை வேண்டுவான் , நன்றி சொல்வான் . அதன்பின்புதான் பணியைத் தொடர்வான் . அன்று நல்ல மழை . சரியான வேளைக்கு வந்ததினால் சிற்றாலயம் செல்ல நேரமில்லை . அன்று முழுவதும் மன உழைச்சலாயிருந்தான் . எதையோ இழந்து விட்டவன் போலிருந்தான் . 

இரவு படுக்கையில் அவனுக்கோர் தரிசனம் கிடைத்தது . நடு இரவில் அவனது அறை முழுவதும் பிரகாசமான வெளிச்சம் ஜொலித்தது . அதிலிருந்து ஒரு மெல்லிய குரல் ஒலித்தது : “ மோகன் , இன்று உன்னில் நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன் . தினமும் ஐந்து நிமிடங்கள் மட்டும் என்னை நினைத்துவிட்டுப் பணிக்குச் சென்று விடுவாய் . ஆனால் இன்று முழுவதும் என்னை நினைத்துக் கொண்டே இருந்தாய் . மோகன் மகிழ்ந்து விம்பினான் . துள்ளி மகிழ்ந்தான் . இறைவழிபாட்டை

 அந்தந்த நாளுக்கு ஏற்றமுறையில் செய்தால் போதும் . “ தேவனுக்கு ஏற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான் ” ( சங் . 51 : 17 ) .

 134                ஆறு அவுன்ஸ் சிறுநீர் ! அமெரிக்காவில் அது ஒரு பெரிய ஏரி , ஜோஷூ என்ற மனிதன் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏரிக்கரையில் நின்று மது அருந்தினான் . பின்பு ஏரிக்குள் சிறுநீர் கழித்தான் . இது யாருக்கும் தெரியாது . ஆனால் அங்கு பொருத்தி இருந்த கேமரா காட்டிக்கொடுத்துவிட்டது . இந்த ஏரித் தண்ணீர்தான் நகர மக்கள் குடிக்க பயன்படுத்தப்படுகிறது . ஒரு மனிதனின் சிறுநீர் பையில் சராசரியாக ஆறு அவுன்ஸ்தான் இருக்கும் . அது ஒன்றும் ஏரித்ண்ணீரை சேதப்படுத்திவிடாது என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர் . எனினும் ' மனக்குரங்கு ' என்று ஒன்று இருக்கிறதே - ஏரி நீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு புதிதாகத் தண்ணீர் நிரப்பினர் . 18 லட்சம் ரூபாய் செலவானது . ஜோஷூவுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது . அவர் கட்டிய அபராதம் 18 லட்சம் ரூபாய் . “ செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக்கெட்டுப்போகப் பண்ணும் . ஞானத்திலும் , கனத்திலும் பேர் பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் ” ( பிர . 10 : 1 ) . இது நடந்தது . 28 . 8 . 2011 . 135                  உயிரான உயிர் சீனாவைச் சேர்ந்த யாங்சன் வயது அறுபத்தாறு . தம் குழுவினருடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றார் . வாஷிங்டன் அருகேயுள்ள மலைப்பகுதியைச் சுற்றிப்பார்க்கும்போது அவர் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார் . மீட்புக்குழுவினர் தொடர்பு கிடைக்கவில்லை . எனவே இரண்டு நாட்கள் மிகவும் அவதிப்பட்டார் . பள்ளத்தாக்கினுள் கடுங்குளிர் . அவரால் குளிரை தாங்கமுடியவில்லை . செத்துப்போய் விடுவோம் என்ற நிலை ஏற்பட்டது . குளிர்காய்வதற்குத் தீ மூட்ட எண்ணினார் . இலைதளைகள் இல்லை . தம்மிடமிருந்த சட்டைகள் , பேண்ட்கள் , துணிகளை ஒவ்வொன்றாக எரிந்து அனல்மூட்டி உயிரைப் பிழைத்தார் . இருந்த துணிமணிகளையெல்லாம் எரித்துவிட்டார் . கடைசியாகக் கத்தை கத்தையான ரூபாய் தாள்களை எரித்தார் . இருநாட்களுக்குப் பிறகு மீட்புக்குழுவினர் வந்து மீட்டனர் . உயிருக்கு முன் பணம் எம்மாத்திரம் . உலக உடைமைகள் அற்பம் ! இது நடந்த து . 20 . 1 . 2012 .


 136.                     யானை அழுதது 

தமிழ் மாநிலத்தில் அப்பொழுது புதுக்கோட்டை ஒரு தனி சமஸ்தானம் . ஒரு குறு நில மன்னனின் ஆளுகைக்குள் இருந்தது . அந்த மன்னனின் லாயத்தில் நிறைய குதிரைகளும் , யானைகளும் இருந்தன . ஒரு யானையின் பாகன் திடீரென்று இதய நோயால் இறந்து போனான் . அவன் அந்த யானையை அதிகமாக நேசித்தவன் . யானையும் தன் எஜமான்மீது உயிரையே வைத்திருந்தது . பாகனின் இறந்த உடலை தூக்கிச் செல்லும்போது யானை கண்ணீர் விட்டு அழுதது , அலறியது . - மூன்று நாட்களாக யானை பட்டினி கிடந்து உண்ண மறுத்தது . எத்தனையோ பேர்வந்து ஊட்டிப் பார்த்தும் முடியவில்லை . வேறு எந்தப் பாகனையும் யானை ஏற்றுக்கொள்ளவில்லை . இந்தச் செய்தி ராஜாவின் நிர்வாக அதிகாரியான திவானுக்குத் தெரியவந்தது . ராஜாவுக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள திவான் மிகுந்த கவலையோடு யானையைப் பார்க்க வந்தார் . அதனால் பொதுமக்களின் பெருங்கூட்டம் கூடிவிட்டது . 

யானை கண்ணீர் உகுத்தவாறு ஆடாமல் , அசையாமல் அப்படியே நின்றது . திவானைச் சுற்றி திரளான ஒரு கூட்டம் திரண்டு நின்றது . திடீரென்று யானை கூட்டத்தைக் கூர்ந்து பார்த்தது . பிளிறியது . நகண்டது . அடிமேல் அடிவைத்து நடந்தது . கூட்டம் விலகியது . அங்குள்ள பெருங்கூட்டத்தினுள் ஓர் எளிய அம்மா , விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள் . அவள் முன்வந்து நின்றது . துதிக்கையால் தலையைத் தொட்டது . வருடியது , பெருமூச்சுவிட்டது . கூட்டம் அதிர்ந்து நடுங்கியது . ஆச்சரியத்தில் விம்மியது .

அந்த ஏழைப்பெண் இறந்துபோன யானைப்பாகனின் மனைவி . திவான் அவளிடம் ஒரு கரும்புக்கட்டைக் கொடுத்து யானைக்குக் கொடுக்கும்படி சொன்னார் . மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்த யானை , அந்த அபலைப் பெண் தந்த கரும்பை உட்கொண்டது . திவான் , அந்த அம்மாவை யானையின் பாதுகாவலனாக - பாகனாக நியமித்தார் .

 யானையின் ஞானத்தை நினைத்த மக்கள் ஆனந்த ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்ந்தனர் . " மாடு தன் எஜமானையும் , கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் , என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது ” ( ஏசா . 1 : 3 ) .

No comments:

Post a Comment