பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.
1019 காரி டென் பூம் 1892 - 1983
மறைவிடம் தந்த மங்கை ( Boldness in Bondage )
" சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு , துன்பத்தை அனுபவிக்கிறேன் ; தேவ வசனமோ கட்டப்பட்டிருக்க வில்லை " ( 2தீமோ . 2 : 9 )
பொதுவாக இளவயதினரின் வாழ்க்கை சவால் நிறைந்ததும் துணிகரச் செயல்கள் மிகுந்ததுமாய்க் காணப்படும் .
ஆனால் காரி டென் பூம் அம்மையாரின் வாழ்க்கையின் நோக்கம் 45 வயதுக்கு மேலேயே செயல்பட ஆரம்பித்தது . தனக்கும் , தனக்கு அன்பான வர்களுக்கும் ஆபத்துண்டாக்கும் வகையில் , தேவ மக்களைக் காப்பாற்றிய இணையற்ற இடத்தைப் காரிடென்பூம் மிஷனெரிகளுக்குள் ஓர் இணையற்ற இடத்தை பெற்றுள்ளார் .
பெற்றோரின் நான்கு பிள்ளைகளில் எல்லோருக்கும் இளையவளாக 1892 ஏப்ரல் 15 ஆம் நாள் காரி இல் பிறந்தார் . 1837 - ல் தன் தாத்தா தொடங்கிய கடையில் தந்தையைப் போலவே கைக்கடிகாரம் செய்யும் கொமிலில் ஈடுபட்டு , நெதர்லாந்து ( ஹாலந்து ) தேசத்தின் முதல் பெண் கைக்கடிகாரம் செய்பவரானார் .
1923 - ல் பெண்கள் சங்கங்கள் உருவாக இவர் உதவினார் . பின்னாட்களில் இது , முக்கோண சங்கம் ( Triangle Club ) என்ற பெயர் பெற்று விளங்கியது . இவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வந்தார் . 48 வயதில்கூட மணமாகாதிருந்தார் .
இவருடைய குடும்பத்தினர் டச்சு மறுமலர்ச்சி சபையின் ( Dutch Reformed Church ) அங்கத்தினர்களாக இருந்தனர் . ஹார்லெம் என்ற இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தபோது இவருடைய தாயார் பக்கவாத நோயினால் மரித்து விட்டார்கள் .
இந்நகரில் பாதிக்கும் மேற்பட்டோர் இவருடைய தந்தைக்கு அறிமுகமானவராக இருந்தனர் . அப்போது ஹாலந்து தேசம் நாஸிகளிடம் ( Nazis ) சரணடைந்திருந்தது . தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த யூத மக்களுக்குத் தற்காலிகமாகத் தங்குமிடம் அளித்த அன்புச் செயல்களில் ஆரம்பித்தது காரியின் ரகசிய டச்சு பூமிக்கடி பணி .
ஒரு நாள் மிடுக்கான உடையணிந்திருந்த ஒரு பெண்மணி கையில் ஒரு கைப்பெட்டியுடன் டென்பூம் அவர்களின் இல்லத்திற்கு வந்தார் . அவர் ; தான் ஒரு யூதப் பெண் எனவும் , " பல மாதங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டுவிட்டார் என்றும் தனது மகன் மறைவிடத்திற்கு சென்றுவிட்டான் என்றும் கூறினார் . நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் தனது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் , தான் தன் வீட்டிற்குத் திரும்பிப் போக பயப்படுவதாகவும் கூறி , காரியின் குடுபத்தினருடன் தாம் தங்கியிருக்க அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் . அவர்களும் சம்மதித்தனர் . விரைவில் டென் பூம் இல்லம் டேஷ்யூபிலட்ஸ் ( Deschuilplaats ) அல்லது மறைவிடம் ( Hiding Place ) எனப்பெயர் பெற்றது
. இவ்வாறு அடைக்கலம் புகுந்தோருக்கு கிராமப்புறத்தில் தங்கும் இடங்களை காரி கண்டுபிடித்தார் . ஒன்றரை ஆண்டுகளில் ஹாலந்து முழுவதும் பரவி செல்லக் கூடிய பூமிக்கடி சுரங்கம் இல்லம் ஒரு மையமாக மாறிவிட்டது . தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யூதருக்காக மரிப்பதைத் தனது குடும்பத்தின் மிகப் பெரிய மேன்மையாக கருதுவதாகக் இவரது தகப்பனார் தெரிவித்தார் .
1944 பிப்ரவரி 28 அன்று நாஸிகளுக்கு ரகசிய தகவல் தருபவர் ஒருவர் யூதருக்கு உதவுபவர் போல் நடித்துக் கொண்டு காரியின் கடிகார கடைக்கு வந்தார் . காரி அவருக்கு உதவி செய்ய சம்மதித்தார் . அவனோ காரி அறியுமுன்னே கெஸ்டப்போ ( Gestapo ) என்ற ரகசிய காவல் துறையிடம் டென்பூம் குடும்பத்தினரைக் காட்டிக் கொடுத்துவிட்டான் . அவர்கள் காரியின் இல்லத்திற்கு வந்து காரியையும் , அவரது குடும்பத்தினரையும் கைதுசெய்தனர் . காரியின் தகப்பனார் காஸ்பர் ( Gasper ) தான் கைதான பத்து நாட்களுக்குள்ளே ஷெனிஜென் ( Schenenigen ) சிறையில் மரித்துவிட்டார் .
காரியும் அவரது சகோதரி பெட்ஸியும் 10 மாதங்களில் உமன்று வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர் . அவர்கள் கடைசியாக வைக்கப்பட்டிருந்தது மிகவும் கொடூரமான ரேவன்ஸ்ப ர்க் ( Ravenbruck ) என்ற சித்திரவதை முகாம் . சிறையிலிருந்த நாட்களில் இவர்கள் முறுமுறுப்பதற்குப் பதிலாகத் தங்களுடன் இருந்த கைதிகளுக்கு இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொண்டனர் . காரி சகோதரிகள் பகிர்ந்த சாட்சியின் நிமித்தமாக அநேக பெண்கள் கிறிஸ்துவிடம் வந்தார்கள் .
பெட்ஸி தனது 59 ஆம் வயதில் வியாதிப்பட்டு . ரேவன்ஸ்ப ர்க் முகாமில் மரித்தார் .
சித்திரவதை ( Concentration Camp ) முகாமிற்குள் ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டிருந்த வேதப் புத்தகத்தை பயன்படுத்தி நடத்திய ஒரு மாலை நேர ஆராதனை பின்வருமாறு அமைந்தது எனக் காரி எழுதுகிறார் :
" துவக்கத்தில் பெட்ஸியும் நானும் இந்தக் கூட்டங்களை மிகுந்த பயத்துடன் நடத்தினோம் . ஆனால் ஒவ்வொரு இரவும் செல்லச் செல்ல ஒரு காவலாளியும் அருகில் வராதிருந்தபடியால் அதிக தைரியம் கொண்டோம் . மேலும் , பலர் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பியதால் . மாலை நேர பெயர்ப் பட்டியல் பதிவுக்குப் பின் இரண்டாவது ஆராதனையை ஆரம்பித்தோம் .
இந்த இராணுவ சிறை முகாம் 28 - ல் நடைபெற்ற இந்த ஆராதனை மற்ற ஆராதனைகள் போன்றவை அல்ல . ஒரே கூடுகையில் மரியாள் ஆண்டவரை உயர்த்திப் பாடும் பாடலை ( Magnificat ) ரோமன் கத்தோலிக்கக் குழுவினர் லத்தீன் மொழியில் பாடுவார்கள் : லுத்தரன் குழுவினர் ஒரு பாமாலைப் பாடலை மெல்லிய குரல ல் பாடுவார்கள் : கிழக்கத்திய பாரம்பரிய சபைப்பெண்கள் ( Eastern Orthodox Women ) ஒரு ஜெபத்தைச் சொல்லுவார்கள் . ஒவ்வொரு வினாடியும் எங்களைச் சுற்றிலும் உள்ள கூட்டம் பெருகிப்பெருகி , அருகிலுள்ள நடை பாதைகளிலும் அவைகளின் ஓரங்களிலும் மக்கள் நிற்பார்கள் " . “ இறுதியாக , நானோ அல்லது பெட்ஸியோ வேதத்தை திறப்போம் ஹாலந்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே டச்சு மொழி வேத வாக்கியங்களை புரிந்துகொள்ள முடியும் . ஆகவே , வேத வாக்கியங்களைச் சத்தமாக ஜெர்மன் மொழியில் மொழி பெயர்ப்போம் . அதன் பின் ஜீவன் தருகிற வேத வாக்கியங்கள் பிரஞ்சு , போலந்து , ரஷிய , மற்றும் செக்கோஸ்லாவாகியா மொழிகளில் மொழிபெயர்க்கப பட்டு , இறுதியில் டச்சு மொழியில் மறுபடியும் சொல்லப்படும் . சிறிய விளக்குகளின் கீழ் நடைபெற்ற இந்த மாலை நேரக் கூட்டங்கள் பரலோகத்தின் முன்னோட்ட அனுபவங்களாகக் காணப்பட்டன . "
1944 ஆம் ஆண்டு டிசம்பா 16 ஆம் நாள் பெட்ஸி இறக்கும்போது தன் சகோதரி காரியிடம் அவள் கூறிய இறுதி வார்த்தைகள் : " நாம் இங்கு கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் இந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கின் அனுபவத அவரது வயதையொத்த பெண்கள் எல்லாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இது நடந்தது
அவா ஹாலம் ஊருக்குத திருமபிச சென்று தான முன் செய்து வந்தபடியே கைக்கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட முயன்றார் . ஆனால அது முன்போல தனக்கு திருபதி அளிக்கவிலலை எனபதைக பாடுகொண்டார் . அவரது 53 வது வயதில் உ மேற்கொண்டு , அடுத்த 33 ஆண்டுகள் உ வயதில் உலகளாவிய ண்டுகள் உலகெங்கிலும் பது . இயேசுவே ஜெயம் 60 நாடுகளுக்கும் மேலாகப் பயணம் பதியைப் பறைசாற்றினார் . பெற்றவர் என்கிற நற்செய்தியைப் பறைசாற்றி ராணி காரிக்கு நைட் ( Knight ) பட்டம் பலப்படுத்தினார் . எருசலேமிலுள்ள “ யூதர்களின் ஹாலந்தின் ராணி காரிக்கு நைட் கொடுத்து கௌரவப்படுத்தினார் . எருசலேமிலுள் பேரழிவு அருங்காட்சியகத்தில் ” ( The Holocaust M he Holocaust Museum in alem ) உள்ள நீதியின் தோட்டத்தில் ( Garden a Righteousness ) காரியின் குடும்பத்தார் காப்பாளர்களின் நினைவாக ஒரு மரத்தை நடும்படியாக காரி கேட்டு : கொள்ளப்பட்டார் . காரி எழுதிய மிகவும் பிரசித்தி பெண் " மறைவிடம் " ( The Hiding Place ) என்ற நூலை “ த வேர்ல்டு வைடு பிக்சர்ஸ் ” நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்தது . 1972 - ஆம் ஆண்டு “ கைடு போஸ்ட் " ( Guide Post ) என்று பத்திரிக்கையில் “ நான் இன்னமும் மன்னிப்பதற்குக் கற்றுக் கொண்டு வருகிறேன் " என்ற கட்டுரைளுவெளிவந்தது . அதில் மியூனிச் நகரிலுள்ள ஓர் ஆலயத்தில் காரி தான் முன்பு அறிந்திருந்த ஒரு மனிதனை சந்தித்ததைப் பற்றி எழுதியிருந்தார் . “ அவனது தலை வழுக்கை விழுந்திருந்தது . திடகாத்திரமான உடலைப் பெற்ற அவன் சாம்பல் நிற மேற்சட்டை அணிந்திருந்தான் . அது 1947 ஆம் ஆண்டு நான் ஹாலத்திலிருந்து தோற்கடிக்கப்பட்டிருந்த ஜெர்மனிக்கு “ தேவன் மன்னிக்கிறார் " என்ற நற்செய்தியோடு சென்றிருந்தேன் . அந்த மனிதன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன் . ஒரு வினாடி நான் அவனது மேற்சட்டையையும் மர நிறத் தொப்பியையும் கண்டேன் ; ஆனால் அடுத்த வினாடி நீலநிறச் சருடை 381 5 % 5 10 : 58 PM குறுக்கான இரு எலும்புகள் மற்றும் மண்டை ஓடு சின்ன பொறிக்கப்பட்ட இராணுவத் தொப்பியும் என் கண்களுக்குத் தெரிந்தன . ஆம் , நாங்கள் அனுப்பப்பட்டிருந்த ரேவன்ஸ்பர்க் சித்திரவதை முகாமில் அவன் காவலனாக இருந்தவன் " அவன காரியிடம் வந்து ,
தன் கரத்தை நீட்டி , மன்னிப்பு வேண்டினான் . தான் செய்ய வேண்டிய மிக மிகக் கடினமான காரியத்தைக் குறித்து தனது உள்ளத்தில் இருந்த போராட்டத்தைக் காரி உணர்ந்தார் . " இயேசுவே உதவி செய்யும் " என்று கார் மௌனமாக ஜெபம் செய்தார் . “ என் கரத்தை நான் உயர்த்த முடியும் . எனக்கு வேண டிய உணர்வுகளை நீர் தாரும் " என்று ஜெபம் செய்து , காரி தன் கரத்தை உயர்த்தி அவனது கரத்தைப் பற்றிக் கொண்டார் .
தேவனின் அன்பு மின்சாரம் போல் அவருடைய தோளில் ஆரம்பித்து . கரத்தின் வழியாகப் பாய்ந்தோடி அவர்கள் இருவரது இணைந்த கரங்களுக்குள் ஊடுருவிச் சென்றது .
காரி கண்ணீ ருடன் , “ சகோதரனே நான் உன்னை என் முழு இருதயத்தோடு மன்னிக்கிறேன் ! ” என்றாள் . இந்த அளவிற்கு தேவனுடைய அன்பை ஆழ்ந்தவிதத்தில் அதற்கு முன் ஒருபோதும் தான் உணர்ந்ததில்லை என அவர் குறிப்பிடுகிறார் .
காரி 1983 ஏப்ரல் 15 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சுப் பட்டணத்தில் தனது 91 வது பிறந்த நாள் அன்று இப்பூவுலகை விட்டுக் கடந்து சென்றார் .
இதனால் யூதப் பாரம்பரியப்படி அவர் ஆசீர்வதிக்கப்பட்ட நபர் எனக் கருதப்படுகிறார் . பிறருக்காகவே வாழும் வாழ்க்கை கிறிஸ்துவின் போதனை களுக்கு ஓர் சாட்சியாக உள்ளது . காரி டென் பூம் சுவிசேஷத்தைப் பறைசாற்றியது மட்டுமல்ல , அவரது மரணம்வரை சுவிசேஷத்தை வாழ்ந்து காட்டினார் . கடினமான சூழ்நிலைகளிலும் அவரிடம் காணப்பட்ட தைரியம் , நமது விசுவாசத்தைப் பலப்படுத்தி நமக்குப் புத்துணர்வளிக்கின்றது .
No comments:
Post a Comment