பல மிஷனரிகள் தங்கள் உயிரை துச்சமாய் எண்ணி இயேசுவின் அன்பை அறிவிக்கும் ஆவலுடன் தமக்கு நேர்ந்த எல்லா பாடுகளையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். அப்படிப்பட்ட மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாகும். சிறிது நேரம் செலவழித்தால் ஒரு மிஷனரியின் அறிய வாழ்க்கையை அறிந்து கொள்ளலாம். கர்த்தர் துணை செய்வாராக.
1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
பொங்கிவழியும் அன்பு ( Love Overflowing ) "
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ , அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் " . ( மத் . 25 : 40 )
பண்டைக்காலமுதல் இந்தியா ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தைக் கொண்டது ; ஒரு பெண் தனது உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவது என்பது கனவாகவே இருந்து வந்தது . பெண்களுக்கும் சம உரிமை அளித்த கர்த்தர் இயேசுவைப் பின்பற்றி , இந்தியாவில் பெண்களின் மேம்பாட்டுக்காக முன்னோடியாக நின்று பாடுபட்டவர் பண்டித இராமாபாய் .
பண்டித இராமாபாய் 1858ஆம் ஆண்டு கர்நாடிய மாநிலத்திலுள்ள மங்களூர் மாவட்டத்தில் ஒரு வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் . அவரது தகப்பனார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உயர்குல இந்து மதத்தைச் சார்ந்தவர் . பக்தி நிறைந்த இந்தக் குடும்பம் புண்ணியத் தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று அங்குள்ள புனித நதிகளில் நீராடி வந்தனர் . அவரது தகப்பனார் ஆனந்த சாஸ்திரி இந்து மத சொற்பொழிவுகளை நடத்தி வந்ததோடு , தனது மனைவிக்கும் . மகள் இராமாபாய்க்கும் வேதங்களைக் கற்றுக் கொடுத்தார் . பெண்களான தன் மனைவிக்கும் . மகளுக்கும் வேதங்களைக் கற்றுக் கொடுத்தபடியால் பிராமண மதவாதிகளால் அவர் உபத்திரவப்படுத்தப்பட்டார் . மிகுந்த தான தர்மங்களைச் செய்ததினால் இந்தக் குடும்பம் தனது செல்வங்களையெல்லாம் இழந்தது . விரைவில் தேசத்தில் ஒரு பஞ்சம் உண்டாயிற்று . அவர்கள் பல இடங்களுக்குச் சென்று , வேதங்களை உபதேசித்து அதினால் கிடைத்த தர்மம் மற்றும் காணிக்கைகளை வைத்துத் தங்கள் வாழ்க்கையை நடத்தினர் . ஆயினும் . இராமாபாயின் தாய் . தகப்பனார் மற்றும் சகோதரி பட்டினியால் மரித்துப் போனார்கள் . இராமாபாயும் அவரது சகோதரனும் மாத்திரம் தப்பிப் பிழைத்து , பல மைல்கள் கால்நடைப்பயணம் செய்து ,
இறுதியில் 1878 - ல் கல்கத்தா நகரம் சென்றடைந்தனர் . அங்கு இராமாபாய் சமஸ்கிருத மொழியில் சரளமாகச் சொற்பொழிவுகளை நடத்துவதைக் கண்ட சமஸ்கிருத பண்டிதர்கள் மிகவும் வியப்படைந்து , அவருக்குப் “ பண்டிதை " என்ற பட்டத்தை அளித்து கனப்படுத்தினர் . கல்கத்தா நகரில் சில கிறிஸ்தவ விசுவாசிகளோடு ஏற்பட்ட தொடர்புகளினால் இராமாபாய் கிறிஸ்தவ ஆராதனை மற்றும் ஊழியத்தினால் ஈர்க்கப்பட்டார் . அவருக்கு 22 வயதானபோது நன்கு கல்வி கற்ற ஒரு வங்காள மனிதரை மணந்தார் . வழக்கறிஞராயிருந்த அவர் இராமாபாய் கிறிஸ்தவத்தில் கொண்டிருந்த ஆர்வத்துக்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார் . திருமணமான இரண்டாண்டுகளில் அவர் காலரா நோயினால் மரித்துப் போனார் .
பிறகு இராமாபாய் தன் கைக்குழந்தை மனோரமாவுடன் பூனாநகரத்திற்குச் சென்றார் . திரு . ஆலன் என்ற பாப்திஸ்து சபை மிஷனெரி அவருக்கு கிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஆதியாகமபுத்தகத்திலுள்ள படைப்பின் வரலாற்றையும் கற்றுக் கொடுத்தார் . தான் படித்த வேத நூல்களினின்று இது முற்றிலும் வேறுபட்டதாயிருக்கக் கண்ட இராமாபாயின் இருதயத்தில் பரிசுத்த வேதத்தைக் குறித்து ஓர் ஆர்வம் உண்டானது .
ஹர்போர்டு என்ற மற்றொரு மிஷனெரி இராமாபாய்க்கு ஒரு மராத்திமொழி புதிய ஏற்பாட்டைக் கொடுத்தார் . அதை அவர் வாசித்தார் . இந்து மத நம்பிக்கையில் பெண்கள் இழிவான படைப்புகளாக நடத்தப்பட்டதை அறிந்த இவர் பெண்கள் மேம்பாட்டுக்காகப் போராடுவதற்குத் தனக்கு இன்னும் கல்வியும் பயிற்சியும் அவசியம் என்பதை உணர்ந்தார் .
எனவே 1883ஆம் ஆண்டு இராமாபாய் இங்கிலாந்திற்குச் சென்றார் . அங்கு ஆங்கிலிக்கன் திருச்சபையின் சகோதரிகள் ( Sisters of the Church of England ) செய்து வந்த சேவைகளைப் பார்க்க அவர்களது பல்வேறு மையங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார் . வாழ்க்கையில் சீரழிந்த , நலிந்து போன பெண்கள் நடுவில் செய்யப்பட்ட சேவைகள் இராமாபாயை மிகவும் கவர்ந்தன .
அதன் பிறகு 1886ஆம் ஆண் 28வர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சென்றார் . கிறிஸ்தவ சமயக்கால் ஈர்க்கப்பட்ட இராமாபாய் ஞானஸ்நானம் பெற்று , ஆங்கிலிக்கன் திருச்சபையில் திடப்படுத்தலும் பெற்றுக் கொண்டார் . இவ்விதம் இராமாபாய் நிபந்தனையில்லாமல் முற்றிலுமாக மீட்பரிடம் சரணடைந்து , தன்னுடைய பாவங்களை மன்னித்து , தன்னைத் தேவன் தம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டார் . அது ஒரு மகிமையான மனமாற்றம் ;
அவர் இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நிறைக்கப்பட்டார் . பின்னர் அவர் பல மிஷனெரி ஆராதனைகளில் கலந்து கொண்டதுடன் , பக்திப் பரவசமூட்டும் பல புத்தகங்களையும் வாசித்தார் .
இந்தியாவில் ஏன் வெகுசில மிஷனெரி ஸ்தாபனங்களே உள்ளன என்று இராமாபாய் ஆச்சரியப்பட்டார் . ஆண்டவருடைய மெல்லிய அமர்ந்த சத்தம் அவரைக் கடிந்து கொண்டது . இந்தியாவில் ஒரு விசுவாச மிஷனெரி ஸ்தாபனத்தை தொடங்கும் நபராக நீ ஏன் இருக்கக் கூடாது எனக் கர்த்தர் அவரிடம் கேட்டார் . இந்தியாவில் விதவைகள் மற்றும் குழந்தைகளின் இழிவான வாழ்க்கையிலிருந்து அவர்களை மீட்க இராமாபாய் விரும்பினார் . எனவே “ சாரதா சதன் ” என்ற பெயரில் அடைக்கலம் தரும் ஓர் இல்லத்தைத் திறந்தார் .
சமுதாயத்தால் தள்ளப்பட்ட , பசியாயிருந்த , கொடுமைப்படுத்தப்பட்ட , வீடு வாசலில்லாத பெண்கள் அந்த இல்லத்திற்கு வந்தார்கள் . இராமாபாய் அவர்களுக்கு ஒரு அன்புள்ள தாயாக , தோழியாக , ஆசிரியையாக மாறினார் . அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை ஆனால் இராமாபாயின் சிறந்த மாதிரியான வாழ்க்கையை பார்த்துப் பலர் கிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக அறிந்து கொண்டனர் .
கோவில்களில் இந்து பூசாரிகள் அடிமைகளாகவைத்திருந்த அநேக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளையும் இராமாபாய் மீட்டார் . இந்த ஊழியம் விரிவடைந்து , விரைவில் சாரதா சதனில் எல்லாப் பெண்களுக்கும் போதுமான இடவசதி இல்லாமற் போனது . எனவே பூனா நகரில் கேட்கான் என்ற இடத்தில் நிலம் வாங்கப்பட்டு , இதைப்போன்ற மற்றுமொரு இல்லம் கட்டப்பட்டது . அந்த இல்லத்திற்கு “ மீட்பு " எனப் பொருள்படும் “ முக்தி " என்று பெயரிடப்பட்டது . முக்தி இல்லம் நிறுவப்படுவதற்காகவும் அதன் ஊழியத்திற்காகவும் மிகுதியான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது . இல்லத்திற்கு வந்த பெண்கள் பிற்காலத்தில் இல்லத்தை விட்டுச் சென்றபின் வேலை தேடிக் கொள்வதற்காக அவர்களுக்குப் பயனுள்ள தொழில்கள் கற்பிக்கப்பட்டன .
அவர்கள் செவிலியர்களாகவும் , நெசவாளர்களாகவும் , தோட்ட வேலை செய்பவர்களாகவும் , வீடு பராமரிப்பவர்களாகவும் மற்றும் வேதாகமஆசிரியர்களாகவும் மாறினார்கள் . இரண்டு இல்லங்களிலும் மிகத் துரிதமான வளர்ச்சி ஏற்பட்டு , விரைவில் இரண்டாயிரம் பெண்கள் அங்கு இருந்தனர் . அவர்கள் தையல் , பால் பண்ணை பராமரித்தல் , கயிறு திரித்தல் மற்றும் ரொட்டி தயாரித்தல் போன்ற வேலைகளையும் கற்றுக் கொண்டனர் . இளம் விதவைகளுக்கும் அடைக்கலம் கொடுக்கப்பட்டது . ஒரு முறை 300 பெண்கள் தேவையிலிருந்தனர் . இராமாபாய்க்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . மத்திய இந்தியாவில் ஏற்பட்ட ஒரு கொடூரமான பஞ்சம் , இளம் வயதில் தானும் தன் பெரிய சகோதரனும் பட்ட கொடுமையான பாடுகளை இராமாபாய்கு நினைவூட்டியது .
ஆனால் அவர் ஜெபம் பண்ணத் தொடங்கினார் . விரைவில் தேவைகளைப் பற்றி கேள்விபட்ட அநேகக் கிறிஸ்தவர்கள் தங்கள் பணத்தினால் உதவி செய்ய முன் வந்தனர் . தன் ஊழியத்தில் எதிர்கொண்ட எல்லாப் பிரச்னைகளையும் இராமாபாய் தேவனுடைய ஆலோசனையுடன் மேற்கொண்டார் . முக்தி மிஷனை நடத்த அவர் நூறு பேரை நியமனம் செய்து , அவர்களது உதவியுடன் இல்லங்களை அருமையாக நடத்தி வந்தார் .
அற்பமான ஆரம்பங்களிலிருந்து இரு இல்லங்களும் மிகப் பெரியவைகளாக வளாந்தன . 1896இல் நிறுவப்பட்ட முக்தி மிஷன் பல்வேறு அம்சங்களையுடையதாய் விளங்கியது . அவரது ஊழியங்களில் மணமாகாத தாய்மார்களுக்கான இல்லம் ஒன்றும் அடங்கும் . இராமாபாயின் ஊழியங்களில் ஒரு பாலா பள்ளிப் பயிற்சி ( Kindergarten Training ) , பார்வையற்ற பெண்க ளுக்கான இல்லம் மற்றும் பள்ளி . ஒரு மருத்துவமனை மற்றும் சிறு சிகிச்சைக் கூடங்கள் ( Dispensaries ) , பல்வேறு தொழிற்கூடங்கள் மற்றும் ஒரு அச்சுக் கூடம் ஆகியவையும் உட்படும் .
அநேகமாக . இவர்தான் உலகிலேயே முதல் வேதாகமபெண் மொழிபெயர்ப்பாளர் எனலாம் . ஒரு எபிரேய மராத்தி இலக்கணமும் எழுதினார் . ' ஸ்திரி தாமநீதி என்ற பெண்களுக்கான சிறந்த நன்னெறி மற்றும் நீதிநெறிகளடங்கிய புத்தகமொன்றையும் எழுதினார் . 1922 இல் இராமாபாய் தனது நித்திய வெகுமதியைப்பெற தனது ஆண்டவரிடம் சென்றடைந்தார் . ' தேவன் எனக்கு என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் உங்களுக்கும் அவரால் செய்ய முடியும் " என்று எப்போதும் அவர் கூறுவதுண்டு . கேட்கானிலுள்ள முக்தி மிஷன் இன்றும் வீடு வாசலில்லாத , சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது . அவரது வாழ்க்கை உண்மையாகவே பிறருக்காகவே எரிந்து முடிந்த ஒரு மெழுகுவர்த்தி . தனது சொந்த தேசத்தின் கலாச்சாரம் மற்றும் வேர்களை ஒரு போதும் மறுதலிக்காத பெண்மணி அவர் . அவரைப் பொறுத்தவரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சேவை செய்வது என்பது வெறும் சமூக சேவை மாத்திரமல்ல ; அது தேவ பக்திக்குரியதுமாகும் .
அவரது அன்பு மற்றும் உறுதியுடன் கூடிய அயராத உழைப்பின் மூலம் தன் காலத்திலிருந்த அநேக தடைச் சுவர்களை அவர் தகர்த்தெறிந்தார் . குறுகிய மனப்பான்மை என்னும்மதில்களை அவர் உடைத்தெறிந்தார் . ' முக்தி மிஷன் " என்பது இந்திய விசுவாசத்தால் நடத்தப்பட்ட ஓர் இந்தியப் பெண்ணின் இதயத்தில் உதித்ததொன்றாகும் என்று பிஷப் ஸ்டீபன் நீல் மொழிந்தார் . இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது , உயிர்த்தெழுதலில் எந்தப் பெண்களுக்காக மற்றும் குழந்தைகளுக்காக பண்டித இராமாபாய் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களோ , அந்தப் பெண்களும் குழந்தைகளும் எழும்பி . அவரைப் “ பாக்கியவதி " என்று புக ழுவார்கள் . தேவன் அவரது வாழ்க்கைக்கென்று ஒரு நோக்கத்தைக் கொடுத்து , அவரைப்பயன்படுத்தினார் . தன்னுடைய சொந்த மக்களால் வெறுத்துத் தள்ளப்பட்ட ஒருவள் எவ்விதம் கடவுளுக்கும் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற முடிந்தது ? இதன் இரகசியம் : அவள் தன் வாழ்க்கையைமுயவல் : கிறிஸ்துவின் கரத்தில் ஒப்படைத்தாள் . கிறிஸ்து அவளுக்கு ஒரு நோக்கத்தை கொடுத்து , அவளது வாழ்வை அநேகருக்குப் பயனுள்ளதாக மாற்றினார் . “ என்னைப் பயன்படுத்தின அதே தேவன் உங்களையும் பயன்படுத்துவார் " - இது தான் இராமாபாயின் இறுதி வார்த்தைகள் . உங்களை தேவன் பயன்படுத்த வேண்டுமா ? உங்கள் ஒரே வாழ்க்கையை தேவன்கரத்தில் ஒப்புக்கொடுங்கள் .
No comments:
Post a Comment