Saturday, 26 March 2016

Blood of Jesus


1. எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பரடும். எபிரேயர் 9:22. 

2. இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தம் செய்யும்படியாக நகரவாசலுக்கு புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12. 

3.  நம்முடைய ஆசீர்வாதத்தின் பாத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் ஐக்கியமாய் இருக்கிறது. 1கொ10:16 

4. புதிய உடன்படிக்கை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. 1கொ11:25. 

5. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 
எபேசியர் 1:7. 

6. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நாம் நீதிமானாக்கப்பட்டுருக்கிறோம். ரோமர் 5:9. 

7. இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே பிதாவாகிய தேவனோடு நமக்கு சமாதானத்தை உண்டாக்கினார். கொ1:20. 

8. இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினாலே நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார். எபிரேயர் 9:12. 

9. இயேசு கிறிஸ்து வினுடைய இரத்தம்,  நம்மை ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய செத்தகிறியைகளற நம்மை சுத்திகரித்தது. எபிரேயர் 9:14. 

10. இயேசுகிறிஸ்து,  தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை இராஜாக்கழும் ஆசாரியர்களுமாக்கினார். 
வெளி 1:6. 


11. இயேசுகிறிஸ்துவின் நித்திய உடன்படிக்கை யின் இரத்தத்தினாலே, நாம் கர்த்தருக்குப் பிரியமாயமானதை செய்ய, தேவனுடைய சித்தம் செய்யஉம் சகலவித நற்கிரியைகயிலும் சீர்பொருந்தினவராக்குவார். எபிரேயர் 13: 20 

12. முற்காலத்திலே உலகம், மாமிசம், பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை அவைகளை மேற்க்கொள்ளும் பொருட்டு இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே நம்மை  மீட்டுக்கொண்டு தேவனுக்கு முன்பாக பூமியிலே அரசாளுவோமென்கிற புதுபாட்டை பாட்டைக்கொடுத்தார். 
வெளி 5: 9,10.

No comments:

Post a Comment