Thursday, 31 March 2016

ரூத் 3:11


இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தார்


இயேசு கிறிஸ்து உயித்தெழுந்தார் என்பது சுவிசேஷம். 2தீமோ2:8


ரோமர் 5: 18   ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 

1 கொரிந்தியர் 15: 45   அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 

அப்போஸ்தலர் 2: 33  இயேசு கிறிஸ்து தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 

இயேசுகிறிஸ்துவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாமெல்லாரும்  சாட்சிகளாயிருக்கிறோம். அப் 6:32 

ரோமர் 6:4. பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 

5  ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 

6  நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 

7  மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 

8  ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 

9  மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. 

10  அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 

11  அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 

12  அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 

13  அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 


பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்.  
யோ 20:21

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்

சங்கீதம் 37:9-12

பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான், 

அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 
 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள் 

 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். 
ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார், அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 

சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர்பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 

ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம், அவர்கள் வில்லுகள் முறியும்.  

அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 

சங்கீதம் 37 :17-24

துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 

 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 

 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், 

அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். 
 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான், நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 

அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள், அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். 

 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 

அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 

ஏசாயா 41:13


கர்த்தர் அவருடைய கோபத்தில் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்


சங்கீதம் 38 :1-5, 21

கர்த்தர்  அவருடைய கோபத்தில் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்  அவருடைய உக்கிரத்தில் உன்னைத் தண்டிக்க  மாட்டார்

அவருடைய அம்புகள் உனக்குள்ளே தைத்திருக்கிறது,  அவரது கை உன்னை இருத்துகிறது. அவரது கோபத்தினால் உன் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை,  உன் பாவத்தினால் உன் எலும்புகளில் சவுக்கியமில்லை.

உன் அக்கிரமங்கள் உன் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல உன்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

உன் மதிகேட்டினிமித்தம் உன் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

கர்த்தர்  உன்னைக் கைவிடமாட்டார்  உன் தேவன், உனக்குத் தூரமாயிருக்கவுமாட்டார்


Saturday, 26 March 2016

சிலுவை தியானம்:- பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 
லூக்கா 23 :46 

ஒப்படைக்கும் குரல்::-

இயேசு தாமாகவே தம் உயிரை  மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தார் அந்நேரத்திலேயே அவர் ஆவி பரலோகத்திலிருக்கு  தம் பிதாவிடம் சென்றுவிட்டது  பிதா இயேசுவுடைய ஆவியை பாதுகாத்துக் கொண்டார்

நாமும் நம்முடைய சரிரத்தை,ஆவியை.ஆத்துமாவை, தாலந்தை, பலத்தை, சுகத்தை, விசுவாசத்தை,  ஆண்டவரிடம் ஒப்படைத்தால் அவர் தம்முடைய சித்தத்தின் படி அருமையாக நடத்துவார்

பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே, நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. 

 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். 
கர்த்தரை நம்பி நன்மைசெய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 
 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். 

 உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். 

 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு, காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. 

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
 சங்கீதம் 37 :1-8

சிலுவை தியானம்:- முடிந்து

இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.  
யோவான் 19 :30

வெற்றியின் குரல்:-

இயேசுவின் மீட்பின் பணி முடிநத்து

விழுந்துபோன மனித குலத்துக்கு மீட்பை சம்பாதிக்கும்படி அனுபவிக்கும்படி அனுபவிக்க வேண்டிய இயேசுவின் பாடுகளும்  வேதனைகளும் முடிந்ததோடு அவருடைய மீட்பின் வேலை நீறைவேறிவிட்டது அவர் நம்முடைய பாவங்களுக்காக தண்டனையை ஏற்றுக்கொண்டு எல்லாருக்கும் இரட்சிப்பின் வழியைத் தந்தார்

நம்முடைய  பாவங்களுக்கான , சாபங்களுக் கான, மீறுதலுக்கான   தண்டனையை  நாம்  அனுபவிக்க  தேவையில்லை,  தண்டனையை  இயேசு சிலுவையில் முடித்து விட்டார்

தேவனுடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் அவரது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 
அவரது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைகிறார்கள், அவரது பேரின்ப நதியினால் அவர்களுடைய தாகத்தைத் தீர்க்கிறார். 

 ஜீவஊற்று  அவரிடத்தில் இருக்கிறது, அவருடைய  வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறார்கள். 

கர்த்தர்  அவரை அறிந்தவர்கள்மேல்  அவரது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்  அவரது நீதியையும் பாராட்டியருளுவார்
 பெருமைக்காரரின் கால்  உன் மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை உன்னைப் பறக்கடியாமலும் இருக்கும் 

 இதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள், எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள். 
சங்கீதம்36:7-12

Blood of Jesus


1. எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பரடும். எபிரேயர் 9:22. 

2. இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தம் செய்யும்படியாக நகரவாசலுக்கு புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12. 

3.  நம்முடைய ஆசீர்வாதத்தின் பாத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் ஐக்கியமாய் இருக்கிறது. 1கொ10:16 

4. புதிய உடன்படிக்கை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. 1கொ11:25. 

5. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 
எபேசியர் 1:7. 

6. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நாம் நீதிமானாக்கப்பட்டுருக்கிறோம். ரோமர் 5:9. 

7. இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே பிதாவாகிய தேவனோடு நமக்கு சமாதானத்தை உண்டாக்கினார். கொ1:20. 

8. இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினாலே நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார். எபிரேயர் 9:12. 

9. இயேசு கிறிஸ்து வினுடைய இரத்தம்,  நம்மை ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய செத்தகிறியைகளற நம்மை சுத்திகரித்தது. எபிரேயர் 9:14. 

10. இயேசுகிறிஸ்து,  தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை இராஜாக்கழும் ஆசாரியர்களுமாக்கினார். 
வெளி 1:6. 


11. இயேசுகிறிஸ்துவின் நித்திய உடன்படிக்கை யின் இரத்தத்தினாலே, நாம் கர்த்தருக்குப் பிரியமாயமானதை செய்ய, தேவனுடைய சித்தம் செய்யஉம் சகலவித நற்கிரியைகயிலும் சீர்பொருந்தினவராக்குவார். எபிரேயர் 13: 20 

12. முற்காலத்திலே உலகம், மாமிசம், பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை அவைகளை மேற்க்கொள்ளும் பொருட்டு இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே நம்மை  மீட்டுக்கொண்டு தேவனுக்கு முன்பாக பூமியிலே அரசாளுவோமென்கிற புதுபாட்டை பாட்டைக்கொடுத்தார். 
வெளி 5: 9,10.

இயேசு கிறிஸ்துவின் மரணம்



ரோமர் 5: 12  ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 

ரோமர் 5: 17  அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. 

ரோமர் 5: 21  ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, 

கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. 

1. எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க எல்லாரும் மரித்தார்கள். 2கொ5:14. 

2. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் 1தீமோ2:6. 

3. ஒவ்வொரு வருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு. எபிரேயர் 2:9 

4. பிழைத்திருக்கிறவர்கள் இனி தங்களுக்கென்று பிழைத்திராமல் தேவனுக்கென்று பிழைக்கும்படி அவர் எல்லாருக்காகவும் மரித்தார்.  2கொ5:15. 

5.  நாம் பெலனற்றவர்களா யிருக்கையில்  அகக்கிரமகாக இயேசு கிறிஸ்து மரித்தார். ரோமர் 5:6 

6. இயேசு கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த அன்பை விளங்கப்பண்ணினீர்கள். ரோமர் 5:8 

7. இயேசு கிறிஸ்து வினுடைய மரணத்தினாலே தேவனோடே ஒப்புறவாக்கப்படடோம். ரோமர் 5:10. தேவனைப்பற்றி மேன்மை பாராட்டுகிறோம். 5:11. 

8. நாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டான். ரோமர் 6:6. 

9. அவர் மரித்தது பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். ரோமர் 6:10. 
வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார். 
1 கொ15:3. 

10. நாம் தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி நியாயப்பிரமாணத்திற்கு அவரோடே மரித்தோம்.  ரோமர் 7:4 

11. நாம் புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு அவரோடே நாம் மரித்தோம். 
ரோமர் 7:6 

12. நம்மை இப்பொழுது இருக்கும் பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். கலாத்தியர் 1:4 

13. கிறிஸ்து வுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்தோம். கொ2:20 

14.  மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனை தமது மரணத்தினாலே அளிக்கும்படிகு. எபிரேயர் 2:14. 

15. ஜீவ காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திலிருந்தவர்களை விடுவிக்கும்படி. எபிரேயர் 2:15. 

16. நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்கும்படி. 1பேதுரு 2:24. 

17. இயேசு கிறிஸ்து ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். எபிரேயர் 10:10. 

18. இயேசு கிறிஸ்து வினுடைய ஒரே பலியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரேயர் 10:14.

சிலுவையை பற்றிய அரிய உண்மைகள்


இத் தகவல் Oxford பல்கலைக்கழகம் மாணவர் ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ள தகவல்,..


1.இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின்
     எடை-150 கிலோ
     நீளம்-15 அடி
    அகலம்-8 அடி

2.சரீர்த்தில் அறையப்பட்ட ஆணியின்:
    நீளம்-8 அங்குலம்
    அகலம்-3/4 அங்குலம்


3.இயேசுவை பற்றி:
அவருடைய உயரம்:- 5 அடி 11 அங்குலம்
அவருடைய எடை: 85 கிலோ

இயேசுவின் பாடுகளை பற்றி:

"இயேசு கிறிஸ்து நடந்து வந்த போது 3  முறைத் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார்". 17மணி நேரம் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்.
அவர் சரீரத்தில் மொத்தம் 5480 காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவருடைய முதுகில் ஏறத்தாழ 150 ஆழமான காயங்கள் இருந்தன. அவருடைய தலையை கிழித்து 17 முட்கள் உள்ளே சென்றன. அவருடைய உடலில் இருந்து 6.5 லிட்டர் இரத்தம் கசிந்தது. இயேசு கிறிஸ்துவை எருசலேம் வீதி வழியாக 350 சேவகர்களும், 50 குதிரை வீரர்களும் இழுத்துச் சென்றனர்.
யூத கால அட்டவணையின் படி "அக் அபூர்வே கோன்ஜீதா 785 நிசான்15 அன்று மரித்தார்; நாம் பின்பற்றும் கால அட்டவணையின்படி கிபி 30 ஆம் ஆண்டு  ஏப்ரல்7 ஆம் தேதியிலே மரித்தார்.


------------------------------------------
சிலுவையிலுள்ள INRI எழுத்து லத்தீன் வார்த்தை; அதின் அர்த்தம்;
I-IESUS
N-NAZARINE
R-REXO
I-IDONEUS
இவ்வார்த்தையின் பொருள்: “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா”. மருத்துவராகிய லூக்கா இயேசு மரித்ததற்கு சான்றிதழ் வழங்கினார்
------------------------------------------


The following are the informations published by the Research Scholars of OXFORD University....


THE RARE INFORMATIONS OF JESUS, HIS SUFFERINGS AND CROSS... 


1. CROSS :
      Weight = 150 kg
       Length =   15 feet
      Breadth =     8 feet
2. NAILS :
     Thickness =  3/4 inch
      Length      =   8 inch
3. JESUS :
      Height  =  5 '  11 inch
      Weight  =  85 kgs


Information on Jesus's Sufferings....

JESUS stumbled and fell to the ground 3 times while carrying HIS cross to Golgotha. HE was very thirsty and HE suffered for 17 hours longing for water. There were 5480 wounds all over in HIS body. There were 150 deep wounds on HIS back alone. 17 Thorns pierced HIS head. HE shed 6 . 5 litres of blood. 350 Soldiers and 50 Horsemen dragged JESUS wiping, beating on the streets of Jerusalem.
According to JEW's Calendar.. JESUS dird on.. Ak Aboorve Konjeetha 785 ,  Nisaan  15. According to our Calendar JESUS DIED on April 7.


The meaning of the Latin Word written on the cross INRI..
I  -   IESUS
N -   NAZARENE
R   - REXO
I   -  IDONEUS


Means... JESUS the Nazarene the KING of JEWS..LUKE a Doctor, certified the DEATH OF JESUS.
------------------------------------------ 


இன்றைக்கு அறிக்கை செய்ய வேண்டிய வசனங்கள்:

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். சங்கீதம் 22:24

கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 27:7

கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. சங்கீதம் 33:22