Tuesday, 29 November 2016

நீதிமொழிகள் 10 :9-19

##### கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்: அலப்புகிற மூடன் விழுவான். நீதிமானுடைய வாய் ஜீவஊற்று: கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். பகை விரோதங்களை எழுப்பும்: அன்போ சகல பாவங்களையும் மூடும். புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்: மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள், மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை (கண்டிப்பை) வெறுக்கிறவனோ மோசம்போகிறான். பகையை மறைக்கிறவன் பொய் உதடன்: புறங்கூறுகிறவன் மதிகேடன். சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது: தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதிமொழிகள் 10 :9-19

No comments:

Post a Comment