Tuesday, 2 June 2020

231-,235

231 குற்றவாளிக் கூண்டில் நான் 

அந்த நாள் என்னுடைய பதினொராவது பிறந்தநாள் . நான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன் . நான் சிறுவனாயிருப்பதால் குற்றவாளி அல்ல என்று சொல்லிவிட முடியாது . ஏனெனில் நான் கையும் மெய்யுமாக பிடிபட்டவன் . எனக்கு சாக்கு போக்கு சொல்வதற்கும் ஒன்றுமில்லை . எனக்கு உதவி செய்வாரும் இல்லை . அந்த நம்பிக்கையுமில்லை . குற்றவாளிக் கூண்டிற்குள் என்னைத் தள்ளி அதன் வாசல் அடைக்கப்பட்டது . முரட்டு உருவமான போலீஸ்காரர் அந்த வாசலில் பாய்ந்து கொண்டு இவன் தண்டனை பெறப்போவது நிச்சயம் என்ற திருப்தியோடு என்னை அலட்சியமாகப் பார்த்தார் . நான் முற்றும் உதவியற்றவனாக குற்ற உணர்வோடு பரிதாபத்திற்குரிய நிலையில் நின்றேன் .

 நீதிபதி அவருடைய சிங்காசனம் போன்ற நாற்காலியில் வந்து அமர்ந்தார் . அவருடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் தைரியம் எனக்கில்லை . எனக்கு இரக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுமில்லை . ஆகவே நீதிபதியின் தீர்ப்பு எனக்கு பேரழிவாகவேயிருக்கும் . நீதிமன்றத்தில் கூட்டம் நிறைந்திருந்தது . எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருக்கும் என்னையே பார்த்தனர் . " நீதிபதி அவர்களே , சட்டத்தில் இவனுக்கு எவ்வளவு தண்டனையுண்டோ அந்தத் தண்டனையை கொடுத்து சமுதாயத்தைக் காப்பாற்றுங்கள் " என்று சொல்வதுபோல் தோன்றியது . 

நான் குற்றவாளிக் கூண்டிற்குள் குனிந்து உட்கார்ந்து கொண்டேன் . " அமைதி , அமைதி ' ' என்று நீதிமன்ற எழுத்தர் குரல் கொடுத்து நீதிமன்ற வேலை துவங்கியது . 

முதல் வழக்கு என்னுடைய வழக்குத்தான் . " இவனுக்காக அவனுடைய பிரதிநிதி யார் ? என்று நீதிபதி , எழுத்தரைக் கேட்டார் . “ பிரதிநிதி " என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்குத் தெரியாது . என்னுடைய தண்டனையை நிறைவேற்றுபவராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன் .

 அவனுக்கு யாருமே இல்லை " என்று எழுத்தர் சொன்னார் . நீதிபதி , நீதிமன்றத்திற்கு வந்திருந்த வழக்கறிஞர்களில் ஒருவரைப் பார்த்து " இந்தப் பையனின் வழக்கை நடத்தும் பிரதிநிதியாக உங்களை நியமிக்கிறேன் " என்று சொன்னார் . அந்த வழக்கறிஞர் மெதுவாக எழுந்து நாற்காலிகளை விலக்கிக்கொண்டு கூண்டின் கதவைத்திறந்து என் அருகே வந்தார் . நான் உட்கார்ந்தேயிருந்தேன் . பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன் . என்னுடைய இருதயமே நின்றுவிடுவது போலிருந்தது .

 நான் அவருடைய முகத்தைப் பார்த்தேன் . அவரது முகத்தைப் பார்த்தது எனக்கு முற்றிலும் பெரிய ஆச்சரியமாயிருந்தது . மிகவும் பலமான உறுதியான முகத்தோற்றம் . ஆனால் சாந்தமும் அமைதியுமான முகபாவம் . அவர் என்னை உற்றுநோக்கினார் . அவருடைய கண்களைப் பார்ப்பதற்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது . அந்தப் பார்வையிலிருந்த கனிவான அன்பு என்னை ஊடுருவிப் பாய்வது போலிருந்தது . அவர் குனிந்து என் கையைப்பற்றித் தூக்கி அருகிலிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார் . 

அவரும் ஒரு நாற்காலியை இழுத்து என் அருகில் போட்டு உட்கார்ந்தார் . அவருடைய கண்கள் என்னை மிகவும் ஆழ்ந்து பார்த்துக்கொண்டே என்னை விசா ரிக்க ஆரம்பித்தார் . 

“ நண்பனே , நீ குற்றவாளியா ? என்று கேட்டார் . அவரிடத்தில் பொய்சொல்ல என் நாவு எழவில்லை . நடுங்கிய குரலோடு எச்சிலை விழுங்கிக்கொண்டே “ ஆம் , ஐயா , நான் குற்றவாளிதான் ” என்று மெல்லிய குரலில் சொன்னேன் . இதைச் சொல்லி முடித்தவுடன் என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவு அழ ஆரம்பித்துவிட்டேன் . அழுகையை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு என் இருதயத்தில் அடக்கிவைத்திருந்த எல்லாவற்றையும் அவரிடத்தில் சொன்னேன் . பொறுமையோடு கேட்டுவிட்டு “ நல்லது , நீதிபதியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு அவரது இரக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பது தான் நல்லது என்று உனக்குத் தோன்றுகிறதா ?

 “ இரக்கத்திற்கு ஒப்புக்கொடுப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை . ஆனாலும் அவர் என்ன முடிவு எடுத்தாலும் நிச்சயமாக அது நன்மையாகத்தானிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது . “ ஆம் என்ற என் தலையில் பரிவோடு தட்டிக்கொடுத்து விட்டு எழுந்து நீதிபதியின் பக்கம் சென்றார் . 

“ கனம் நீதிபதி அவர்களே , பல ஆண்டுகளாக இந்த நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞராக பணியாற்றி வருவதில் நான் பெருமைப்படுகிறேன் . குற்றவாளிகளிடமிருந்து சமுதாயம் பாதுகாக்கப்படவேண்டுமென்பது முக்கியமான காரியமாக இருந்தாலும் நீதியின் நோக்கமும் இலக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அதற்கு இணையான பாக்கியமான காரியம்தான் . 

இந்த நோக்கில் இரக்கம் காட்டுவது என்பதும் இந்நீதிமன்றத்தின் மனப்பாங்காக இருக்கும் என்று நான் நம்புகிறேன் . இந்த சிறுபையனுக்காக வழக்கை நடத்த என்னை நியமித்ததில் நான் இந்நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

 இச்சிறுவனை நான் விசாரித்தபோது உண்மையிலேயே அவன் இருதயம் உடைந்தது . அவனது தவறுகள் எல்லாவற்றிற்காகவும் மனம் வருந்துவது மாத்திர மல்ல இந்நீதிமன்றத்தில் அவனது குற்றத்தைக்குறித்து ஒப்புதல் வாக்குமூலம் ( confession ) கொடுக்கவும் ஆயத்தமாயிருக்கிறான் .
 இந்நீதிமன்றத்தில் இரக்கத்திற்கு இச்சிறுவன் கெஞ்சி நிற்கிறான் " 

கீழே அமர்ந்திருந்த நான் எனது வழக்கறிஞரின் நீண்ட கோட்டின் தொங்கலைப் பிடித்துக்கொண்டேன் . அப்படி பிடித்துக்கொண்டால் எப்படியேனும் என்னை வெளியேற்றி விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது . அவர் பேசவேண்டியதை முடித்துவிட்டார் என்று நினைத்தேன் . 

ஆனால் அது துவக்கவுரைதான் என்பதை பின்னர்தான் விளங்கிக்கொண்டேன் . நீதிமன்றத்தில் பெரிய அமைதி நிலவியது . எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்கள் . மீண்டும் தொடர்ந்தார் . 

வறுமையின் காரணமாக அன்றாட அடிப்படைத் தேவைக்குக் கூட பணமில்லாமல் அநாதையாக ஏங்கி நிற்கும் என்னுடைய நிலவரத்தை விவரித்தார் . பசியோடு திரியும் ஓநாய்கள் மத்தியில் மேய்ப்பனில்லாத ஆட்டுக்குட்டியைப்போல பாதுகாப்பற்ற நிலவரத்தில் வாழும் நிலையையும் , இந்தச் சூழ்நிலையில் சிறுவனாகிய எனக்கு ஏற்படக்கூடிய மனப்போராட்டங்களையும் படம்பிடித்துக் காட்டியது போல் விவரித்தார் . 

என் அருகில் நின்ற போலீஸ்காரருடைய கண்களில் கூட கண்ணீர் நிரம்பியதைக் கண்டேன் . கடின நெஞ்சுடையவர்கள் கூட உருகும் நிலையில் அவர் என்னுடைய நிலவரத்தை எடுத்துரைத்தார் . அவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆச்சரியத்தோடு கேட்டு அவருடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் . நான் பெருமூச்சுவிட்டேன் . என்னுடைய ஆத்துமாவில் நம்பிக்கையும் ஜீவனும் இறங்கியது போலிருந்தது . என்னுடைய வழக்கறிஞர் என்ற உறவு நிலையையும் தாண்டி அவர் மீது எனக்கு அளவற்ற பாசம் ஏற்பட்டது .

 கனம் , நீதிபதி அவர்களே , இச்சிறுவனுக்கு இரக்கம் காட்டி அவனை மன்னித்து விடுதலை செய்வீர்களானால் நானே அவனுக்கு பொறுப் பாளராயிருந்து ( guardian ) அவனுக்கு தங்கும் வீடும் பாதுகாப்புமளிக்க நான் உறுதியளிக்கிறேன் . அவனது படிப்புக்கான காரியத்தையும் நானே கவனித்துக் கொள்கிறேன் . சமுதாயத்திற்கு பயனுள்ள ஒரு நல்ல குடிமகனாக அவனை நான் மாற்றித்தருகிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன் " இதைச் சொல்லி முடிக்கவும் நன்றியால் என் இருதயம் நிறைந்து வெடித்துவிடுவது போலிருந்தது . என்னால் கட்டுப் படுத்த முடியாமல் சத்தமிட்டு அழுதுவிட்டேன் .

 என்னுடைய வழக்கறிஞரை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது . நீதிமன்றத்தில் அவருடைய பேச்சின் மத்தியில் சில வேளைகளில்

 " கனம் நீதிபதி அவர்களே " ( Your honor ) என்று நீதிபதியைக் கூறுவதற்குப் பதிலாக “ என் தகப்பனே " ( my father ) என்று கூறியதை நான் கவனித்தேன் . அது என் இருதயத்தைத் தொட்டது . ஒருவேளை நீதிபதி அவருடைய மகனையே எனக்கு வழக்கறிஞராக நியமித்திருப் பாரானால் நிச்சயமாக அவரது உருக்கமான பேச்சுக்கு இரக்கம் காட்டுவார் . அவரது பேச்சில் அநேகர் கண்கலங்கியதையும் அநேகருடைய கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியதையும் கண்டேன் . 

என் அருகிலிருந்த போலீஸ்காரர் தனது தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு கைக் குட்டையால் முகத்தை மறைத்து கண்ணீரைத் துடைப்பதைக் கண்டேன் . உண்மையிலேயே என் வழக்கின் விசாரணை முற்றிலும் விநோதமா யிருந்தது . எனது வழக்கறிஞர் அவரது உச்சக்கட்ட பேச்சிற்கு வந்தார் .

 நீதிபதியை நோக்கி " என் தகப்பனே , இந்தத் சிறுபையன் வேறு யாருமில்லை என்னுடைய தம்பிதான் ” விவரிக்க முடியா மகிழ்ச்சி என் இருதயத்தை நிறைத்தது . நீதிபதி என்னுடைய வழக்கறிஞரின் தகப்பனான என்னுடைய வழக்கறிஞர் எனக்கு அண்ணனானால் நீதிபதி எனக்குத் தகப்பன் தானே . 

இந்த எண்ணம் என்னில் வந்ததும் என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை . நான் நீதிபதிக்கு நேராக ஓடினேன் . அவரைப் பற்றிக்கொண்டேன் அவரும் என்னை அணைத்துக் கொண்டார் . என்னை புதிய சிருஷ்டியாக்கினார் . அவரது ஆசனத்தை விட்டு எழுந்து என்னுடைய இரு கரங்களையும் உயர்த்திப் படித்து “ என்னோடு சேர்ந்து சந்தோஷபடுங்கள் என் குமாரனாகிய இவன் மெம்பவம் உயிர்க்கான் . காணாமல் போனான் திரும்பவும் காணப்பட்டான் என்றார் . கூடியிருந்த அனைவரும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர் . 

சிலர் மகிழ்ந்து ஆரவாரம் செய்தனர் . என்னையும் கூட கட்டி அணைக்க விரும்பினார்கள் . என்னுடைய வழக்கறிஞரை மனமாரப் பாராட்டின் டினார்கள் . நடந்த சம்பவம் நீதிமன்றத்தில் அல்ல என்று நான் சொல்லத் தேவையில்லை , அது சபையில் நடந்த நிகழ்ச்சி . 

நீதி விசாரணை முந்திய கால எழுப்புதல் . தேவனுடைய வார்த்தை என்னைக் கைது செய்து குற்றவாளியாக என்னைக் கூண்டிலே நிறுத்தியது . 

அங்கே நித்திய பிதா சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்திருந்தார் . 

இயேசு கிறிஸ்து என்னுடைய வழக்கறிஞராயிருந்து எனக்காகப் பரிந்துபேசி எனக்கு மன்னிப்பையும் நித்திய இரட்சிப்பையும் பெற்றுத் தந்தார் .

 இந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது . அடிமைத்தனத்தி லிருந்து நான் விடுதலையடைந்த நாள் இயேசு கிறிஸ்து என்னுடைய அடிமை விலங்கை உடைத்து என்னை விடுதலையாக்கினார் . " என் பிள்ளைகளே , நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் ; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் ” ( 1 யோவா .2 : 1 ) . 

தேவனுடைய வார்த்தை 1998 ஜூன்




232  எனக்காக இருவர் மரித்தார்கள் 

ஒரு சமயத்தில் கப்பல் ஒன்று மூழ்கும் தருவாயிலிருந்தது . ஆபத்தில் தப்பிச்செல்ல கப்பலில் பல படகுகள் இருந்தன . ஆனால் கப்பலிலுள்ளோர் அனைவரும் ஒரே நேரத்தில் தப்பிச் செல்லும் அளவுக்குப் படகுகள் இல்லை . ஆகவே கப்பல் அதிகாரி பயணிகளின் பெயரில் சீட்டுப்போட்டு சீட்டுவிழுந்தவர்களுக்குத் தப்பிச்செல்ல முன்னுரிமை கொடுக்கப்பட்டது . அப்பொழுது அப்படி முன்னுரிமை பெறாத ஒருவர் மரணத்தைச் சந்திக்கப் பயந்து பயங்கரமாக பீதியில் அலறினார் . " யாராவது எனக்கு உதவி செய்யமாட்டீர்களா ? " என்று தப்பிச்செல்ல முன்னுரிமை பெற்றவர்களைப் பார்த்து பரிதாபமாகக்  கெஞ்சினார் . அப்பொழுது தப்பிச்செல்ல அனுமதிச்சீட்டு பெற்ற ஒருவர் அவரது பரிதாப நிலவரத்திற்கு இரங்கி தான் செல்ல இருந்த இடத்தை அவருக்குக் கொடுத்தார் . “ 

நண்பனே , நான் மரிக்க ஆயத்தமா யிருக்கிறேன் . ஆகவே என்னுடைய இடத்தை உமக்குத் தருகிறேன் . ஆனால் ஒரு நிபந்தனை . இயேசு கிறிஸ்துவிடம் உங்களுடைய | பாவங்களை அறிக்கை செய்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் . 

நித்திய வாழ்வில் நான் ஆண்டவராகிய இயேசுவுட னிருக்கும்போது நீங்கள் என்னை வந்து சந்திக்க வரவேண்டும் . உங்கள் பேரிலும் கிறிஸ்துவின் பேரிலும் உள்ள அன்பினிமித்தம் இதைச் செய்கிறேன் " என்று கூறி , தான் வைத்திருந்த சீட்டை அவர் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார் . 

மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாக இருந்தவர் கப்பல் மூழ்கியபோது கடலில் மூழ்கி மரித்தார் . மரணத்தைச் சந்திக்கப் பயந்தவர் படகில் ஏறி உயிர்தப்பினார் . ஆனாலும் அவருடைய தியாகச் செயல் தப்பித்த இவரை உருக்கிற்று . எனக்காக ஜீவனைக் கொடுத்தாரே ! இதைவிடப் பெரிய தியாகம் என்ன இருக்க முடியும் ! “ கிறிஸ்துவின் அன்பினிமித்தம் இதைச் செய்கிறேன் ” என்று சொன்னாரே ! முழு மனுக்குலத்தின் பாவத்திற்காக , பாவத்தையும் பாவத்தின் தண்டனையாகிய மரணத்தையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் கொடிய மரணத்தை ஏற்றாரே ! என்றெல்லாம் அவர் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார் . தன்னுடைய பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு இயேசு கிறிஸ்துவின் அதரிசனமான கரங்களில் விழுந்தார் . பாவத்தின் அழிவுக்குத் தப்பித்துக்கொண்டார் . 

அவர் எப்பொழுதும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது “ எனக்காக இரண்டுபேர் மரித்தார்கள் ஆகவே நான் பிழைத்திருக்கிறேன் ” என்று கூறுவார் . அந்த இருவர் யார் ? ஒருவர் நமது பாவங்களுக்காக மரித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து , மற்றவர் தன்னுடைய இடத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு கடலில் மூழ்கி மரித்த அந்த மனிதர் . இத்தியாக அன்பினைச் சிந்தித்துப்பாருங்கள் . 

“ நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது ; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான் . நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் ” ( ரோம .5 : 7,8 ) .



233 இரட்சிப்பை ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை ? 

நாம் இருவரும் துவக்கப்பள்ளியில் சந்தித்தோம் . உனக்கு நினைவிருக்கிறதா ? முதலில் நீ என்னை விரும்பவில்லை . ஏனெனில் உன் தாயைக் குறித்து குறைவான ஒரு வார்த்தை நான் சொல்லிவிட்டேன் என்பதற்காக . ஆனால் நான் உனக்கு ஒரு கரடி பொம்மை வாங்கிக் கொடுத்து என்னுடைய தவறுக்காக வருத்தம் தெரிவித்தேன் . கடைசியாக உன்னை உன் வீட்டில் சந்திக்கும்போது கூட அந்த பொம்மை உன் வீட்டிலிருந்தது . 

நாம் இருவரும் பள்ளி நாட்கள் முழுவதும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம் . இல்லையா ? நாம் இருவரும் ஒன்றாகவே வகுப்பறைக்குச் சென்றோம் . வீட்டுப்பாடம் எழுதுவதற்கு நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டோம் . நமது நட்பையும் நாம் விரும்புகிற ஒவ்வொரு காரியத்தையும் நாம் பகிர்ந்துகொண்டோம் . நாம் எதைச் செய்தாலும் ஒன்றாகவே செய்தோம் . நாம் மணலில் வீடுகட்டி பொம்மைகள் வைத்து விளையாடினோம் . உன்னோடு கொண்டிருந்த நட்பு என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மகி்ழ்ச்சியைத் தந்தது தெரியுமா ? நாம் ஒன்றாக சிரித்தோம் , மகிழ்ந்தோம் . உயர்நிலைப்பள்ளிக்கு நாம் வந்தபோது என்னென்ன காரியங்களை யெல்லாம் பேசி மகிழ்ந்தோம் . எந்த சந்தர்ப்பத்திலும் நாம் சண்டை போட்டுக் கொண்டதேயில்லை .

 நம்முடைய பெற்றோர்களைக் குறித்து விளையாட்டுப் போட்டிகளைக் குறித்து , அன்பைக் குறித்து இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்களைக் குறித்தெல்லாம் நாம் பேசியிருக்கிறோம் . நம்மில் யாரும் மற்றவர்களிடம் சொல்லமாட்டோம் என்ற நம்பிக்கையின் காரணமாக சில ஆழமான இரகசியங்களைக் கூட நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் . 

நம்முடைய உயர்வுகளையும் தாழ்வுகளையும் நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளையும் , திட்டங்களையும் குறித்து நாம் எவ்வளவோ பேசியிருக்கிறோம் . உண்மையிலேயே என்னைக் குறித்து உனக்கு அக்கறை உண்டு , கரிசனை உண்டு என்று நினைத்தேன் . எனக்கு நலமானதையே நீ செய்வாய் என்று நினைத்திருந்தேன் . ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது நீ அப்படிச் செய்யவில்லை .

 நேற்று , அதிவேகமாகச் சென்ற ஒரு கார் என் முன்பாக வந்ததுதான் எனக்கு கடைசியாக நினைவிருக்கிறது . என் வாழ்க்கையில் முன் நடந்த யாவும் என் முன்பாக படம் போலத் தோன்றியது . என் பாவங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்தது .

 பிறகு ஒரு பெரும் காரிருள் என்னை மூடிக் கொண்டது . திடீர் காரிருள் . இப்பொழுது நான் உயிரோடில்லை . இருளில் நான் என்றென்றுமாய் ஒழிந்து போய்விட்டேன் . நீ அறிந்திருந்த இரட்சிப்பின் வழியை ஏன் நீ எனக்கு சொன்னதே இல்லை ? ஏன் ? ஏன் ?

 இப்பொழுது நான் மனஸ்தாபப்பட்டு அழுது புலம்புவதைத் தவிர வேறு ஒன்றும் என்னால் செய்யமுடியாது . நாம் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் அல்லவா ? நாம் மற்ற எல்லாக் காரியங்களையும் பேசினோமே ! இப்பொழுது இருளும் வேதனையும் பயமும் , வெட்கமும் என்னை என்றென்றுமாய் சூழ்ந்துகொண்டது . முன்பெல்லாம் என்னை ஆறுதல் படுத்தியிருக்கிறாயே ! இப்பொழுது என்னை ஆறுதல் படுத்தும்படி உன்னை நோக்கிக் கதறுகிறேன் . 

ஆனால் நீதான் இங்கே இல்லையே ! இல்லை , என்னை நீ ஆறுதல் படுத்தவேமுடியாது . உன்னுடைய நினைவு என்னுடைய வேதனையைத்தான் கூட்டுகிறது . ஏன் ? ஏன் ? நான் அழுகிறேன் , புலம்புகிறேன் , கதறுகிறேன் . 

நீ அறிந்திருந்த இயேசுவைக் குறித்து நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை ? நாம் நெருங்கிய நண்பர்களாயிருந்தும் என்னுடைய ஆத்துமாவைக் குறித்து நீ ஏன் கவலைபப்டவில்லை ? என்னை உயிராய் நேசிக்கிறேன் என்றெல்லாம் சொன்னாயே ! உன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள நான் விரும்பமாட்டேன் என்று நீ நினைத்தாயா ? 

நாம் மற்ற எல்லாவற்றையும் ஒன்றாய் பகிர்ந்துகொண்டோமே ! இரட்சிப்பை மாத்திரம் ஏன் நீ என்னோடு பகிர்ந்துகொள்ளவில்லை ? இந்தக் காரியத்தை நீ எனக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டாய் என்பதை எண்ணும்போது என் இருதயமே பிளந்துவிடுவது போலிருக்கிறது . எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது . காரிருள் கவ்வியிருக்கிறது . அக்கினியின் வேதனையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறேன் .

 நித்திய நித்தியமாக எனக்கு இந்த நிலைதான் என்பதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை . இந்தத் தண்டனையை என்னால்தாங்க முடியாது . எனக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் தரமாட்டாயா ? உன்னால் தரமுடியாது . எல்லா நேரத்தையும் நாம் ஒன்றாகவே கழித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் .

 எனக்காக நீ ஜெபம் செய்திருக்கலாமே ? நீ என்னை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி யிருக்கலாமே ? இப்பொழுது தூக்கம் என்பதே இல்லை . எனக்கு ஒரு நல்ல காலம் வரும் என்று கனவுகூட காண முடியாது . எனக்கு விடுதலை என்பதே கிடையாது . நித்திய நித்தியமாய் நான் வேதனைப்படுகிறேன் . எனக்கு எந்த நம்பிக்கையுமில்லை . உண்மையிலே என்மீது அன்பு கொண்டிருக்கிறாய் என்று நான் நினைத்தேன் . என்னைக் குறித்து உனக்கு கரிசனை உண்டென்று நினைத்தேன் . 

எப்படி நீ இரட்சிப்பைக் குறித்து எனக்கு சொல்லாமலிருந் தாய் ? பெற்றோரோடு நீ ஆலயத்திற்குச் சென்றாய் . ஏன் என்னை எப்போதாவது உன்னோடு ஆலயத்திற்கு கூட்டிச் சென்றிருக்கக் கூடாது ? ஏன் எனக்கு ஒரு வேதாகமத்தைத் தந்திருக்கக்கூடாது ? என் ஆத்துமாவைக்குறித்து நீ ஏன் கவலைப்படவில்லை . 

தேவனுடைய வார்த்தை 1998 நவம்பர் 5/5 



234 கடந்தோடுகிறவன் வாசிக்கட்டும்


 பொது இடங்களில் எத்தனையோ எச்சரிக்கை பலகைகள் எழுதி வைத்தாலும் எச்சரிக்கையடைவோர் மிகச்சிலரே . 

கடல் கொந்தளிப்பு குறித்தும் புயல் அபாயம் குறித்தும் வானொலி மூலம் எச்சரித்தாலும் கடலில் மீன்பிடிக்கச் சென்று மூழ்கி மடிவோரும் , கடலில் தத்தளிப்போரும் மிகுதி . 

கனமின் சக்தி எச்சரிக்கை ( Care , High Voltage ) என்பதோடு மண்டையோட்டுடன் இரண்டு எலும்புகளைப் படம் போட்டுக் காட்டினாலும் மின்சாரம் தாக்கி மடிவோருமுண்டு . 

இதேபோன்று இந்தத் தேசத்திற்கு ஆபத்து வரப்போகிறது ' என்ற எச்சரிக்கையைத் தான் ஆபகூக் தீர்க்கதரிசி ஆபகூக் இரண்டாம் அதிகாரத்தில் வலியுறுத்தி கோடிட்டுக் காட்டுகிறார் .

 ஏனென்றால் அப்படிப்பட்ட தரிசனத்தை தேவன் அவருக்குக் கொடுத்தது மாத்திரமல்ல ; “ நீ தரிசனத்தை எழுதி அதைக் கடந்தோடுகிறவன் ( பரபரப்பான வாழ்க்கையிலிருப்பவன் Busy Life ) வாசிக்கும்படிப் பலகைகளில் தீர்க்கமாய் வரை " ( ஆப .2 : 2 ) என்ற கட்டளையையும் கொடுத்திருந்தார் . ஏனென்றால் அந்தத் தரிசனங்கள் நிச்சயமாக நிறைவேறும் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் ( வச .3 ) என்பது தேவனுடைய நோக்கம் . 

என்ன எச்சரிக்கை பலகைகள் எழுதி வைத்திருப்பார் என்று யூகித்துப் பார்த்தால் இரண்டாம் அதிகாரத்தில் 5 ஐயோக்களைக் குறிப்பிடுகிறார் என்று காண்கிறோம் .

தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ ! ( வச .6 ) 

தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் ( Evil Gain ) தேடு கிறவனுக்கு ஐயோ வச .9 ) 

அநியாயத்தினால் நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ ! ( வச .12 ).. “

 தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து , அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு , அவர்களை வெறிக்கப் பண்ணுகிறவனுக்கு ஐயோ ” ( வச .15 ) “

 மரத்தைப்பார்த்து விழியென்றும் , ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ ! ” ( வச .19 ) .

கி.மு .600 வாக்கில் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிற நமக்கும் பொருந்தும் . வாசித்து எச்சரிக்கையடைவோம் .



235  தவறான இரயிலில் ஏறிவிட்டேனே !

 1882 ஆம் ஆண்டு ஒருநாள் ரெவ. பார்ன் ( Rev. Barne ) தன் னுடைய நெருங்கிய நண்பரின் அடக்க ஆராதனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பினார் . ஏதோ யோசனையில் தவறான இரயிலில் ஏறிவிட்டார் . 

டிட்காட் இரயிலில் ஏறுவதற்குப் பதிலாக போய்மிங்ஹாம் செல்லும் இரயிலில் ஏறிவிட்டார் . அவர் பயணம் செய்த இரயில் பெட்டியில் ரெவ . பார்னும் மற்றும் அறிமுகமில்லாத ஒருவரும் மாத்திரமே இருந்தனர் . 

தவறான ரயிலில் செல்கிறோம் என்ற அறிவின்மையால் எந்த பதட்டமுன்றி எதிரில் அமர்ந்திருந்த பயணியுடன் பேச ஆரம்பித்தார் . முதலாவதாக பொதுவான சில காரியங்களைக் குறித்துப் பேசினார் கள் . 

அடுத்து அந்தப் பயணியுடன் தான் தனது நெருங்கிய நண்பருடைய அடக்க ஆராதனைக்குச் சென்று திரும்புவதாகச் சென்னார் . “ நீங்கள் எத்தனை யோ அடக்க ஆராதனையில் கலந்து கொண்டிருப்பீர்கள் இல்லையா ? " என்று கேட்டார் அந்த பயணி . “ ஆம் , உண்மைதான் எத்தனையோ அடக்க ஆராதனைகளில் கலந்து கொண்டிருக்கிறேன் .

 மரணப்படுக்கையில் மரணத்திற்கு மிக அருகாமையிலிருக்கும் அநேகரையும் பல சந்தர்ப் பங்களில் நான் சந்தித்திருக்கிறேன் ” என்று பதிலளித்தார் ரெவ . பார்ன் . 

அந்தப் பயணி சிறிது நேரம் எதுவும் பேசவில்லை . சிறிய இடைவெளிக்குப் பின் “ மிகப்பெரிய பாவங்களைச் செய்த மனிதனை அவன் சாகும் வேளையில் எப்போதாவது பார்த் திருக்கிறீர்களா ? " என்ற கருத்தான தொரு கேள்வியைக் கேட்டார் . இப் படிப்பட்ட கேள்வி மிகவும் இக்கட்டான கேள்வியாக இருந்தது . '

 ஆண்டவரே , இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும் " என்று உள்ளத்தின் ஆழத்தில் ஜெபித்துக்கொண்டார் . " அப்படிப்பட்ட மனிதர்களின் சாவையும் பார்த்திருக்கிறேன் . அவர்களுடைய முடிவு மிகவும் பரிதாபமாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன் . பாவங்களை அறிக்கை செய்து இயேசு கிறிஸ்துவின் மன்னிப்பை பெறாதவர் கள் ' கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் ' ( எபே .2 : 2 ) என்றும் 

மன்னிப்பைப் பெற்றவர்கள்  தேவனுடையப்பிள்ளைகள் ( யோவான் 1:12 )

 என்றும் வேதம் தெளிவாகக் கூறுகிறது . மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஆத்து மாவை நஷ்டப்படுத்தி வருவானா னால் அவனுக்கு ஒரு இலாபமுமில்லை என்றுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் . சாத்தான் எப்பொழுதும் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் ஆத்துமாவை நித்திய அழிவுக்கு நேராய் கொண்டு சென்று நரகத்திற்கு நடத்துகிறான் . சாத்தான் அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லும்போது ஒரு பெரும் மனப் போராட்டத்தையும் , நம்பிக்கையின் மையையும் , குழப்பத்தையும் , கதறு தலையும் காண்கிறோம் . அதே சமயத் தில் தேவனுடைய பிள்ளைகள் மரிக் கும்போது என்னுடைய பரம தகப்பனிடம் செல்லுகிறேன் ' என்ற நிச்சயத்தோடும் நிறைவான சமாதானத் தோடும் செல்வதையும் காணமுடியும் ' என்றார் .

 அந்தப் பயணி மிவும் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார் . ரெவ . பார்ன் மீண்டும் தொடர்ந்தார் . “ சாத்தான் நம்முடைய சமாதானத்தைத் திருடவும் , நம்மை அழிக்கவும் வருகிறான் . ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்கு ஜீவனைக் கொடுக்கவும் , பரிபூரண ஜீவனாகிய நித்திய ஜீவனையளிக்கவும் வந்தார் ( யோவா .10 : 10 ) என்பது நமக்கு எவ் வளவு ஆறுதலான செய்தி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் . எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ , தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான் ; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் ' ( நீதி .8 : 36 ) என்று வேதம் சொல்லுகிறது . வேறுவிதமாகச் சொன்னால் பாவம் செய்கிறவர்களை சாத்தான் தூண்டி தங்களது ஜீவனையே வெறுக்கவைத்து , மரணத்தை விரும்பவைத்து , தற்கொலை செய்யவைத்து , ஆத்துமாக்களை சேதப்படுத்து ” கிறான் என்றார் . 

அந்தப் பயணி மிகவும் தொடப் பட்டவராக “ ஐயா , நான் ஒரு பெரும் பிரச்சனையிலிருக்கிறேன் . நான் இனியும் உயிர்வாழ விரும்பாமல் இன்று என் மனைவியை விட்டுவிட்டு தூர இடத்தில் சென்று தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தோடு சென்று கொண்டிருக்கிறேன் . இப்பொழுது நான் என் தீர்மானத்தை மாற்றிக்கொண்டேன் . உங்களைச் சந்திக்காதிருந்தேனானால் நான் தற்கொலை செய்திருப்பேன் . நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய இருதயத்தை ஊடுருவிச் சென்றது . என் பெற்றோர் என்னை தேவபயத்தில் வளர்த்தனர் . நானோ தேவனைவிட்டுவிட்டு விலகிச்  சென்றுவிட்டேன் . இப்பொழுது நான் உணறுகிறேன் . தேவன் என்னை மன்னிக்கவேண்டும் " என்றார் . 

இரயில் நிலையம் நெருங்கியது . டிட்காட் நிலையம் வந்துவிட்டது என்று அந்தப் பயணியிடம் விடை பெற்றுக்கொண்டு இரயிலிருந்து இறங்கினார் . அப்பொதுதான் தவறான ரயிலில் ஏறிவிட்டோமே என்பது புரிந்தது . "

 ஆண்டவரே , உம்முடைய கிருபை எவ்வளவு பெரியது ! நான் தவறான ரயிலில் ஏறினாலும் நீர் தவறாதவராய் என்னைப் பயன்படுத்தி உம்மைவிட்டு விலகிச்சென்ற ஒருவரை , கரிசனை யாய் உம்பக்கமாய் மீண்டும் திருப்பினீரே ! உம்முடைய கிருபை எவ்வளவு பெரியது ! "

 தேவனுடைய வார்த்தை 2007 அக்டோபர் 

No comments:

Post a Comment