Friday, 12 June 2020

சிறுகதை 271-280

271              அவர்தான் என் முதலாளி"*


_ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்_ _கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்_  
 _முட்டைகள் அனைத்தும் உடைந்து      விட்டன கூட்டம் கூடி விட்டது_                                                        *வழக்கம்போல்  இலவச உபதேசங்கள்.:.*                                   *பாத்துபோக கூடாதா?* "
" _என்னடா... கவனம் இல்லாம   சைக்கிள்_ _ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்_ 
 _அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே_ !! _அவனது முதலாளிக்கு இவன்தானே பதில்                              சொல்லணும்?_ _ஏதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்_ _இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள

் உபதேசம்_மட்டுமில்ல ஆளுக்கு     கொஞ்சம் பணமும் தருவார்கள்_  _வாங்கிகொள்' என்றார்._ _மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்_ 
 _முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது_  _பையனுக்கு மகிழ்ச்சி அனைவரும் கலைந்து_ _சென்றுவிட்டார்கள்_  
 _அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா_ _உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ என்றார்_                                                         _பையன் சிரித்துக்கொண்டே சொன்னான்  அந்தப் பெரியவர் தான்_                                                                                  *சார் என் முதலாளி"*



272               தேடல்


இவ்வுலகில் வாழ்கின்ற அனைவரும் ஒவ்வொன்றை தேடி செல்கின்றனர். சில பணத்தை தேடி செல்கின்றனர், சிலர் பொருளைத் தேடி செல்கின்றனர் வேறு சிலர் மனம்போன போக்கில் வாழ்கின்றனர். ஆனால் நம் தேவனை மாத்திரம் தேட முடியவில்லை. ஏனெனில் அதற்குரிய நேரம் இருப்பதில்லை. உலக காரியங்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது சிலருக்கோ அதுவும் இல்லை.

எதை தேட வேண்டும்? நாம் தேடுவதால் கிடைக்கும் பலன் என்ன? என்பதை இக்கதையின் மூலம் காண்போம்.....


பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர்.

மூத்தவன் கூர்ங்கண்ணன். கூரிய பார்வையுடையவன். 

அடுத்தவன் நற்செவியன். எவ்வளவு சிறிய ஒலியையும் கேட்டு அது எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது, யாருடையது என்று கூறிவிடுவான்.

 மூன்றாவது மகன் வல்லவன். புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுடனும் சண்டையிட்டு வெல்லக் கூடியவன். 

நான்காவது மகன் மிகவும் சிறுவன்.

ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தந்தை வீட்டுக்குத் திரும்பவில்லை. பிள்ளைகள் அனைவரும் வருத்தப்பட்டனர். ஆனால் ஒருவருக்காவது தந்தையைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தந்தை வந்துவிடுவார் என்று நம்பிப் பேசாமல் இருந்துவிட்டனர். சில நாட்களில் காட்டு மிருகங்களால், தந்தை அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்.

கடைக்குட்டி மகன் மட்டும் அப்பா எங்கே? என்று கேட்டு அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று தனது சகோதரர்களை நச்சரிக்க ஆரம்பித்தான்.

அவனது தொந்தரவைத் தாங்கமுடியாமல் அண்ணன்மார் மூவரும் தந்தையைத் தேடிப் புறப்பட்டனர்.

காட்டுக்குள் சென்று கொண்டிருந்தனர். கூர்ங்கண்ணன் சில காலடித் தடங்களைப் பார்த்தான். “”இது நமது தந்தையின் காலடித் தடம். இந்த வழியாகத்தான் அப்பா சென்றிருக்க வேண்டும்” என்றான். மேலே சென்றனர்.

இப்பொழுது அடர்ந்த அந்தக் காட்டுக்குள்ளிருந்த மெல்லியதாக ஒரு குரல் கேட்பதாக நற்செவியன் கூற, இன்னும் முன்னேறிச்சென்றனர்.

அங்கே புலி ஒன்றுடன் தந்தை சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். உடனே மூன்றாவது மகன் வல்லவன் பாய்ந்து, புலியுடன் சண்டையிட்டு அதைக் கொன்று, தந்தையைக் காப்பாற்றினான்.

அனைவரின் கண்களிலும் ஆனந்தம் பொங்கியது. தந்தையுடன் வீடு திரும்பினர்.

வீட்டுக்கு வந்ததும் கூர்ங்கண்ணன்,”"நான் அப்பாவின் காலடித் தடங்களைக் கண்டதால்தான் அவரை மீட்டுக் கொண்டு வந்தோம்” என்றான்.

நற்செவியன் கூறினான், “”நான் அப்பாவின் குரலைத் துல்லியமாகக் கேட்டதால்தான் அவரைக் காப்பாற்ற முடிந்தது!”

“”நான் என் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்தப் புலியுடன் சண்டை செய்யவில்லையென்றால் அப்பாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது!” என்று தோளைத் தட்டிக் கொண்டு கேட்டான் வல்லவன்.

கடைக்குட்டி மகன் சொன்னான், “”அப்பாவைத் தேடுங்கள், தேடுங்கள் என்று நான் உங்களைத் தொந்தரவு செய்திருக்காவிட்டால் நீங்கள் எப்படி அப்பாவைக் கண்டுபிடித்திருப்பீர்கள்” என்று.

உண்மையும் அதுதானே! தேடினால்தானே கண்டடைய முடியும்?

என் அன்பு வாசகர்களே,
எந்த ஒரு காரியமும் தேடினால் தான் கிடைக்கும் என்பதே இக்கதையின் கருத்து.

இக்கதையில் வருவதுபோல் நமக்கு ஒரு ஆசை ஒரு ஏக்கம் இருந்தால் மட்டும் தான் நாம் தேவனை தேடுவோம். இல்லையென்றால் அந்த நேரத்தை வேறு எதுவது ஒரு‌ காரியத்தில் செலவிடுவோம். அப்படி செய்வதால் நாம் தேவனை தேடும் போது அவர் நமக்கு தென்படுவதில்லை.

நமக்கு ஒன்றுமில்லாத சமயத்தில் தேடுவதில் எந்த பயனுமில்லை. எல்லாம் இருக்கின்றன சமயத்தில் தேவனை முழு இருதயத்தோடும் தேடுவது தான் உண்மையான கிறிஸ்தவம் அதை தான் வேதம் இவ்வாறு கூறுகிறது


முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

மத்தேயு 6:33

எனவே நாம் ‌தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுவோம் ஆசீர்வாதத்தை கூட பெற்றுக் கொள்வோம்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:9

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!



273         உயிர் இருக்கும் வரையே

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார்.
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இறந்தவரின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..

”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்



274           ஜெபமின்மை

நற்செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பாவத்தைக் குறித்து அறிவிக்கப் போகிறேன் என்று விளம்பரப்படுத்தினார். குறிப்பிட்ட இடத்தில் திரளான மக்கள் கூடி விட்டனர். 'எதை மிகப்பெரிய பாவம் என்று சொல்லப் போகிறார்' என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிக்கவர்களாக இருந்தனர். 

அமெரிக்காவில் நடக்கும் தொடர் கொலைகளைக் குறித்துப் பேசுவாரோ என்று சிலர் நினைத்தனர். போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தைக் குறித்து சொல்லப் போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். அமெரிக்காவில் நிலவி வரும் பலவிதமான ஒழுக்க கேடுகளை குறித்து, பேசப் போகிறாரோ என்று சிலர் நினைத்தனர். இவ்விதமான எதிர்பார்ப்போடு மக்கள் கூடியிருந்தனர்.

நற்செய்தியாளர் பிரசங்கிக்க ஆரம்பித்தார். ஜெபமின்மையே அமெரிக்காவில் நடக்கும் எல்லாப் பாவங்களுக்கும் காரணம் என்பதை முக்கியப்படுத்தி பேசினார். மக்கள் ஜெபிக்காதபோது, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதி  மேற்கொள்ளுவான். 

இந்நிலை தொடரும்போது, சாத்தான் குறிப்பாக இளைஞர்களை துணிகரமான பாவங்களை செய்யத் தூண்டுவான். குடும்ப நல் உறவுகளை  உடைத்து சிதறடிப்பான். குடும்ப ஐக்கியம் குலைக்கப்படும், குழப்பங்கள் உருவாகும், பிரச்சனைகள் பெரிதாகும், இதை தொடர்ந்து எல்லாவித பாவங்களும் உட்பிரவேசிக்கும் என்று விளக்கினார்.

ஆம், நாம் ஆலய ஆராதனையில் கிரமமாய் பங்கெடுப்பது குறித்தோ, வைராக்கியமாய் ஊழியம் செய்வதைக் குறித்தோ சாத்தான் கவலைப்பட மாட்டான். ஆனால் நாம் எந்த அளவு ஜெபத்தில் கவனமாயிருக்கிறோம் என்பதைப் பார்த்தால் சாத்தான் கலங்கி விடுவான். 

சாத்தானுடைய அம்புகள் ஜெபத்தைத்தான் குறி வைக்கின்றன. நாம் ஜெபிக்காமல், ஊழியம் செய்யலாம், ஜெப ஜீவியம் இல்லாதவர்கள் தேவனை ஆரவாரமாய் ஆராதிக்கலாம். தேவனோடு ஜெபத்தின மூலம் நெருங்கிய உறவு வைத்திராமல் நாம் செய்யும் அனைத்தும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை நன்கு அறிந்த பிசாசானவன் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணமாக ஜெபத்தையே குறி வைக்கிறான். 

ஜெபத்தை தடுப்பதற்கே எல்லாவிதத்திலும் முயற்சி செய்வான். அந்த ஜெபத்தை தடுத்து விட்டால், எல்லாவித பாவத்தையும் உட்புகுத்தி விடலாம், மனச்சாட்சியை மழுங்கச் செய்து இதயத்தை உணர்வற்றதாக்கி விடுவதுதான் அவனது நோக்கம். 'ஜெபமே முக்கியம்' 'ஜெபமே ஜெயம்' ஜெபமே பாவத்திலிருந்து நம்மை தப்புவிக்கும்' என்றெல்லாம் சொல்கிறோம், பாடுகிறோம் இன்றிலிருந்து நாம்; ஜெபிக்க ஒரு தீர்மானம் எடுப்போமா? நாம் ஜெபிக்கும்போது, கிறிஸ்தவ ஒழுங்கிற்காகவோ, கடமைக்காகவோ செய்யலாம், அல்லது தகப்பன் பிள்ளை உறவோடு ஆண்டவரோடு பேசலாம், அதாவது நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறதோ அதனை அப்படியே அவரிடம் கொட்டி விடுவதாகும். 

ஜெபம் வெறும் வார்த்தைகளாய் இராமல் இருதயத்தின் ஏக்கமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஜெபம் உயிருள்ளதாகவும், சிறுபாவம் இருதயத்தில் நுழைந்தாலும் அதை உணர்த்துவதாகவும், தேவனோடுள்ள உறவை கட்டி எழுப்புவதாகவும் இருக்கும்.

பிரியமானவர்களே, குடும்ப ஜெபத்திலும் குழு ஜெபத்திலும் திருப்தி அடைந்து நின்று விடாதீர்கள்.  ஒரு அதிகாரியிடம் குழுவாக சென்று ஒரு விண்ணப்த்தை சொல்வதற்கும், தனியாக சென்று உள்ளத்தில் உள்ளதை உணர்வு பூர்வமாக சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? அதுபோல தனி ஜெபமே ஒருவனை தேவ உறவில் வளரச்செய்து பாவத்தை சுட்டிக்காட்டி கண்ணிகளில் விழாமல் சோதனைக்கு தப்பிக்க வழிவகுக்கும். ஜெபமே நமது உயிர் மூச்சாக இருக்கட்டும், ஜெபமே நம் ஜீவனாக மாறட்டும். ஆமென், அல்லேலூயா. (1 சாமுவேல் 12:23). 



275         உங்கள்_தைாியத்தை 
                   விட்டுவிடாதீா்கள். . 

முன் ஒரு காலத்தில் சாந்தவர்மா என்ற அரசன் திருவஞ்சூர் என்ற சிறிய நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.

சாந்தவர்மா மிகவும் நல்லவன். நீதிக்குக் கட்டுப்பட்டவன். அநியாயம் செய்பவர் யாராக இருந்தாலும் அவனைக்கொன்று விடுவான். 

மக்களுக்கு நல்ல ஆட்சி அளிக்க வேண்டும், நாட்டு மக்கள் பயமின்றி சுபீட்சமாக வாழவேண்டும். அதுதான் அவனது லட்சியம். 
அந்த லட்சியத்துக்காக உயிர் கொடுக்கவும் தயங்க மாட்டான். 

அம்மன்னனை மக்கள் மிகவும் அன்புடன் நேசித்தனர். அமைதியாக இருந்த மக்களுக்குத் திடீரென சோதனை ஏற்பட்டது.

திருவஞ்சூர் நாட்டில் ஒரு மந்திரி இருந்தான். அவன் பெயர் கேளுத்தம்பி. கேளுத்தம்பி மிகவும் கொடியவனாக இருந்தான். அவன் அரசனுக்குத் தெரியாமல் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இந்த சமாச்சாரம் தெரிந்த போது நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஒருநாள் மந்திரி கேளுத்தம்பியை அழைத்து அரசன் ஆத்திரப்பட்டான்.

"என் நாட்டைச் சீரழியச் செய்துவிட்டாய். இனிமேல் இது நடக்காது. நான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போகிறேன்,"  என்று கூறிக்கொண்டு எழுந்தான் அரசன். ஆனால் கொடியவனான மந்திரி ஏற்கனவே சேனாதிபதி போன்ற பொறுப்புள்ள அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டான். அரசன் எழுந்தவுடன் மந்திரி அரசன் மீது பாய்ந்து சண்டை போட்டான்.

அரசனும் கடுமையாகச் சண்டையிட்டும் பலனில்லை. மந்திரியும் சேனாதிபதியும் சேர்ந்து அரசனைக் கொன்று விடுவதற்காக முயன்றபோது அரசன் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடினான். 

அரசனுடன் விசுவாசமுள்ள பத்துப் படை வீரர்களும் நாட்டைவிட்டுத் தப்பி ஓடினர்.அரசன் போனதும் மந்திரி கேளுத்தம்பி அரசன் ஆன செய்தி கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இனிமேல் அவன் தங்களைக் கொடுமைப்படுத்துவானோ என்று நினைத்து மக்கள் பயந்து நடுங்கினர். மக்கள் பயந்ததைப் போல் கொடுங்கோல் ஆட்சி மக்களைத் துன்புறுத்தியது.இளைஞர்களும் பெண்களும் புதிய ஆட்சிக்குப் பயந்து வீடுகளில் இருந்து வெளியே தலை காட்டவே பயந்தனர்.

நாட்டை விட்டுத் தப்பி ஓடிய சாந்தவர்மாவும் பத்து வீரர்களும் காட்டுக்குள் புகுந்தனர். வெகுதூரம் நடந்ததால் அனைவரும் சோர்வடைந்தனர். பசி அவர்களை வாட்டியது. பசியால் துவண்டு போன அவர்களால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. இரவு வந்தது பசியும் தாகமும் அவர்களைத் தாக்கியதால் இரவில் நடக்க முடியாமல் அனைவரும் மரத்தடியில் படுத்துக் கொண்டனர். 

சோர்வடைந்த அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டனர். காலையில் சூரிய ஒளி
முகத்தில பட்டுச் சூடேறியபோது அனைவரும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டனர். அப்போது சற்றுத் தொலைவில் பெரிய அரண்மனை போன்ற வீடு ஒன்று
தெரிந்தது. 

அதைக் கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த வீட்டிற்குச் சென்றால் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற ஆவலில் அவர்கள் அந்த வீட்டை நோக்கி நடந்தனர்.அது ஒரு செல்வந்தரின் அரண்மனை. அரசனும். வீரர்களும் அந்த வீட்டுக்குச் சென்று வாசலில் காத்திருந்தனர்.

அப்போது ஒருவன் வெளியே வந்தான். அவனைப் பார்த்த அரசன் “சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டது. எனவே சாப்பிட
ஏதாவது கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். 

அதைக் கேட்ட அவன் அனைவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டான். சற்று நேரத்தில் கொடுவாள் மீசையுடன்
கம்பீரமாகக் காட்சியளித்த ஒருவன் வெளியே வந்தான்.அவன் முகத்தில் கருணை என்ற குணம் மருந்துக்குக் கூட இல்லை.  

அவன் அரசன் மற்றும் வீரர்களைக் கண்டு மெளனமாக "உம் என்ன வேண்டும்?” என்று கேட்டுவிட்டு பக்கத்தில் இருந்த நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்தான்.

"ஐயா; நாங்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறோம் ஆகாரம் ஏதாகிலும் கொடுத்தீர்களானால் நன்றியுடையவர்கள் ஆக இருப்போம்". பல நாட்கள் சாப்பிடவில்லை. எனவே ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றான் அரசன். 

அதைக் கேட்ட வீட்டுக்காரன் பலமாகச் சிரித்தான். “யோவ் இது என்ன தர்மசத்திரமா வர்றவங்களுக்குத் எல்லாம் தண்டச் சாப்பாடு போடுவதற்கு?” என்று அரசனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். "ஐயா பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பது ஆண்டவனுக்குச் செய்யும் பணி அல்லவா?.

எங்களைப் பசி வாட்டுகிறது, ஏதாவது கொஞ்சம் சாப்பாடு கொடுங்கள்” என்று கெஞ்சினான் அரசன். அதைக்கேட்ட மீசைக்காரன் மீண்டும் பலமாகச் சிரித்தான். "இத பாருங்க உங்களுக்கு எல்லாம் சாப்பாடு போடுமளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனவே அதோ அந்த வீட்டுக்குப் போங்க. அந்த வீட்டில் பெரிய பணக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு சென்றால் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தங்கிவிடலாம்" என்று யோசனை கூறினான் அவன். அதைக் கேட்ட அரசனும் படை வீரர்களும் அந்த வீட்டை நோக்கி விரைந்தனர்.

அந்த வீட்டுக்குச் சென்ற அரசன் அந்த வீட்டை நோட்டமிட்டான். அந்த வீட்டைப் பார்த்தால் பணக்காரர்களின் வீடாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு காலத்தில், பணக்காரர்களாக  வாழ்ந்த குடும்பம்தான் என்று முடிவு செய்தான். வீட்டு வாசலுக்கு சென்ற அரசன். "இங்கே யாரும் இல்லையா?” என்று கேட்டான். சற்று நேரத்தில் இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். வீட்டுக்கு வெளியே சிலர் நின்றிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். “என்ன வேண்டும்?, நீங்கள் எல்லோரும் யார்?” என்று கேட்டான் அந்த இளைஞன்.

அரசன் நடந்ததைக் கூறித் தங்களுக்கு உணவு வழங்கும்படி கேட்டுக் கொண்டான். அத்துடன் தங்களை இங்கே அனுப்பி வைத்தவர் பக்கத்து வீட்டுக்காரர்தான். என்றும் கூறினான். 

அதைக் கேட்ட இளைஞன் அந்த வீட்டைப் பார்த்தான். தான் ஏழையாகி விட்டதால் தன்னைக் கிண்டல் செய்வதற்காகதான் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறான். பசியாக வந்தவர்களுக்கு உணவு போட வேண்டுமே என்று நினைத்துக் கவலைப்பட்டான்.

அதற்குக் காரணம் அவர்களுக்கு உணவு வழங்குவதற்கு அவனிடம் எதுவுமில்லை. அவனும் அவன் தாயாரும் பட்டினியாக இருந்த போதுதான் அரசனும் படை வீரர்களும் வந்திருக்கிறார்கள். "நீங்கள் சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டதால்,சற்று நேரத்தில் உணவு வழங்குகிறேன். அதுவரை! பொறுமையாக இருங்கள்," என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் இளைஞன். 

இளைஞன் தங்களுக்கு உணவு வழங்கச் சம்மதித்துவிட்டதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்ற இளைஞனிடம், "மகனே நீ என்ன இப்படியா மடத்தனமாகப் பேசுவது. பதினோரு பேருக்குச் சாப்பாடு போட இங்கே வசதி உண்டா? இன்று நாம் கூடப் பட்டினியாக இருப்பது உனக்குத் தெரியாதா?"என்று தாயார் கேட்டாள்.

"அம்மா! அப்பாவைக் கொன்று நமது சொத்துக்களை அபகரித்த பக்கத்து வீட்டு நீலகண்டான் இருக்கிறானே. அவன்தான் இவர்களை அனுப்பி வைத்து இருக்கிறான். 
நமது ஏழ்மையை அவன் இப்படி கிண்டல் செய்து இருக்கிறான்” என்று கண்கலங்க கூறினான் இளைஞன். "மகனே நாம் இவர்களுக்கு எப்படி சாப்பாடு போடுவது?" என்று வியப்புடன் கேட்டாள் தாயார்.

“அம்மா என்னிடம் அப்பாவின் தங்கச் சங்கிலி இருக்கிறதே. அதை விற்று அந்தப் பணத்தில் உணவு போடுவோம், இது நமது மானப்பிரச்சினை மட்டுமல்ல. பல நாட்கள் பசியால் துவண்டு போனவர்களுக்கு உணவு அளித்தால் ஆண்டவன் நம்மைக் கட்டாயம் காப்பாற்றுவார்" என்றான் அவன்.

அவன் வெளியே சென்று அரசனிடம் 
"ஐயா சற்று நேரம் உட்காருங்கள். நான் உடனே வருகிறேன். உங்கள் பசியைப் போக்குவதுதான் என் லட்சியம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அப்போது அரசனும் மற்றவர்களும் மரத்தடி நிழலில் படுத்து ஓய்வு எடுத்தனர்.

இளைஞனும் தாயாரும் தடல்புடலாகச் சமையல் செய்து முடித்தனர். பிறகு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி சாப்பிடும்படி  சொன்னார்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார்கள். “ஆகா அருமையான சாப்பாடு" என்று அரசனும் மற்றவர்களும் பாராட்டினர். அதைக் கேட்ட தாயாரும்,இளைஞனும் மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் சாப்பிட்ட பின் எழுந்தனர்.

 "தம்பி உனக்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை? நீங்கள் சாப்பாடு போடாமல் இருந்திருந்தால் இந்நேரம் பசியால் செத்து இருப்போம். எனவே உங்களுக்குப் பாிசளிக்க என்னிடம் இந்த வாளைத் தவிர ஒன்றும் இல்லை, என்று கூறி தன்னிடமிருந்த வாளை இளைஞனுக்குப் பரிசாக வழங்கினான் அரசன். “இந்த வாளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?” என்று கேட்டான் இளைஞன். 
"இந்தவீட்டைப் பார்த்தால் ஒரு காலத்தில் நீங்கள் செல்வந்தர்கள் ஆக இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. எனவே நீங்கள் இழந்த செல்வங்களை இந்த வாளை வைத்துக் கொண்டு திரும்பப் பெறலாமே! என்றான் அரசன். அப்போது தான் இளைஞனுக்குத் தன் தந்தையைக் கொன்று சொத்துக்களைப் பறித்த பக்கத்து வீட்டு நீலகண்டன் பற்றிய நினைவு வந்தது. "நான் ஒருவன் மட்டும் இந்த வாளுடன் சென்றால் எப்படி இழந்த செல்வத்தை திரும்பப் பெற முடியும்?" என்று கேட்டான் இளைஞன்.

அதைக்கேட்ட அரசன், “இளைஞனே உங்களுடன் நானும் என் பத்துப் படை வீரர்களும் வருகிறோம். என்று, கூறினான். இளைஞனுக்குத் தெம்பு வந்தது. அவன் தாயாரைப் பார்த்தான், அவள் பார்வை மகனுக்குத் தைரியம் கொடுத்தது. 
இளைஞர் பக்கத்து வீட்டு நீலகண்டன் என்ற துரோகியைப் பார்த்தான். அவன் வீட்டு வாசலில் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தான். ஒரு காலத்தில் இளைஞனின் தந்தையிடம் கையாள் ஆக இருந்த நீலகண்டன் சூழ்ச்சி செய்து சொத்துக்களை முழுவதும் அபகரித்தான்.

நீலகண்டன் தன் சொத்துக்களை அபகரித்து விட்டானே என்று கவலைப்பட்டார் இளைஞனின் தந்தை. ஒருநாள் இதைப்பற்றி நீலகண்டனிடம் கேட்டார் தந்தை. அதைக் கேட்டதால் நீலகண்டனுக்குக் கோபம் வந்தது.அவன் வாளை உருவி இளைஞனின் தந்தையைக் கொன்று விட்டான்.

பிறகு இளைஞனையும் அவன் தாயாரையும் அரண்மனை போன்ற வீட்டிலிருந்து விரட்டி அடித்தான். இந்த நிகழ்ச்சி அனைத்தும் இளைஞன் மனதில் திரைப்படம் போல்காட்சியளித்தது. அரசன் பரிசளித்த வாளைப் பலமாகப் பிடித்தான். அப்போது அவனுக்குத் தைரியம் வந்தது. தான் வீரன்தான் என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் வாளுடன் நீலகண்டன் வீட்டை நோக்கி ஓடினான்.

அதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான் நீலகண்டன். "சின்னப் பையனுக்கு இவ்வளவு திமிரா? இவனையும் இவன் தந்தையைப் போல மேல் உலகத்துக்கு அனுப்ப வேண்டும்!" என்று கத்திக் கொண்டே இளைஞன் மீது பாய்ந்து தாக்கினான். இளைஞன் அரசன் பரிசளித்த வாளால் நீலகண்டனுடன் கடுமையாக மோதினான். அப்போது வேறு பல அடியாட்களும் ஆயுதங்களுடன் அங்கே வந்து சண்டையில் கலந்து கொண்டனர்.

அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த அரசனும், படைவீரர்களும் களத்தில் குதித்தனர். சண்டை மூண்டது.சிறிது நேரத்தில் நீலகண்டன் இளைஞனால் கொல்லப்பட்டான்.மற்ற அடியாட்களும் கொல்லப்பட்டனர். இளைஞன் வெற்றி பெற்றுவிட்டான். அவன் தந்தையின் சொத்துக்களை மீட்டான். அரசனுக்கு மற்ற படை வீரர்களுக்கும் நன்றி சொன்னான். பிறகு அவனும் தாயாரும் பழையபடி சீரும் சிறப்புமாக வாழத் தொடங்கினர். தாங்களும் தங்கள் வீரர்களும் எங்களுடன் தங்கி விடுங்கள் என்று அரசனிடம் கூறினான். “மகனே எனக்கு இன்னும் பல வேலைகள் உண்டு. நான் இழந்த என்னுடைய திருவாஞ்சூர் நாட்டைத் திரும்பப் பெறவேண்டும். உன்தந்தையை ஒரு கயவன் விரட்டியதுபோல் என்னை என் மந்திரி விரட்டினான். அவன் நாட்டு மக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறான். அவனை விரட்டி மக்களைக் காப்பாற்றுவது என் கடமை. 

எனவே உன் வேண்டுதலைக் கேட்டு இங்கே தங்க முடியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினான் அரசன். "மன்னா உங்கள் லட்சியம் நிறைவேற நானும் உதவுகிறேன். என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்," என்றான் இளைஞன். 

"வீரனான நீ இதுவரை கோழையாக இருந்துவிட்டாய். ஆனால் இன்று நீ வீரனாகி விட்டாய். எனவே உன்னை அழைத்துச் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றான் அரசன்.

"கோழையாக இருந்த என்னை வீரனாக்கிய பெருமை தங்களைச் சாரும், தாங்கள் விருந்துக்கு வரவில்லை என்றால் நான் இன்னும் கோழையாக இருந்து வறுமையில் வாடிக்கொண்டு இருந்திருப்பேன்.  எனவே நீங்கள் அளித்த வீரம் உங்களுக்கே பயன்படட்டும்" என்றான் இளைஞன்.
அவன் தாயாரிடம் விடை பெற்று அரசனுடன் புறப்பட்டான்.

திருவாஞ்சூர் நாட்டுக்கு இளைஞன் மற்றும் படை வீரர்களுடன் சென்ற அரசன் தன் நண்பரின் வீட்டில் ரகசியமாகத் தங்கினான். 

"நண்பனே நாட்டு நிலவரம் எப்படி இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டான் அரசன்.
"நிலமை படுமோசம், மக்கள் அனைவரும் மந்திரி கேளுத் தம்பியால் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!”என்று வருத்தத்துடன் கூறினான்.

அதைக்கேட்ட அரசன் சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டான். "நான் என் நாட்டை உடனே பிடித்துவிட வேண்டும். அதற்காக நம்மீது விசுவாசம் உள்ள படை வீரர்களைத் திரட்ட வேண்டும்."என்றான் அரசன். “அப்படியே செய்கிறேன். நான் இப்போதே யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் அரண்மனைக்குச் செல்கிறேன்," என்றான் நண்பன். 

அவன் அரண்மனைக்குச் சென்று தன் நண்பன் ஒருவனை அழைத்து ரகசியமாகப்
பேசினான். அரசன் வந்துவிட்டதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் மீது விசுவாசம் வைத்துள்ள அனைத்துப் படை வீரர்களும் அரசனுக்காக உயிர் விடவும்
தயாராகி விட்டனர். எல்லா ஏற்பாடுகளும் முடித்துவிட்டபின் அரசன் தன் படை வீரர்களையும் இளைஞனையும் அருகில் அழைத்து "நாம் போருக்குப் புறப்படும் நேரம் ஆகிவிட்டது.எனவே உடனே புறப்படுங்கள். யாரும் மந்திரியின் படைபலம் கண்டு அஞ்சக் கூடாது" என்றான். அனைவரும் புறப்பட்டுவிட்டனர். 

மந்திரி எதிர்பாராத வேளையில் படை வீரர்களும் வீராவேசமாகப் போரிட்டனர்.
பெரும்பான்மையான படைவீர்கள் அரசனுக்காகப் போராடத் தொடங்கினர். மந்திரியும் சேனாதிபதியும், கடுமையாகப் போரிட்டும் பலனில்லை. பலமணி நேரம் தொடர்ந்த சண்டையில் மந்திரியும் சேனாதிபதியும் உயிரிழந்தனர். அதைக் கண்டு வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அரசன் சாந்தவர்மா தான் இழந்த
அரச பதவியை மீண்டும் பெற்றான். இளைஞன் அரசனுடன் நின்று வீராவேசமாகப் போரிட்டுப் பல எதிரிகளை வெட்டி வீழ்த்தினான்.

இளைஞனின் வீரம் கண்டு அரசனே ஆச்சரியப்பட்டான்.போர் முடிந்தது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் துள்ளினர். அரசன் இளைஞனை அழைத்து “இளைஞனே உன் வீரம் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். இவ்வளவு திறமைசாலியான நீ சாதாரணக் குடி மகனாக இருக்கலாமா? எனவே இன்று முதல் நீதான் என் மந்திரி. உன்னுடைய அரிய சேவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படட்டும்” என்றான். 

அதைக் கேட்ட இளைஞன் இருகரம் கூப்பி அரசனை வணங்கினான்..

என் அன்புக்குாியவா்களே, 
நமக்குத் தெரியாமல் பல திறமைகள் நம்மிடம் உறங்கிக் கிடப்பதுண்டு. அதைப் பிறர் சுட்டிக்
காட்டிய பிறகுதான் நாம் உணருகிறோம். உணர்ந்த பிறகு நமது திறமைகளை மேலும் சீரடையச் செய்வது நமது கடமை ஆகும்.

கோலியாத் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாய் படைபெலத்தோடு நிற்கையில்  இஸ்ரவேல் படைவீரா்களும், ராஜாவும் பயந்து ஓடினாா்கள் 
அவா்களுக்கு  ராட்சதனாகிய கோலியாத்தோடு போாிட  முடியவில்லை.  அவன் ஒரு பெரிய ராட்சதன். 

தாவீது என்ற ஏதேச்சையாய் இராணுவத்தில் பணியாற்றிய தன்சகோதரா்களை காண வந்த போது அவன் கோலியாத்தின்  கொக்காிப்பைக் கேட்டான். அவனுக்குள் பயம் வரவில்லை.  

அதற்கு பதிலாக அவனுக்குள் இருந்த பக்திவைராக்கியத்தின்  அபிஷேகம் அவனுக்குள் கிாியை செய்தது. தன் கையில் பட்டயம் இல்லாதிருந்தும் தன் ஆடு மேய்க்கும் போது வைத்திருக்கும் கவணையும் கூழாங்கல்லையும் எடுத்துகொண்டு கவணில் கல்லை வைத்து  அவன் மேல் எறிந்த போது  அவன் நெற்றியில் பட்டு பதிந்துபோய் கீழே விழுந்தான்.  

அவ்ளோ பொிய ராட்சதன் கோலியாத்தை வீழ்த்த ஒரு சிறிய கூழாங்கல்லே போதும். அவன் கீழே விழுந்த போது அந்த ராட்சதனின் பட்டயத்தையே  எடுத்து அவனைக் கொன்றுபோட்டான். 

எனவே அரசன் மீண்டும் அரசவையில் அமர்ந்து ஆட்சிபண்ணினது போலவே  நீங்கள் எதையெல்லாம் இழந்து போனீா்களோ அவைகளையெல்லாம்  கட்டாயம் பெற்றுக் கொள்வீா்கள்.  உங்களுக்குள் இருக்கும் ஆவியானவா் உங்களுக்கு சகலவிதத்திலும் உதவிசெய்வாா் என்பது நிச்சயம்  !!

#நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 


🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

குட்டி இதயங்கள் குட்டிக் கதை 

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

276                ஓட்டத்தின் ராஜா

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . காடே அல்லோல கல்லோலப் பட்டது . எங்கும் அலங்காரங்கள் , விழாக்கோலமாய் அமர்க்களப் பட்டது . 
                ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள் என்று எங்கு பார்த்தாலும் கேளிக்கைகள் . அதிகாலை முதலே விருந்து துவங்கி விட்டது . காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன . 
               வழக்கமாய் சிங்க ராஜாவின் பிறந்த நாளில் இவையெல்லாம் நடப்பது வழக்கந்தான் என்றாலும் , சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்று சிங்க ராஜா வலியுறுத்தியது .
                 ஒவ்வொரு ஆண்டிலும் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
                 இந்த முறை போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க ராஜா ஒரு சிறப்புப் பரிசை அறிவித்தது . முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ' ஓட்டத்தின் ராஜா ' என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக அறிவித்தது . 
                இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ? 
               வருடா வருடம் மான் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம் , பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் . 
" நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ , மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது . ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் " என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
                 கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டு வைத்துப் பார்த்தது . ஆனால் மானின் உறுதியான குளம்புகள் முட்களையெல்லாம் நொறுக்கி விட்டன. ஒருமுறை கல்லை வீசி வைத்துப்பார்த்தது . மான் துள்ளி ஓடியதில் கல் எதுவும் அதன் கால்களில் கூடப் படவில்லை . ஒரு முறை ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . மானின் கால் பட்டு அதுவும் கூழாகி விட்டது .
                 இப்படி எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் எடுபடவில்லை . ஒரு அளவுக்கு மேல் ஏதாவது செய்யப் போய் , மானுக்கு சந்தேகம் வந்து , அது ராஜாவிடம் புகார் சொல்லிப் பிடிபட்டு விட்டால் அவ்வளவுதான் . நரியின் கதை முடிந்து விடும் . எனவே இம்முறை வேறொரு வகையில் யோகித்தது .
                 போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது . பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது . 
                மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது . 
" நண்பா .வழக்கம் போல  இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற . ராஜா கொடுக்கப் போற பரிசு இந்த வருஷமும் உனக்குத்தான் " என்றது 
                மானுக்கு சந்தோஷம் . 
" நன்றி நண்பா " என்றது . பாம்பு சொன்னது ,
" ஒவ்வொரு வருஷமும் நீ ஓடுற அழகைப் பாக்குறதுக்காகவே வந்துடுவேன் . காலே தரைல படாம , காத்துல பறக்குற மாதிரி நீ ஓடுற  ஓட்டம் இருக்கே ! அதுக்கே ஒரு தனிப் பரிசு கொடுக்கணும் . ஒட்டகச்சிவிங்கி ஓடும் பாரு பப்பரப்பான்னு காலைப் பரப்பிக்கிட்டு .  கழுதை ஓடுறதைப் பாரேன் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை தலையைத் தூக்கி காள் காள்னு கத்திக்கிட்டு . நீர்யானை பத்தி சொல்லவே வேண்டாம் . நாலு பேரு ஓட வேண்டிய இடத்துல அது மட்டுமே ஆட்டி ஆட்டிக்கிட்டு ஓடிக்கிட்டு கிடக்கும் . உன்னை மாதிரி விதிமுறையை மதிச்சு , அழகா யாருமே ஓடுறதே இல்லை . நீ வேணா கவனிச்சுப் பாரேன் . சரி. நண்பா போட்டி ஆரம்பிக்கப் போகுது . வாழ்த்துகள் " என்று சொல்விட்டுக் கிளம்பியது .
                 மானுக்கு ரொம்பப் பெருமையாக இருந்ததுடன் , புதிய செய்தியாகவும் இருந்தது . 
" பாம்பு சொன்ன மாதிரி மத்த மிருகங்கள் எப்படி ஓடுதுன்னு பாக்கணும் " என்று நினைத்துக் கொண்டது . 
                பந்தயம் துவங்குவதற்கான மணி ஒலித்தது . மிருகங்களெல்லாம் பரபரப்பாக மைதானத்தில் கூடின . நரி இந்த முறை ஓடுதளத்தில் எந்த சூழ்ச்சியும் செய்யாததால் மானுக்கு அடுத்த ஓடுதளத்தில் நிற்காமல் இரண்டு இடங்கள் தள்ளியே நின்றது . ஓட்டப் பந்தய வீரர்களை உற்சாகப் படுத்தும் விதமாக சிங்க ராஜாவும் கொஞ்ச தூரம் அவைகளுடன் ஓடுவதற்காக அதுவும் வந்து நின்று கொண்டது . யானை பிளிறி ஓட்டப் பந்தயத்தைத் துவக்கி வைத்தது . 
                   மின்னலைப் போலவும் , வில்லில் இருந்து புறப்படும் அம்பு போலவும் மிருகங்கள் பாய்ந்து ஓடின . மானும் தன்னுடைய வழக்கமான வேகத்தை ஆரம்பித்தது . சிறிது நேரம் ஓடிய பின் பாம்பு சொன்னது நினைவுக்கு வந்தது . சொல்லி வைத்தாற்போல அதற்கு இந்தப் பக்கம் காண்டா மிருகமும் , அந்தப் பக்கம் ஒட்டகச்சிவிங்கியும் ஓடிக் கொண்டிருந்தன .
               பாம்பு சொன்னது சரிதான் . இரண்டுமே ஓடுவது ஒரு ஒழுங்கே இல்லாமல் வேடிக்கையாகத்தான் இருந்தது . சற்று தொலைவில் கழுதையும் கண்ணில் பட்டது . அதுவும் பாம்பு சொல்லியிருந்தபடியே அவ்வப்போது கனைத்தபடியேதான் ஓடிக் கொண்டிருந்தது . மானுக்கு இவற்றையெல்லாம் பார்த்து அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது . 
                இப்போது மான் , ஓடிக் கொண்டிருந்த எல்லா மிருகங்களையும் நோட்டமிட்டது . எதுவுமே ஒழுங்காகவே ஓடவில்லை . திடீரென்று மானுக்குத் தான் ஓட்டத்தில் பின்தங்கி இருக்கிறோமென்ற உணர்வு வந்தது . பதறியடித்து வேகத்தை துரிதப் படுத்தியது . அதற்குள் சிறுத்தை வெற்றி இலக்கை எட்டிவிட்டது .
                மானுக்குக் கண்கள் எல்லாம் இருண்டுவிட்டது . இத்தனை வருடமாய்க் காத்து வந்த வெற்றிக் கோப்பை பறிபோய்விட்டது . அத்துடன் இந்த ஆண்டில் சிறப்பாய்க் கிடைக்க வேண்டிய கிரீடமும் , விருதும் கூடப் போய்விட்டன . 
              பாம்பும் , நரியும் சிரித்தபடியே தன்னை சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருந்ததை மான் பார்த்தது .  
" பாம்போட பேச்சைக் கேட்டு மத்தவங்க எப்படி ஓடுறாங்கன்னு பாத்து இப்ப என்னோட ஓட்டத்துல தோத்துப் போயிட்டேனே ! "  என்று அழுதபடி , அவமானம் தாளாமல் அந்த இடத்தை விட்டே ஓடிப்போனது .

செல்லமே!
மற்றவர்களின் ஓட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டால் நமக்கான ஓட்டத்தில் தோற்றுப் போவோம் . இந்தக் காலங்களில் சத்துரு இந்த உத்தியைத்தான் கையாண்டு நல்ல ஓட்டக்காரர்களையும் விழத்தள்ளிவிடுகிறான் . 

கலாத்தியர் 6 : 1 சொல்வது போல
" சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு ".
நம்மைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .


" சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள். இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார் ". யாக்கோபு 5 :9.



277                         மன்னிப்பு


ஒரு குடியானவனுக்கு பூமிக்குரிய கடைசி நேரம் வந்தது. போதகர் வரவழைக்கப்பட்டார். அவன் மனைவி, பிள்ளைகள் யாவரும் படுக்கையைச் சூழ நின்று கொண்டிருந்தார்கள்.

போதகருக்கு அந்தக் குடியானவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவனுக்கும், அவன் அயலானுக்கு வயல் நிலத்திலுள்ள எல்லைக் கோடு பற்றி, காலாகாலமாய் சண்டை நடந்துகொண்டு வந்ததை போதகர் அறிவார். 

எனவே, போதகர் மெதுவாய் ஆரம்பித்தார். "ஐயா நீங்கள் உங்கள் அயலானை மன்னிக்க வேண்டும். மன்னித்தால் மட்டுமே, தூய்மையான மனச்சாட்சி உங்களுக்குக் கிடைக்கும்.

"எப்படி மன்னிக்க முடியும்? என் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தை அவன் எடுத்துக்கொண்டானே" என்று பொங்கினான், குடியானவன்.

"நீங்கள் மன்னித்தால், இந்த அரை ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கர்த்தர் பரலோகத்தில் உங்களுக்குத் தந்தருளுவார். மன்னிக்காவிட்டால், நீங்கள் நரகத்திலல்லவா, கஷ்டப்பட வேண்டும்?"

குடினானவன் தன் மகனை அழைத்தான், "மகனே, நான் அயலானை மன்னித்து விடுகிறேன். இல்லாவிட்டால் நரகத்திற்குத் தப்ப முடியாது. ஆனால் நீ மன்னிக்காதே! நீ பெலசாலி, அவனை இரண்டில் ஒன்று பார்த்துவிடு" என்று சொன்ன அவன், போதகரிடம் திரும்பி, "போதகரே நான் அயலானை மன்னித்துவிட்டேன், பரலோகத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கிடைக்குமா?" என்று கேட்டான்.

போதகரோ அந்த மனிதனின் கல்லான இருதயத்தின் நிமித்தம், மிகுந்த வருத்தத்துடன் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.

நீங்கள் மன்னிக்கும் போது, மறந்துவிடும் குணத்தோடு கூட, அன்பு செலுத்தும் சுபாவமும் வேண்டும். கர்த்தர் உங்களை மன்னிக்கும்போது, உங்கள் பாவத்தை கடலின் ஆழத்தில் போட்டு விடுகிறார். அப்படியே நீங்களும் மன்னிப்பீர்களா?

"மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்" (சங்கீதம் 103:12)



278.    காரியங்களை வாய்க்க செய்வார்.  


" *ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது* ". 
 *ஆதியாகமம் 22:14* 

இங்கிலாந்திலே 1904ஆம் ஆண்டில் வால்டர் மார்ட்டின் என்னும் போதகர் ஒருவரின் மனைவி சிவிலா மார்ட்டின் அவர்கள் எழுதிய ஆண்டவர் உன்னை பார்த்துக் கொள்வார் (God will take care of You) என்கிற பாடல் மிகவும் புகழ் பெற்றது. அந்த பாடலை அவர் எழுதியதன் பின்னணி மிகவும் அற்புதமானது. 

ஒரு நாள் வெளியூர் கூட்டமொன்றில் போதகர் செய்தி கொடுக்க வேண்டியதாயிருந்தது. திடீரென்று அவருடைய மனைவி சிவிலா நோய்வாய்ப்பட்டார். போதகர் மனைவியை வைத்தியர்களிடம் காட்டியபோது, அவர்கள் அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறினர். கூட்டத்திற்கு செல்வதா அல்லது மனைவியை பார்த்துக் கொண்டு வீட்டில் இருப்பதா என்று மனக்குழப்பத்தோடு அவர் இருந்தார்.

அப்போது அவரது ஒன்பது வயது மகன் அவரிடம், அப்பா நீங்க்ள தைரியமாக கூட்டத்திற்கு செல்லுங்கள், கர்த்தர் அம்மாவை கவனித்துக் கொள்வார் என்று கூறினான். இந்த வார்த்தை போதகர் வால்டர் மாட்டினை மட்டுமல்ல, வியாதி படுக்கையிலிருந்த அவரது மனைவியையும் பெலப்படுத்தியது.

 மனைவியிடம் விடைபெற்று அவர் கூட்டத்திற்கு பிரசங்கிக்க சென்றார். அவர் திரும்ப வந்தபோது அவரது மனைவி அற்புத சுகத்தை பெற்றிருந்தார்கள். அவரது மனைவி மகன் சொன்ன வார்த்தையின் அடிப்படையில் இந்தப்பாடலை எழுதினர். போதகர் அந்த பாடலுக்கு இசையமைத்தார். அந்த பாடல் இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.
 
என் அருமை தேவஜனமே,  நான் இனி என்ன செய்யப் போகிறேன், என் எதிர்காலம் என்ன என்று திகைத்து, தவித்துக் கொண்டிருக்கிறீர்களோ? நம் தேவனுக்கு யெகோவாயீரே என்ற பெயர் உண்டு. 

அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நாம் கலங்கி நிற்க தேவையில்லை. அந்தந்த நேரம் வரும்போது அவர் அருமையாக காரியங்களை வாய்க்க செய்வார். நம் தேவைகளை, நம் பிரச்சனைகளை, நம் அங்கலாய்ப்புகளை தேவன் பார்த்துக் கொள்வார்.

 அவர் பார்த்துக்கொள்ளும்போது, அவர் கவனித்துக் கொள்ளும்போது நாம் கவலைப்பட வேண்டியது இல்லையல்லவா. எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் கர்த்தரிடம் நம் எதிர்காலங்களை, நம் எதிர்ப்பார்ப்புகளை அர்பணிப்போம். அவர் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றி, ஏற்ற வேளையில் கிருபைகளை கொடுத்து நம்மை வாழ வைப்பார். ஆமென்!


279      உன்னால்_முடியாது_டா

ஒருமுறை சாத்தான் பரிசுத்தவான்களை அழிக்க வேண்டும் என்று முடிவுவெடுத்து, இயற்கையிடம் சென்று முறையிட்டான்.

இயற்கையோ சரி நான் அழிக்கின்றேன் என்றது...

அதினால் இயற்கையானது சூரியனிடம் சென்று சூரியனே 
இந்த பரிசுத்தவான்களை சுட்டெரித்து அழித்து♨விடு என்றது,

அப்பொழுது சூரியன் ஏற்கனவே யோசுவா என்ற ஒரு பரிசுத்தவான் என்னை அசையாமல் ஆடாமல் வானத்தில் ஒரு நாள் முழுவதும் நிற்க வைத்து விட்டான்..

ஆதலால் பரிசுத்தமான மனிதனை என்னால் ஏதும் செய்ய முடியாது என்றது...

இயற்கை கடலிடம் சென்று, 
கடலே நீயாவது, இந்த பரிசுத்தவான்களை அழித்து விடக் கூடாதா ?  என்றது 

அப்பொழுது அது என்னால் முடியாது, ஏற்கனவே மோசே என்ற ஒரு பரிசுத்தவான், சாதாரண ஒரு கோலை வைத்துக்கொண்டு, என்னை 
"இரண்டாகப்" பிளந்ததை, 
நான் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் வழிபடும் நம்மையெல்லாம் படைத்த இயேசு  நாதர் இரையாதே அமைதலாயிரு என ஒரு முறை என்னை அதட்டி அமைதியாக்கி மற்றும் என் மீது நடந்த போனது போதாதென்று
பேதுரு என்ற தன் சீஷனையும் கூட 
என் மேல் நடக்கச் செய்து என் "கொட்டத்தை" அடக்கியது 
எனக்கு இன்னும் மறக்கவில்லை..!!தேவ மனுஷனுக்கு விரோதமாக என்னால் "செயல்பட" முடியாது என்றது..

வேதனையோடு நெருப்பிடம் சென்ற இயற்கை , நெருப்பே உன் எரிக்கும் சக்தியால்இந்த பரிசுத்தவான்களை அழிக்கக் கூடாதா ?? என்றது, 

அப்படி தான் ஒரு முறை சாத்ராக் மேசாக் ஆபத்நேகோ என்ற மூன்று பரிசுத்தவான்களை அழிக்க நினைத்தேன்,ஆனால் என் நெருப்பு வாசனை கூட அவர்கள் மேல் வீசவில்லை, அன்றிலிருந்து பரிசுத்தவான்களை கண்டாலே எனக்கே ஒரு "பயம்" தான் என்றது...!!

இயற்கை மிகுந்த வேதனையோடு மழையிடம் சென்று, மழையே நீயாவது பரிசுத்தவான்களை அழிக்கக் கூடாதா ?? எனக்கு உதவி செய்யக் கூடாதா..???என்றது, 

அதற்கு மழை ஒரு முறை இஸ்ரவேல் தேசத்திற்கு மழையே பெய்யாமல் இருந்து கடும் பஞ்சத்தை உண்டாக்கினேன்,ஆனால் எலியா என்ற ஒரு பரிசுத்தவான் உள்ளங்கை மேகத்தில் என்னை கொண்டு வந்து வெள்ளத்தையே உண்டாக்கி விட்டான், 
பரிசுத்தவான்களை என்னால் ஏதும் செய்ய முடியாது என்றது....!!

அப்பொழுது இயற்கை மிகுந்த கோபம் கொண்டு பரிசுத்தவான்களை அழிக்க வேறு எந்த வழியும் இல்லையா ??அவர்களை அழிக்க முடியவே முடியாதா ?? என்றது ??

அப்பொழுது  சிருஷ்டிகள் யாவும் பரிசுத்தவானை அசைக்கவும் அழிக்கவும் 
 ஒரு நாளும் முடியவே முடியாது. மாறாக அவன் இயேசு என்ற நாமத்தைக் 
கொண்டு நம்மையே அசைத்து விடுவான் 
என்றன.

சேனைகளின் தேவனாகி கர்த்தரையே முழுமனதார விசுவாசித்து, 
அவர் சத்தத்துக்கு செவிக்கொடுத்து கீழ்ப்படிந்து வாழ்ந்து வரும் பரிசுத்தவான்களை, இயற்கையாலும் சாத்தானாலும் எந்த சக்தியாலும் 
அசைக்கவும் முடியாது..!!!, 
அழிக்கவும் முடியாது....

கடவுளுக்காக_சாதிக்க_விரும்பினால் _இந்தப்_பாடலைக்_கேளுங்கள்

https://youtu.be/mFbsdjmgnq0
https://youtu.be/mFbsdjmgnq0
https://youtu.be/mFbsdjmgnq0

நீ தண்ணீர்களைக்கடக்கும்போது 
நான் உன்னோடு இருப்பேன்
நீ ஆறுகளைக் 
கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்
அக்கினிஜுவாலை  உன் பேரில் பற்றாது. 
-- ஏசாயா 43 :2 

*கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ ஊழியர்களுக்கும், அன்பு சகோதர, சகோதரிகளுக்கும், அன்பின் வாழ்த்துக்கள்.* 

    கடைசி கால எழுப்புதலுக்கு நேராகதேவன் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சில காலங்களுக்குள்ளாக (நாட்களுக்குள்ளாக) இந்த தேசம் மாபெரும் எழுப்புதலை சந்தித்தே ஆகும். கர்த்தருடைய ஊழியமும் திருச்சபையும் எலிசாவின் நாட்களை போல இரண்டு மடங்கான வல்லமைகளோடு திரளான தேவ ஜனங்களால் நிரம்பி வழியப்போகிறது.

இந்த தேசம் தாங்கி கொள்ள முடியாத அளவு தேவ ஜனங்களின்    திரட்சியை சந்திக்கப் போகிறது. 
மாபெரும் எழுப்புதலை உருவாக்கக்கூடிய தேவ திட்டத்தில் இளம் ஊழியர்களாகிய நமக்கு பெரும் பங்கை தேவன் நியமித்து வைத்திருக்கிறார்.

 இளம் ஊழியர்களாகிய நாம் இணைந்து ஜெபத்திலே உறுதியாய் தரித்திருக்க வேண்டியது அவசியம். 

   




280     உழைத்து வாழ வேண்டும்

பிரபு என்ற தொழிலாளி வசித்தான். அவன் மனைவி பெயர் ஜீவனா.

 ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தான். தினமும் அவன் தவறாமல் வேலைக்குச் செல்வான். வேலை செய்து கிடைக்கும் கூலியுடன் மாலையில் வீடு திரும்புவான். அதை அவன் மனைவியிடம் கொடுப்பான். 

பிரபுவுக்கு குறைந்த கூலியே கிடைக்கும். ஆனால், அவன் மனைவியிடம் அதற்காக மனம் கோணமாட்டாள். அவள் குறைந்த வருமானத்திலும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தினாள். அவர்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினர். கூலி மிகக் குறைவாக கிடைக்கிறதே என்று பிரபு அடிக்கடி கவலைப்படுவான்.

அவன் மனைவி அவனைத் தேற்றுவாள். ஒரு நாள் பிரபு வேலைக்காக வெளியூர் செல்லத் திட்டமிட்டான். அதை தன் மனைவியிடம் தெரிவித்தான். “”வெளியூர் செல்ல வேண்டாம். இங்கே கிடைக்கும் கூலியை வைத்து சிக்கனமாக வாழலாம்,” என்று கூறிவிட்டாள் மனைவி. 

ஒரு நாள் பிரபு பக்கத்து ஊரில் உள்ள தன் நண்பன் வீட்டுக்கு சென்றான். வீடு திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. பிரபு காட்டு வழியாக தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். எங்கும் நல்ல இருள் பரவிக் கிடந்தது. காட்டில் நின்ற மரங்கள் எல்லாம் பயங்கரமாக ஆட்டம் போட்டன. நெஞ்சு திடுக்திடுக்கென்று கண்ணனுக்கு அடித்தது. அவன் திகிலோடு நடந்து கொண்டிருந்தான்.
     
அப்போது பின்னால் யாரோ சிலர் திமுதிமுவென்று ஓடி வரும் சத்தம் கேட்டது. பிரபு மிகவும் பயந்து விட்டான். பிரபு அஞ்சி நடுங்கினான். வேகமாக ஓடிச் சென்று அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டான். மேலே இருந்து யார் வருகிறார்கள் என்று கவனித்தான்.

 அப்போது சில திருடர்கள் அந்த மரத்தின் அடிக்கு வந்தனர். அவர்கள் ஒரு பெரிய மூட்டையில் பணத்தைக் கட்டி வைத்திருந்தனர். அவர்கள் பேசுவதை பிரபு உற்று கவனித்தான்.
    
 “”நாம் எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பணத்தைக் கொள்ளையடித்தோம். இப்போது நேரம் மிகவும் இருட்டாக இருக்கிறது. எனவே, இந்த பணத்தை ஒரு மரப் பொந்தில் மறைத்து வைப்போம். நாளை காலை வந்து பணத்தை பங்கிட்டு எடுத்துக் கொள்ளலாம்,” என்றான்.மற்ற திருடர்கள் அதை ஆமோதித்தனர்.

 பின்னர் பண மூட்டையை ஒரு மரப் பொந்தில் வைத்து மூடினர். அனைத்து திருடர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.பயம் தெளிந்தது. அவன் மரத்தின் மீது இருந்து திருடர்கள் போய் விட்டார்களா என்பதை கவனித்தான்.

 பின்னர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். திருடர்கள் மரப் பொந்தில் ஒளிந்து வைத்த பண முடிப்பை எடுத்தான். பிரபுவுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.
     
இதற்கு முன் அவன் இவ்வளவு பணத்தை கண்ணால் பார்த்தது கூட இல்லை. இனி வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவன் சந்தோஷப்பட்டுக் கொண்டான். பண முடிப்பைத் தூக்கிக் கொண்டு வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.

வீட்டை நெருங்க நெருங்க மீண்டும் அவனுக்கு பயம் ஏற்பட்டது. திருட்டுப் பணத்தை எடுத்து வந்ததற்கு அவன் மனைவி திட்டுவாளோ என்று பயந்தான். எனவே, வீட்டுக்கு வெளியே ஒரு மூலையில் பண முடிப்பை புதைத்து வைத்தான். 

சில நாட்கள் கழித்து மனைவியிடம் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டான். பின்னர் வீட்டுக்குள் போனான். 

பிரபு வரவுக்காக ஜீவனா கவலையுடன் காத்திருந்தாள். பிரபுவைக் கண்டதும், “”ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டாள்.“”நண்பனிடம் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் ஆகிவிட்டது,” என்று கூறினான்.திருட்டு பணமுடிப்பை எடுத்து வந்ததைப் பற்றி புவனாவிடம் அவன் கூறவே இல்லை. 

பின்னர் சாப்பிட்டுவிட்டு படுத்தார்கள். ஜீவனா தூங்கிய பின் கண்ணன் மெதுவாக எழுந்தான் வெளியே வந்தான். புதைத்து வைத்திருந்த திருட்டு பண முடிப்பை தோண்டி எடுத்தான். அதை வெளிச்சம் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றான். பண முடிப்பை பிரித்தான். பணத்தை வெளியே எடுத்து எண்ணினான், அதில் ஐந்தாயிரம் ரூபாய் இருந்தது.
     
பணத்தை அப்படியே மூட்டை கட்டினான். ஓசைபடாமல் வீட்டுக்குள் சென்றான். பணத்தை ஒரு பானையில் வைத்து மூடினான். பின்னர் சந்தடி செய்யாமல் வந்து படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. பெரும் பணக்காரனாகிவிட்ட மகிழ்ச்சியில் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அந்த பணத்தை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே பொழுதை கழித்தான்.

மறுநாள் காலையில் எழுந்ததும் அவன் வேலைக்கு புறப்படவில்லை.
     “வேலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டாள் ஜீவனா.
     “வேலைக்குப் போகவில்லை,” என்று கூறிவிட்டதைக் கேட்ட ஜீவனா திடுக்கிட்டாள்.

     “வேலைக்குப் போகாமல் எப்படி சாப்பிட முடியும். நாம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்,” என்று கூறினாள்.

     “ஒன்றும் சாக வேண்டாம்,” என்று சொன்னான் பிரபு.

     “அப்படியெனில் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள். “வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கப் போகிறேன்,” என்று கூறினான்.

     “வியாபாரம் செய்ய முன் பணம் வேண்டுமே?” என்றாள்.பிரபு, “”நான் எங்காவது கடன் வாங்குவேன். அது பற்றி உனக்கு என்ன?” என்று எடுத்தெரிந்து பேசினான்.

கணவனின் போக்கு வியப்பாக இருந்தது. திடீரென்று அவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று அவளுக்கு புலப்படவில்லை. சிறிது நேரத்தில் ஜீவனாவுடன் அவன் சண்டை போட்டான். அவளை அடித்து உதைத்தான். ஜீவனா அழுதுக் கொண்டே தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாள். 

பிரபு அன்று பகல் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தான்.பலரை சந்தித்து வியாபாரம் செய்ய யோசனை கேட்டான். வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாயாவது வேண்டும் என்று பலரும் சொல்லிவிட்டனர். பிரபு கவலை அடைந்தான். அவனிடம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. மீதி ஐந்தாயிரம் பெற என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான்.

அன்று இரவு அவனுக்கு தூக்கமே வரவில்லை. இனிய இயல்புகள் அவனை விட்டு மறைந்துவிட்டன. பணம் பணம் என்று அவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.

     வியாபாரம் செய்ய மேலும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்தே பொழுதைக் கழித்தான். ஒருவழியும் தெரியவில்லை. கடைசியாக மீண்டும் ஒரு முறை மரப் பொந்தில் சென்று பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டான். 

மறுநாள் இரவு அவன் காட்டுக்குச் சென்றான். முன்பு திருடர்கள் பணம் வைத்திருந்த மரத்தின் அடியில் சென்று சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். பின்னர் ஓசைபடாமல் மரப் பொந்துக்குள் கையை விட்டான்.

     அப்போது பின்னால் இருந்து யாரோ “கும் கும்’ என்று அவன் முதுகில் குத்தி “மடேர்’ என மண்டையில் ஓங்கி அடித்தான். பிரபு வலி பொறுக்க முடியாமல் “”அய்யோ அம்மா…” என்று சத்தம் போட்டான். தொடர்ந்து “படார் படார்’ என அடி விழுந்தது. 

பயத்தில் கண்ணை திறந்து பார்த்தான் பிரபு. அப்போது நான்கு திருடர்கள் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஒரு திருடன் பயங்கர மீசையை முறுக்கி கொண்டு, “”டேய் முட்டாளே! எங்களிடமே திருடப் பார்க்கிறாயா? உன்னை சும்மா விடுவோமா?” என்றபடியே ஓங்கி கன்னத்தில் பளாரென அறைந்தான். பிரபு வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தான். தொடர்ந்து கும் கும் குத்துக்கள் விழுந்தன.

     “பணத்தை எங்கேடா வைத்திருக்கிறாய்?” என்று கேட்டு உதைத்தனர். “அய்யோ என்னை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள் அந்தப் பணத்தை நான் தந்து விடுகிறேன்!” என்றான். 

திருடர்கள் அவனை உதைத்து பிரபுவின் வீட்டுக்கு இழுத்துச் சென்றனர். அங்கிருந்த பண முடிப்பை பிரபு திருடர்களிடம் எடுத்துக் கொடுத்தான். திருடர்கள் நன்றாக அடித்து உதைத்து அவன் கையை முறித்தனர். பிரபு “அய்யோ அம்மா’ என்று அலறித் துடித்துக் கொண்டிருந்தான். 

மறு நாள் அவன் மனைவி ஜீவனா இதைக் கேள்விப்பட்டு ஓடி வந்தாள். அவனது நிலை கண்டு வருந்தினாள். பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றாள்.

     தன் தீய எண்ணத்துக்காக மனம் வருந்தினான் பிரபு. மனைவியிடம் மன்னிப்பு கேட்டான். அதன் பின் உழைக்காமல் வரும் செல்வத்தை அவன் விரும்புவதில்லை. 

தினமும் வேலைக்கு சென்று சம்பாதித்தான். அதில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
      வாழ்வில் அதிக பணம் சேர்க்க முயல்வது தவறல்ல. ஆனால், அதை உழைத்து சேர்க்க வேண்டும். உழைத்து பணத்தை செலவிடுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. உழைக்காமல் கிடைக்கும் பணத்தால் பிரச்னைகள்தான் அதிகமாகும். எனவே உழைத்து வாழ வேண்டும்.

என் அன்பு வாசகர்களே,
மற்றவர்களிடத்தில் உண்மையாய் இருக்கிறோமோ இல்லையோ நம் சொந்த மனைவியினிடத்தில் உண்மையாய் இருக்க வேண்டும். அநேகர் தங்கள் வருமானம் இவ்வளவு என்பதைக்கூட தங்கள் மனைவியிடம் கூறுவதில்லை. கணவனின் வருமானம் எவ்வளவு என்பது தெரிந்தால்தான் மனைவி அதற்கேற்றாற்போல் குடும்பத்தை நிர்வாகிக்க முடியும்.

ஆனால் கணவர்களோ தங்கள் சொந்த மனைவியிடம் Ego காரணமாக உண்மையான சம்பளத்தை சொல்லதில்லை. சம்பளம் மட்டுமல்ல சில நேரங்களில் தனக்கு நேரிட்ட கெட்டவைகளை பகிர்ந்து கொள்ளவதில்லை. தனக்கு நேரிட்ட நன்மையான காரியங்களை பகிரும் கணவர்கள் தீங்கை பகிர்வதில்லை ஏனெனில் தன்னுடைய கஷ்டம் தன்னோடு போகட்டும் என்று. ஆனால் ஈருடலும் ஓருயிருமாய் வாழ்க்கையை நடத்துகிற பொழுது எல்லாவற்றையும் ஒளிவும் மறைவும் இல்லாமல் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு பகிரும்போது தான் இக்கட்டான சூழ்நிலையில் ஒருமித்து ஒரு தீர்வை எட்ட முடியும். மனைவியிடம் எந்தவொரு காரியத்தை மறைக்கிறோமோ, மறைத்து கணவன் மட்டும்  அந்த காரியத்தை நடப்பிக்க முயற்சித்தால் நிச்சயம் நடைபெறாது. 

வேதத்தில் விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிட தேவன் பலியிட கட்டளையிட்ட போது அதை தன்‌ மனைவியாகிய சாராளிடம் சொல்லாமல் மறைத்து தானும் ஈசாக்கும் பலியிட சென்றார்கள். ஆனால் நடந்தது என்ன??. ஆபிரகாமினால் ஈசாக்கை பலியிட முடிந்ததா?? இல்லை. ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதிப்பதற்காக தேவன் இவ்வாறு ஏற்ப்படுத்தியிருந்தாலும் சாராளிடம் ஆபிரகாம் உண்மையை சொல்லியிருந்தால் அதற்கு தேவன் மாற்றுவழி ஏதாகிலும் சொல்லியிருப்பார்.

இக்கதையிலும் தான் எடுத்துவந்த பணத்தின் காரியத்தை மனைவியிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனை நல்வழிப்படுத்தி உண்மையாய் வாழ வழிவகை செய்திருப்பாள். ஆனால் இறுதியில் தர்ம அடி வாங்க வேண்டிய சுழ்நிலை ஏற்ப்பட்டது. வேதம் சொல்கிறது,

28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்த சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும். தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். 
எபேசியர் 5:28

எனவே மனைவியிடம் அன்புகூறுவோம் ஒரே சரீரமாக பாவிப்போம் ஆசீர்வாதத்தை அனுபவிப்போம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்


Wednesday, 10 June 2020

சங்கீதம்

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவனையே நோக்கி உன் ஆத்துமா அமர்ந்திருக்கட்டும், அவரால் உன் இரட்சிப்பு வரும். அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. துன்மார்க்கர் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பார்கள், அவர்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவார்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாராவார்கள். உன்னுடைய மேன்மையிலிருந்து உன்னைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேசவிரும்புகிறார்கள், தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள்.

 சங்கீதம் 62:1-4 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

         A Calm Resolve to Wait for the Salvation of God To the Chief Musician. To Jeduthun. A Psalm of David.

 Truly my soul silently waits for God; From Him comes my salvation. He only is my rock and my salvation; He is my defense; I shall not be greatly moved. How long will you attack a man? You shall be slain, all of you, Like a leaning wall and a tottering fence. They only consult to cast him down from his high position; They delight in lies; They bless with their mouth, But they curse inwardly. Selah 

Psalm 62:1-4

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 உன் ஆத்துமா, தேவனையே நோக்கி அமர்ந்திருக்கட்டும், நீ நம்புகிறது அவராலே வரும். அவரே உன் கன்மலையும், உன் இரட்சிப்பும், உன் உயர்ந்த அடைக்கலமுமானவர், நீ அசைக்கப்படுவதில்லை. உன் இரட்சிப்பும், உன் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது, பெலனான உன் கன்மலையும் உன் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

 சங்கீதம் 62:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

         A Calm Resolve to Wait for the Salvation of God To the Chief Musician. To Jeduthun. A Psalm of David.

 My soul, wait silently for God alone, For my expectation is from Him. He only is my rock and my salvation; He is my defense; I shall not be moved. In God is my salvation and my glory; The rock of my strength, And my refuge, is in God. Trust in Him at all times, you people; Pour out your heart before Him; God is a refuge for us. Selah

 Psalm 62:5-8

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே, தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள், ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், வல்லமை தேவனுடையது என்பதே. கிருபையும் ஆண்டவருடையது, ஆண்டவரே!  அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறார் 

சங்கீதம் 62:9-12 
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

         A Calm Resolve to Wait for the Salvation of God To the Chief Musician. To Jeduthun. A Psalm of David. 

  Surely men of low degree are a vapor, Men of high degree are a lie; If they are weighed on the scales, They are altogether lighter than vapor. Do not trust in oppression, Nor vainly hope in robbery; If riches increase, Do not set your heart on them. God has spoken once, Twice I have heard this: That power belongs to God. Also to You, O Lord, belongs mercy; For You render to each one according to his work. 

Psalm 62:9-12

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 உன்னுடைய தேவனை அதிகாலமே  தேடுவாயாக, வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே உன் ஆத்துமா தேவன்மேல் தாகமாயிருக்கிறது, உன் மாம்சமானது  அவரை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் தேவனை பார்க்க ஆசையாயிருந்து, அவரது வல்லமையையும் அவரது மகிமையையும் கண்டாய். ஜீவனைப்பார்க்கிலும் தேவனது கிருபை நல்லது, உன் உதடுகள் தேவனைத் துதிப்பதாக. உன் ஜீவனுள்ளமட்டும் நீ  தேவனைத் துதித்து, அவரது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பாயாக. 

சங்கீதம் 63:1-4 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

         Joy in the Fellowship of God A Psalm of David 

when he was in the wilderness of Judah. O God, You are my God; Early will I seek You; My soul thirsts for You; My flesh longs for You In a dry and thirsty land Where there is no water. So I have looked for You in the sanctuary, To see Your power and Your glory. Because Your lovingkindness is better than life, My lips shall praise You. Thus I will bless You while I live; I will lift up my hands in Your name.

 Psalm 63:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல உன் ஆத்துமா திருப்தியாகட்டும், உன் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் தேவனைப் போற்றட்டும். உன் படுக்கையின்மேல் நீ தேவனை நினைக்கும்போது, இராச்சாமங்களில் தேவனைத் தியானிப்பாயாக. தேவன் உனக்குத் துணையாயிருந்ததினால், அவரது செட்டைகளின் நிழலிலே களிகூருவாயாக. உன் ஆத்துமா தேவனைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது, அவரது வலதுகரம் உன்னைத் தாங்குகிறது.

 சங்கீதம் 63:5.8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

         Joy in the Fellowship of God A Psalm of David 

when he was in the wilderness of Judah. My soul shall be satisfied as with marrow and fatness, And my mouth shall praise You with joyful lips. When I remember You on my bed, I meditate on You in the night watches. Because You have been my help, Therefore in the shadow of Your wings I will rejoice. My soul follows close behind You; Your right hand upholds me.

 Psalm 63:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

உன் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள், நரிகளுக்கு இரையாவார்கள். ராஜாவோ தேவனில் களிகூருவார், அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்

 சங்கீதம் 63:9-11

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚        
 Joy in the Fellowship of God A Psalm of David 

when he was in the wilderness of Judah.   But those who seek my life, to destroy it, Shall go into the lower parts of the earth. They shall fall by the sword; They shall be a portion for jackals. But the king shall rejoice in God; Everyone who swears by Him shall glory; But the mouth of those who speak lies shall be stopped. 

Psalm 63:9-11

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவனே, உன் விண்ணப்பத்தில் உன் சத்தத்தைக் கேட்டருளுவார், சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, உன் பிராணனைக் காத்தருளுவார். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் உன்னை விலக்கி மறைத்தருளுவார். அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்குகிறார்கள் 

சங்கீதம் 64:1-3 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚          Oppressed by the Wicked but Rejoicing in the Lord To the Chief Musician. A Psalm of David. 

Hear my voice, O God, in my meditation; Preserve my life from fear of the enemy. Hide me from the secret plots of the wicked, From the rebellion of the workers of iniquity, Who sharpen their tongue like a sword, And bend their bows to shoot their arrows—bitter words, 

Psalm 64:1-3

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 துன்மார்க்கர் மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகி தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள், சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள், அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

 சங்கீதம் 64:4-7 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚          Oppressed by the Wicked but Rejoicing in the Lord To the Chief Musician. A Psalm of David.   

That they may shoot in secret at the blameless; Suddenly they shoot at him and do not fear. They encourage themselves in an evil matter; They talk of laying snares secretly; They say, “Who will see them?” They devise iniquities: “We have perfected a shrewd scheme.” Both the inward thought and the heart of man are deep. But God shall shoot at them with an arrow; Suddenly they shall be wounded. 

Psalm 64:4-7 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 துன்மார்க்கர்  தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும், அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள். நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான், செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள். 

சங்கீதம் 64:8-10 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚          Oppressed by the Wicked but Rejoicing in the Lord To the Chief Musician. A Psalm of David. 

So He will make them stumble over their own tongue; All who see them shall flee away. All men shall fear, And shall declare the work of God; For they shall wisely consider His doing. The righteous shall be glad in the Lord, and trust in Him. And all the upright in heart shall glory. 

Psalm 64:8-10 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 சீயோனில் தேவனுக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது, பொருத்தனை அவருக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரிடத்தில், மாம்சமான யாவரும் அவரிடத்தில் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் உன்மேல்மிஞ்சி வல்லமைகொண்டது, தேவனோ உங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறார். தேவனுடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி தேவன்  தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், அவருடைய பரிசுத்த ஆலயமாகிய அவரது வீட்டின் நன்மையால் திருப்தியாவார்கள். 

சங்கீதம் 65:1-4

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚       Praise to God for His Salvation and Providence To the Chief Musician. A Psalm of David. 

A Song. Praise is awaiting You, O God, in Zion; And to You the vow shall be performed. O You who hear prayer, To You all flesh will come. Iniquities prevail against me; As for our transgressions, You will provide atonement for them. Blessed is the man You choose, And cause to approach You, That he may dwell in Your courts. We shall be satisfied with the goodness of Your house, Of Your holy temple. 

Psalm 65:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற உங்கள் இரட்சிப்பின் தேவன்,  பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் உங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளிடுவார். வல்லமையை இடைகட்டிக்கொண்டு, அவருடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்திருக்கிறார். கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் அவருடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள், காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறார்.

 சங்கீதம் 65:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚       Praise to God for His Salvation and Providence To the Chief Musician. A Psalm of David. 

A Song. By awesome deeds in righteousness You will answer us, O God of our salvation, You who are the confidence of all the ends of the earth, And of the far-off seas; Who established the mountains by His strength, Being clothed with power; You who still the noise of the seas, The noise of their waves, And the tumult of the peoples. They also who dwell in the farthest parts are afraid of Your signs; You make the outgoings of the morning and evening rejoice.

 Psalm 65:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறார், தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறார், இப்படி அவர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறார். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறார். வருஷத்தை அவருடைய நன்மையால் முடிசூட்டுகிறார், அவரது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது, மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது, பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. த

சங்கீதம் 65:9-13 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

Praise to God for His Salvation and Providence To the Chief Musician. A Psalm of David. 

A Song. New King James Version Psalm 65:9-13 You visit the earth and water it, You greatly enrich it; The river of God is full of water; You provide their grain, For so You have prepared it. You water its ridges abundantly, You settle its furrows; You make it soft with showers, You bless its growth. You crown the year with Your goodness, And Your paths drip with abundance. They drop on the pastures of the wilderness, And the little hills rejoice on every siஊde. The pastures are clothed with flocks; The valleys also are covered with grain; They shout for joy, they also sing. 

Psalm 65:9-13 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். தேவன் அவரது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறார், அவரது மகத்துவமான வல்லமையினிமித்தம் அவருடைய சத்துருக்கள் அவருக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். பூமியின்மீதெங்கும் அவரைப் பணிந்துகொண்டு அவரைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் அவருடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள்

 சங்கீதம் 66:1-4

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

 Praise to God for His Awesome Works To the Chief Musician. A Song. A Psalm. Make a joyful shout to God, all the earth! Sing out the honor of His name; Make His praise glorious. Say to God, “How awesome are Your works! Through the greatness of Your power Your enemies shall submit themselves to You. All the earth shall worship You And sing praises to You; They shall sing praises to Your name.” Selah

 Psalm 66:1-4

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தார்கள். அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார், அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது, துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்கள்.  ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். 

சங்கீதம் 66:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚     

 Praise to God for His Awesome Works To the Chief Musician. A Song. A Psalm.  

 Come and see the works of God; He is awesome in His doing toward the sons of men. He turned the sea into dry land; They went through the river on foot. There we will rejoice in Him. He rules by His power forever; His eyes observe the nations; Do not let the rebellious exalt themselves. Selah Oh, bless our God, you peoples! And make the voice of His praise to be heard,

 Psalm 66:5-8

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். தேவன், நம்மை சோதித்தார், வெள்ளியைப் புடமிடுகிறதுபோல நம்மைப் புடமிட்டார். நம்மை வலையில் அகப்படுத்தி, நம்முடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினார். மனுஷரை நம்முடைய தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினார், தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம், செழிப்பான இடத்தில் நம்மை கொண்டுவந்து விட்டார். 

சங்கீதம் 66:9-12 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

   Praise to God for His Awesome Works To the Chief Musician. A Song. A Psalm. 

Who keeps our soul among the living, And does not allow our feet to be moved. For You, O God, have tested us; You have refined us as silver is refined. You brought us into the net; You laid affliction on our backs. You have caused men to ride over our heads; We went through fire and through water; But You brought us out to rich fulfillment.

 Psalm 66:9-12 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 சர்வாங்க தகனபலிகளோடே தேவனது ஆலயத்திற்குள் பிரவேசிப்பாயாக. உன் இக்கட்டில் நீ உன் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய உன் பொருத்தனைகளை தேவனுக்குச் செலுத்துவாயாக. ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை தேவனுக்குத் தகனபலியாக இடுவாயாக, காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் தேவனுக்குப் பலியிடுவாயாக. தேவனுக்குப் பயந்தவர்கள், எல்லாரும் வந்து கேட்பார்கள், அவர் உன் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவாயாக.

 சங்கீதம் 66:13-16 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚      

Praise to God for His Awesome Works To the Chief Musician. A Song. A Psalm.   

I will go into Your house with burnt offerings; I will pay You my vows, Which my lips have uttered And my mouth has spoken when I was in trouble. I will offer You burnt sacrifices of fat animals, With the sweet aroma of rams; I will offer bulls with goats. Selah Come and hear, all you who fear God, And I will declare what He has done for my soul. 

Psalm 66:13-16

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவனை நோக்கி உன் வாயினால் கூப்பிட்டாய், உன் நாவினால் அவர் புகழப்பட்டார். உன் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தாயானால், ஆண்டவர் உனக்குச் செவிகொடார். மெய்யாய்த் தேவன் உனக்குச் செவிகொடுத்தார், உன் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். உன் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை உன்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

 சங்கீதம் 66:17-20 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚      Praise to God for His Awesome Works To the Chief Musician. A Song. A Psalm.

 I cried to Him with my mouth, And He was extolled with my tongue. If I regard iniquity in my heart, The Lord will not hear. But certainly God has heard me; He has attended to the voice of my prayer. Blessed be God, Who has not turned away my prayer, Nor His mercy from me! 

Psalm 66:17-20

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 �

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 பூமியில் தேவனுடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் தேவனுடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவன் உங்களுக்கு இரங்கி, உங்களை ஆசீர்வதித்து, அவருடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணுவார். தேவனை, ஜனங்கள்  துதிப்பார்களாக, சகல ஜனங்களும் அவரைத் துதிப்பார்களாக. தேவன் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவார், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவார்களாக. 

சங்கீதம் 67:1-4 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

 An Invocation and a Doxology To the Chief Musician. On stringed instruments. A Psalm. A Song. 

God be merciful to us and bless us, And cause His face to shine upon us, Selah That Your way may be known on earth, Your salvation among all nations. Let the peoples praise You, O God; Let all the peoples praise You. Oh, let the nations be glad and sing for joy! For You shall judge the people righteously, And govern the nations on earth. Selah 

Psalm 67:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.  

 ஜனங்கள் தேவனைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் தேவனைத் துதிப்பார்களாக. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய உங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார், பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். 

சங்கீதம் 67:5-7

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

 An Invocation and a Doxology To the Chief Musician. On stringed instruments. A Psalm. A Song. 

Let the peoples praise You, O God; Let all the peoples praise You. Then the earth shall yield her increase; God, our own God, shall bless us. God shall bless us, And all the ends of the earth shall fear Him.

 Psalm 67:5-7

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 


💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள். புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பார், மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள். நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள். தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள், வானாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். 

சங்கீதம் 68:1-4

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David. 

A Song. Let God arise, Let His enemies be scattered; Let those also who hate Him flee before Him. As smoke is driven away, So drive them away; As wax melts before the fire, So let the wicked perish at the presence of God. But let the righteous be glad; Let them rejoice before God; Yes, let them rejoice exceedingly. Sing to God, sing praises to His name; Extol Him who rides on the clouds, By His name YAH, And rejoice before Him. 

Psalm 68:1-4

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிறார்.  திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார், துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். தேவன் அவருடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, தேவனுக்கு முன்பாக வானமும் பொழிந்தது, இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. 

சங்கீதம் 68:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David. 

A father of the fatherless, a defender of widows, Is God in His holy habitation. God sets the solitary in families; He brings out those who are bound into prosperity; But the rebellious dwell in a dry land. O God, when You went out before Your people, When You marched through the wilderness, Selah The earth shook; The heavens also dropped rain at the presence of God; Sinai itself was moved at the presence of God, the God of Israel. 

Psalm 68:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன், சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினார், இளைத்துப்போன அவரது சுதந்தரத்தைத் திடப்படுத்தினார். தேவனுடைய மந்தை அதிலே தங்கியிருந்தது, தேவன், அவருடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார். ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள், வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 

சங்கீதம் 68:9-12 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    
The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David.

 You, O God, sent a plentiful rain, Whereby You confirmed Your inheritance, When it was weary. Your congregation dwelt in it; You, O God, provided from Your goodness for the poor. The Lord gave the word; Great was the company of those who proclaimed it: “Kings of armies flee, they flee, And she who remains at home divides the spoil.

 Psalm 68:9-12

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 நீதிமான்கள் அடுப்பினடியில்
 கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பார்கள். சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது, பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது. உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்கள், ஏன் துள்ளுகிறது, இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்கத் தேவன் விரும்பினார், ஆம் கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.

 சங்கீதம் 68:13-16

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David.  

 Though you lie down among the sheepfolds, You will be like the wings of a dove covered with silver, And her feathers with yellow gold.” When the Almighty scattered kings in it, It was white as snow in Zalmon. A mountain of God is the mountain of Bashan; A mountain of many peaks is the mountain of Bashan. Why do you fume with envy, you mountains of many peaks? This is the mountain which God desires to dwell in; Yes, the Lord will dwell in it forever. 

Psalm 68:13-16 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். தேவன் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனார், தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டார். எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக, நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார், ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.

 சங்கீதம் 68:17-20

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David.

 The chariots of God are twenty thousand, Even thousands of thousands; The Lord is among them as in Sinai, in the Holy Place. You have ascended on high, You have led captivity captive; You have received gifts among men, Even from the rebellious, That the Lord God might dwell there. Blessed be the Lord, Who daily loads us with benefits, The God of our salvation! Selah Our God is the God of salvation; And to GOD the Lord belong escapes from death.

 Psalm 68:17-20 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், அவருடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவார், அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவார் சத்துருக்கள் தேவனுடைய நடைகளைக் காண்பார்கள், என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே காண்பார்கள். 

சங்கீதம் 68:20-24 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்கள், சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரிப்பார்கள். அவர்கள் தேவன் அவரகளுக்குப் பலத்தைக் கட்டளையிட்டார், தேவன்  அவர்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்துவார். எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் அவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டுவார். ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான், யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.

 சங்கீதம் 68:26,28-30

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David.    Bless God in the congregations, The Lord, from the fountain of Israel. Your God has commanded your strength; Strengthen, O God, what You have done for us. Because of Your temple at Jerusalem, Kings will bring presents to You. Rebuke the beasts of the reeds, The herd of bulls with the calves of the peoples, Till everyone submits himself with pieces of silver. Scatter the peoples who delight in war. 

Psalm 68:26,28-30 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள், எத்தியோப்பியா தேவனை நோக்கிக் கையெடுக்கத் தீவிரிக்கும். பூமியின் ராஜ்யங்கள், தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுவார்கள். ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுவார்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுவார். தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துவார்கள், அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. தேவன், தமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குவார், இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுவார், தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 

சங்கீதம் 68:31-35 


💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 

The Glory of God in His Goodness to Israel To the Chief Musician. A Psalm of David.

 Envoys will come out of Egypt; Ethiopia will quickly stretch out her hands to God. Sing to God, you kingdoms of the earth; Oh, sing praises to the Lord, Selah To Him who rides on the heaven of heavens, which were of old! Indeed, He sends out His voice, a mighty voice. Ascribe strength to God; His excellence is over Israel, And His strength is in the clouds. O God, You are more awesome than Your holy places. The God of Israel is He who gives strength and power to His people. Blessed be God!

 Psalm 68:31-35 
   💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

தேவன், உன்னை இரட்சிப்பார், வெள்ளங்கள் உன் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறாய்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறாய்; வெள்ளங்கள் உன்மேல் புரண்டுபோகிறது. நீ கூப்பிடுகிறதினால் இளைத்தாய், உன் தொண்டை வறண்டுபோயிற்று, உன் தேவனுக்கு நீ காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று நிமித்தமில்லாமல் உன்னைப் பகைக்கிறவர்கள் உன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள், வீணாக உனக்குச் சத்துருக்களாகி உன்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள், நீ எடுத்துக்கொள்ளாததை நீ் கொடுக்க வேண்டியதாயிற்று. தேவன் உன் புத்தியீனத்தை அறிந்திருக்கிறார், உன் குற்றங்கள் அவருக்கு மறைந்திருக்கவில்லை. 

சங்கீதம் 69:1-5 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

        An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David. Save me, O God! For the waters have come up to my neck. I sink in deep mire, Where there is no standing; I have come into deep waters, Where the floods overflow me. I am weary with my crying; My throat is dry; My eyes fail while I wait for my God. Those who hate me without a cause Are more than the hairs of my head; They are mighty who would destroy me, Being my enemies wrongfully; Though I have stolen nothing, I still must restore it. O God, You know my foolishness; And my sins are not hidden from You

 Psalm 69:1-5 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

தேவன், உன் புத்தியீனத்தை அறிந்திருக்கிறார், உன் குற்றங்கள் அவருக்கு மறைந்திருக்கவில்லை. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்காகக் காத்திருக்கிறவர்கள் உன்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்கள், இஸ்ரவேலின் தேவனைத் தேடுகிறவர்கள் உன்னிமித்தம் நாணமடையார்கள். அவர் நிமித்தம் நிந்தையைச் சகித்தாய், இலச்சை உன் முகத்தை மூடிற்று. உன் சகோதரருக்கு வேற்று மனுஷனும், உன் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானாய். தேவனுடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் உன்னைப் பட்சித்தது, அவரை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் உன்மேல் விழுந்தது. உன் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதாய், அதுவும் உனக்கு நிந்தையாய் முடிந்தது. 

சங்கீதம் 69:5-10 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

  An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David. 

O God, You know my foolishness; And my sins are not hidden from You. Let not those who wait for You, O Lord GOD of hosts, be ashamed because of me; Let not those who seek You be confounded because of me, O God of Israel. Because for Your sake I have borne reproach; Shame has covered my face. I have become a stranger to my brothers, And an alien to my mother’s children; Because zeal for Your house has eaten me up, And the reproaches of those who reproach You have fallen on me. When I wept and chastened my soul with fasting, That became my reproach. 

Psalm 69:5-10

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 இரட்டை உன் உடுப்பாக்கினாய், அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானாய். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் உனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள், மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானாய். ஆனாலும் , அநுக்கிரககாலத்திலே கர்த்தரை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறாய், தேவனே, அவரது மிகுந்த கிருபையினாலும் அவரது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் உனக்குச் செவிகொடுத்தருளுவார். நீ அமிழ்ந்துப் போகாதபடிக்குச் சேற்றினின்று உன்னைத் தூக்கிவிடுவார், உன்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் உன்னை நீங்கும்படி செய்வார். ஜலப்பிரவாகங்கள் உன்மேல் புரளாமலும், ஆழம் உன்னை விழுங்காமலும், பாதாளம் உன்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருக்கும். 

சங்கீதம் 69:11-15 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚     

 An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.   I also made sackcloth my garment; I became a byword to them. Those who sit in the gate speak against me, And I am the song of the drunkards. But as for me, my prayer is to You, O Lord, in the acceptable time; O God, in the multitude of Your mercy, Hear me in the truth of Your salvation. Deliver me out of the mire, And let me not sink; Let me be delivered from those who hate me, And out of the deep waters. Let not the floodwater overflow me, Nor let the deep swallow me up; And let not the pit shut its mouth on me. 

Psalm 69:11-15

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

கர்த்தர், உன் விண்ணப்பத்தைக் கேட்டருளுவார், அவருடைய தயை நலமாயிருக்கிறது, அவரது உருக்கமான இரக்கங்களின்படி உன்னைக் கடாட்சித்தருளுவார். அவரது முகத்தை அவரது அடியானுக்கு மறையார், நீ வியாகுலப்படுகிறாய், உனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளுவார். அவர் உன் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணுவார், உன் சத்துருக்களினிமித்தம் உன்னை மீட்டுவிடுவார். தேவன் உன் நிந்தையையும் உன் வெட்கத்தையும் உன் அவமானத்தையும் அறிந்திருக்கிறார், என் சத்துருக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக இருக்கிறார்கள். சங்கீதம் 69:16-19 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

  An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.

 Hear me, O Lord, for Your lovingkindness is good; Turn to me according to the multitude of Your tender mercies. And do not hide Your face from Your servant, For I am in trouble; Hear me speedily. Draw near to my soul, and redeem it; Deliver me because of my enemies. You know my reproach, my shame, and my dishonor; My adversaries are all before You.

 Psalm 69:16-19

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

நிந்தை உன் இருதயத்தைப் பிளந்தது, நீ மிகவும் வேதனைப்படுகிறாய், உனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று நீ காத்திருந்தாய், ஒருவனும் இல்லை, தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தாய், ஒருவனையும் காணவில்லை. உன் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், உன் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படும், கர்த்தர் அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணுவார். 

சங்கீதம் 69:20-23

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

      An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.   

Reproach has broken my heart, And I am full of heaviness; I looked for someone to take pity, but there was none; And for comforters, but I found none. They also gave me gall for my food, And for my thirst they gave me vinegar to drink. Let their table become a snare before them, And their well-being a trap. Let their eyes be darkened, so that they do not see; And make their loins shake continually. 

Psalm 69:20-23

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

கர்த்தர் அவருடைய உக்கிரத்தை உன்னை பகைக்கிறவர்கள்மேல் ஊற்றுவார், அவருடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும். அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது, அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. தேவன் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, அவர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்கள். அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் தேவன் சுமத்துவார், அவர்கள் தேவனது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்கள். ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போகும், நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருக்கும்.

 சங்கீதம் 69:24-28 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

      An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.    Pour out Your indignation upon them, And let Your wrathful anger take hold of them. Let their dwelling place be desolate; Let no one live in their tents. For they persecute the ones You have struck, And talk of the grief of those You have wounded. Add iniquity to their iniquity, And let them not come into Your righteousness. Let them be blotted out of the book of the living, And not be written with the righteous. Psalm 69:24-28

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

நீயோ சிறுமையும் துயரமுமுள்ளவன், தேவனுடைய இரட்சிப்பு உனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவாயாக. கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள், தேவனைத் தேடுகிறவனே, உங்கள் இருதயம் வாழும்.

 சங்கீதம் 69:29-32 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚      An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.  

 But I am poor and sorrowful; Let Your salvation, O God, set me up on high. I will praise the name of God with a song, And will magnify Him with thanksgiving. This also shall please the Lord better than an ox or bull, Which has horns and hooves. The humble shall see this and be glad; And you who seek God, your hearts shall live. 

Psalm 69:29-32

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார், அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள், அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். 

சங்கீதம் 69:33-36

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

      An Urgent Plea for Help in Trouble To the Chief Musician. Set to “The Lilies.” A Psalm of David.    For the Lord hears the poor, And does not despise His prisoners. Let heaven and earth praise Him, The seas and everything that moves in them. For God will save Zion And build the cities of Judah, That they may dwell there and possess it. Also, the descendants of His servants shall inherit it, And those who love His name shall dwell in it. 

Psalm 69:33-36

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛





💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 புறஜாதியார் தேவனது சுதந்தரத்தில் வந்து, அவரது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். தேவனது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், அவரது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தைத் தண்ணீரைப்போலச் சிந்தினார்கள், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை. அவர்கள் அயலாருக்கு நிந்தையும், அவர்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானார்கள் எப்போதும் கர்த்தர்  கோபமாயிரார் அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல் எப்போதும் எரியாது.

 சங்கீதம் 79:1-5

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛 

A Dirge and a Prayer for Israel, Destroyed by Enemies A Psalm of Asaph. O God, the nations have come into Your inheritance; Your holy temple they have defiled; They have laid Jerusalem in heaps. The dead bodies of Your servants They have given as food for the birds of the heavens, The flesh of Your saints to the beasts of the earth. Their blood they have shed like water all around Jerusalem, And there was no one to bury them. We have become a reproach to our neighbors, A scorn and derision to those who are around us. How long, Lord? Will You be angry forever? Will Your jealousy burn like fire?

 Psalm 79:1-5 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚       💛




💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 சேனைகளின் கர்த்தரது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 

உன் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது, உன் இருதயமும் உன் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 

உன் ராஜாவும் உன் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தருடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 

அவருடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் எப்பொழுதும் அவரைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். 

சங்கீதம் 84:1-4


💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    The Blessedness of Dwelling in the House of God To the Chief Musician. On an instrument of Gath. A Psalm of the sons of Korah. 

How lovely is Your tabernacle, O Lord of hosts! My soul longs, yes, even faints For the courts of the Lord; My heart and my flesh cry out for the living God. Even the sparrow has found a home, And the swallow a nest for herself, Where she may lay her young— Even Your altars, O Lord of hosts, My King and my God. Blessed are those who dwell in Your house; They will still be praising You. Selah

Psalm 84:1-4

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தரிடத்திலே பெலன்கொள்ளுகிற மனுஷனும்,  தங்கள் இருதயங்களில் செவ்வையான ந கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள், மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். சேனைகளின் தேவனாகிய கர்த்தர், உன் விண்ணப்பத்தைக் கேட்பார், யாக்கோபின் தேவன், செவிகொடுப்பார்.

 சங்கீதம் 84:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

   The Blessedness of Dwelling in the House of God To the Chief Musician. On an instrument of Gath. A Psalm of the sons of Korah.   

Blessed is the man whose strength is in You, Whose heart is set on pilgrimage. As they pass through the Valley of Baca, They make it a spring; The rain also covers it with pools. They go from strength to strength; Each one appears before God in Zion. O Lord God of hosts, hear my prayer; Give ear, O God of Jacob! Selah. 

Psalm 84:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 உங்கள் கேடகமாகிய தேவன், கண்ணோக்கமாயிருப்பார், அவர் அபிஷேகம் பண்ணினவரின் முகத்தைப் பார்ப்பார். 

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் அவரது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் உன் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவாயாக. 

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். 

சேனைகளின் கர்த்ததரை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான். 
சங்கீதம் 84:9-12

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

The Blessedness of Dwelling in the House of God To the Chief Musician. On an instrument of Gath. A Psalm of the sons of Korah.   

 O God, behold our shield, And look upon the face of Your anointed. For a day in Your courts is better than a thousand. I would rather be a doorkeeper in the house of my God Than dwell in the tents of wickedness. For the Lord God is a sun and shield; The Lord will give grace and glory; No good thing will He withhold From those who walk uprightly. O Lord of hosts, Blessed is the man who trusts in You!

Psalm 84:9-12


💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர், தமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார். அவரது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினார். அவரது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, அவரது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினார். உங்கள் இரட்சிப்பின் தேவன்,  உங்களைத் திருப்பிக்கொண்டுவருவார், உங்கள்மேலுள்ள அவரது கோபத்தை ஆறப்பண்ணுவார். 

சங்கீதம் 85:1-4

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Prayer that the Lord Will Restore Favor to the Land To the Chief Musician. A Psalm of the sons of Korah. 

Lord, You have been favorable to Your land; You have brought back the captivity of Jacob. You have forgiven the iniquity of Your people; You have covered all their sin. Selah You have taken away all Your wrath; You have turned from the fierceness of Your anger. Restore us, O God of our salvation, And cause Your anger toward us to cease.

 Psalm 85:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் என்றைக்கும் உங்கள்மேல் கோபமாயிரார்.  தலைமுறை தலைமுறையாக அவரது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணார். அவரது ஜனங்கள் அவரில் மகிழ்ந்திருக்கும்படி அவர் உங்களைத் திரும்ப உயிர்ப்பிப்பார். கர்த்தர், அவரது கிருபையை உங்களுக்குக் காண்பித்து, அவரது இரட்சிப்பை உங்களுக்கு அருளிச்செய்வார். கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பாய், அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார், அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. 

சங்கீதம் 85:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Prayer that the Lord Will Restore Favor to the Land To the Chief Musician. A Psalm of the sons of Korah. 

Will You be angry with us forever? Will You prolong Your anger to all generations? Will You not revive us again, That Your people may rejoice in You? Show us Your mercy, Lord, And grant us Your salvation. I will hear what God the Lord will speak, For He will speak peace To His people and to His saints; But let them not turn back to folly.

 Psalm 85:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 நம்முடைய தேசத்தில் மகிமைவாசமாயிருக்கும்படி, கர்த்தருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். நீதி அவருக்கு முன்னாகச்சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் 

சங்கீதம் 85:9-13 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Prayer that the Lord Will Restore Favor to the Land To the Chief Musician. A Psalm of the sons of Korah.  

 Surely His salvation is near to those who fear Him, That glory may dwell in our land. Mercy and truth have met together; Righteousness and peace have kissed. Truth shall spring out of the earth, And righteousness shall look down from heaven. Yes, the Lord will give what is good; And our land will yield its increase. Righteousness will go before Him, And shall make His footsteps our pathway. 

Psalm 85:9-13

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛


💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர், தமது செவியைச் சாய்த்து, உன் விண்ணப்பத்தைக்கேட்டருளுவார், நீ சிறுமையும் எளிமையுமானவன். உன் ஆத்துமாவைக் காத்தருளுவார், நீ பக்தியுள்ளவன், உன் தேவனை நம்பியிருக்கிற அவரது அடியானை அவர் இரட்சிப்பார். ஆண்டவர், உனக்கு இரங்குவார், நாடோறும் அவரை நோக்கிக் கூப்பிடுவாயாக். அவரது அடியானுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார்; ஆண்டவரிடத்தில் உன் ஆத்துமாவை உயர்த்துவாயாக. 

சங்கீதம் 86:1-4 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

     Prayer for Mercy, with Meditation on the Excellencies of the Lord A Prayer of David.

 Bow down Your ear, O Lord, hear me; For I am poor and needy. Preserve my life, for I am holy; You are my God; Save Your servant who trusts in You! Be merciful to me, O Lord, For I cry to You all day long. Rejoice the soul of Your servant, For to You, O Lord, I lift up my soul. 

Psalm 86:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 ஆண்டவர், நல்லவரும், மன்னிக்கிறவரும், தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறார். கர்த்தர் உன் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, உன் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனிப்பார். நீ துயரப்படுகிற நாளில் அவரை நோக்கிக் கூப்பிடு அவர் உன்னைக் கேட்டருளுவார். தேவர்களுக்குள்ளே ஆண்டவருக்கு நிகருமில்லை, அவருடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. 

சங்கீதம் 86:5-8 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

     Prayer for Mercy, with Meditation on the Excellencies of the Lord A Prayer of David. 

  For You, Lord, are good, and ready to forgive, And abundant in mercy to all those who call upon You. Give ear, O Lord, to my prayer; And attend to the voice of my supplications. In the day of my trouble I will call upon You, For You will answer me. Among the gods there is none like You, O Lord; Nor are there any works like Your works. 

Psalm 86:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 ஆண்டவர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, அவருக்கு முன்பாகப் பணிந்து, அவரது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். தேவன் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறார், அவர் ஒருவரே தேவன். கர்த்தர் அவரது வழியை உனக்குப் போதிப்பார், நீ  அவரது சத்தியத்திலே நடப்பாயாக,  நீ அவரது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி உன் இருதயத்தை ஒருமுகப்படுத்துவார். உன் தேவனாகிய ஆண்டவரை, உன் முழு இருதயத்தோடு துதித்து, அவரது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவாயாக. 

சங்கீதம் 86:9-12 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

     Prayer for Mercy, with Meditation on the Excellencies of the Lord A Prayer of David.   

 All nations whom You have made Shall come and worship before You, O Lord, And shall glorify Your name. For You are great, and do wondrous things; You alone are God. Teach me Your way, O Lord; I will walk in Your truth; Unite my heart to fear Your name. I will praise You, O Lord my God, with all my heart, And I will glorify Your name forevermore. 

Psalm 86:9-12 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் உனக்குப் பாராட்டின அவரது கிருபை பெரியது, உன் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தார். அகங்காரிகள் உனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் உன் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டவர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். உன்மேல் நோக்கமாகி, உனக்கு இரங்குவார், அவரது வல்லமையை அவரது அடியானுக்கு அருளி, அவரது அடியாளின் குமாரனை இரட்சிப்பார். கர்த்தர் உனக்குத் துணைசெய்து உன்னைத் தேற்றுகிறதை உன்பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, உனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளுவார். 

சங்கீதம் 86:13-17 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

     Prayer for Mercy, with Meditation on the Excellencies of the Lord A Prayer of David.

 For great is Your mercy toward me, And You have delivered my soul from the depths of Sheol. O God, the proud have risen against me, And a mob of violent men have sought my life, And have not set You before them. But You, O Lord, are a God full of compassion, and gracious, Longsuffering and abundant in mercy and truth. Oh, turn to me, and have mercy on me! Give Your strength to Your servant, And save the son of Your maidservant. Show me a sign for good, That those who hate me may see it and be ashamed, Because You, Lord, have helped me and comforted me.

 Psalm 86:13-17 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். தேவனுடைய நகரத்தைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். உன்னை அறியாதவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவாய், இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும், சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும், உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார். கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். உங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள். 

சங்கீதம் 87:1-7 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚      The Glories of the City of God A Psalm of the sons of Korah.

A Song. His foundation is in the holy mountains. The Lord loves the gates of Zion More than all the dwellings of Jacob. Glorious things are spoken of you, O city of God! Selah “I will make mention of Rahab and Babylon to those who know Me; Behold, O Philistia and Tyre, with Ethiopia: ‘This one was born there.’” And of Zion it will be said, “This one and that one were born in her; And the Most High Himself shall establish her.” The Lord will record, When He registers the peoples: “This one was born there.” Selah Both the singers and the players on instruments say, “All my springs are in you.”

 Psalm 87:1-7 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 உன் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தரை,நோக்கிக்  கூப்பிடுவாயாக. உன் விண்ணப்பம் அவரது சமுகத்தில் வருவதாக, உன் கூப்பிடுதலுக்கு அவரது செவியைச் சாய்த்தருளுவார். உன் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது, உன் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது. நீ குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானாய். மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறாய், அவர் இனி ஒருபோதும் நினையாதபடி, அவரது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானாய். 

சங்கீதம் 88:1-5 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚  

 A Prayer for Help in Despondency A Song. A Psalm of the sons of Korah. 

To the Chief Musician. Set to “Mahalath Leannoth.” A Contemplation of Heman the Ezrahite. O Lord, God of my salvation, I have cried out day and night before You. Let my prayer come before You; Incline Your ear to my cry. For my soul is full of troubles, And my life draws near to the grave. I am counted with those who go down to the pit; I am like a man who has no strength, Adrift among the dead, Like the slain who lie in the grave, Whom You remember no more, And who are cut off from Your hand.

 Psalm 88:1-5 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் உன்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தார். அவருடைய கோபம் உன்னை இருத்துகிறது, அவருடைய அலைகள் எல்லாவற்றினாலும் உன்னை வருத்தப்படுத்துகிறார். உனக்கு அறிமுகமானவர்களை உனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு உன்னை அருவருப்பாக்கினார், நீ வெளியே புறப்படக்கூடாதபடிக்கு அடைபட்டிருக்கிறாய். துக்கத்தினால் உன் கண் தொய்ந்து போயிற்று, , அநுதினமும் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, அவருக்கு நேராக உன் கைகளை விரிக்கிறாய். மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்யார் செத்துப்போன வீரர் எழுந்து கர்த்தரைத் துதியார்கள். 

சங்கீதம் 88:6-10 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

A Prayer for Help in Despondency A Song. A Psalm of the sons of Korah. 

To the Chief Musician. Set to “Mahalath Leannoth.” A Contemplation of Heman the Ezrahite.   You have laid me in the lowest pit, In darkness, in the depths. Your wrath lies heavy upon me, And You have afflicted me with all Your waves. Selah You have put away my acquaintances far from me; You have made me an abomination to them; I am shut up, and I cannot get out; My eye wastes away because of affliction. Lord, I have called daily upon You; I have stretched out my hands to You. Will You work wonders for the dead? Shall the dead arise and praise You? Selah 

Psalm 88:6-10

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 பிரேதக்குழியில் கர்த்தரது கிருபையும், அழிவில் அவரது உண்மையும் விவரிக்கப்படாது. இருளில் அவரது அதசையங்களும், மறதியின் பூமியில் அவரது நீதியும் அறியப்படாது. நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு், காலையிலே உன் விண்ணப்பம் அவருக்குமுன்பாக வரட்டும். கர்த்தர் உன் ஆத்துமாவைத் தள்ளிவிடார். அவரது முகத்தை உனக்கு மறையார். 

சங்கீதம் 88:11-14 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

   A Prayer for Help in Despondency A Song. A Psalm of the sons of Korah. 

To the Chief Musician. Set to “Mahalath Leannoth.” A Contemplation of Heman the Ezrahite.    Shall Your lovingkindness be declared in the grave? Or Your faithfulness in the place of destruction? Shall Your wonders be known in the dark? And Your righteousness in the land of forgetfulness? But to You I have cried out, O Lord, And in the morning my prayer comes before You. Lord, why do You cast off my soul? Why do You hide Your face from me? 

Psalm 88:11-14 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 சிறுவயதுமுதல் நீ சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறாய், கர்த்தரால் வரும் திகில்கள் உன்மேல் சுமந்திருக்கிறது, நீ மனங்கலங்குகிறாய். கர்த்தருடைய எரிச்சல்கள் உன்மேல் புரண்டுபோகிறது, அவருடைய பயங்கரங்கள் உன்னை அதம்பண்ணுகிறது. அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் உன்னைச் சூழ்ந்து, ஏகமாய் உன்னை வளைந்துகொள்ளுகிறது. சிநேகிதனையும் தோழனையும் உனக்குத் தூரமாக விலக்கினார், உனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.

 சங்கீதம் 88:15-18

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚  

 A Prayer for Help in Despondency A Song. A Psalm of the sons of Korah. 

To the Chief Musician. Set to “Mahalath Leannoth.” A Contemplation of Heman the Ezrahite. I have been afflicted and ready to die from my youth; I suffer Your terrors; I am distraught. Your fierce wrath has gone over me; Your terrors have cut me off. They came around me all day long like water; They engulfed me altogether. Loved one and friend You have put far from me, And my acquaintances into darkness. 

Psalm 88:15-18

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. 

நீ கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவாயாக, அவரது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக உன்வாயினால் அறிவிப்பாயாக. அவரது கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும், அவரது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பார் என்றாய். அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, அவர் தாசனாகிய தாவீதை நோக்கி: என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார்.

 சங்கீதம் 89:1-4 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

I will sing of the mercies of the Lord forever; With my mouth will I make known Your faithfulness to all generations. For I have said, “Mercy shall be built up forever; Your faithfulness You shall establish in the very heavens.” “I have made a covenant with My chosen, I have sworn to My servant David: ‘Your seed I will establish forever, And build up your throne to all generations.’” Selah

 Psalm 89:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 வானங்கள் கர்த்தாருடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே கர்த்தாருடைய உண்மையும் விளங்கும். ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். சேனைகளின் தேவனாகிய கர்த்தரை ப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? அவருடைய உண்மை உஅவரைச் சூழ்ந்திருக்கிறது.

 சங்கீதம் 89:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛   

Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

And the heavens will praise Your wonders, O Lord; Your faithfulness also in the assembly of the saints. For who in the heavens can be compared to the Lord? Who among the sons of the mighty can be likened to the Lord? God is greatly to be feared in the assembly of the saints, And to be held in reverence by all those around Him. O Lord God of hosts, Who is mighty like You, O Lord? Your faithfulness also surrounds You. 

Psalm 89:5-8 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.  

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர், அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறார். அவர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினார், அவரது வல்லமையான புயத்தினால் அவருடையசத்துருக்களைச் சிதறடித்தார். வானங்கள் அவருடையது, பூமியும் அவருடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் அவரே அஸ்திபாரப்படுத்தினார். வடக்கையும் தெற்கையும் அவரே உண்டாக்கினார், தாபோரும் எர்மோனும் அவருடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும். 

சங்கீதம் 89:9-12

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

You rule the raging of the sea; When its waves rise, You still them. You have broken Rahab in pieces, as one who is slain; You have scattered Your enemies with Your mighty arm. The heavens are Yours, the earth also is Yours; The world and all its fullness, You have founded them. The north and the south, You have created them; Tabor and Hermon rejoice in Your name. 

Psalm 89:9-12 


💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தருக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது, அவருடைய கரம் பராக்கிரமமுள்ளது, அவருடைய வலதுகரம் உன்னதமானது. நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம், கிருபையும் சத்தியமும் அவருக்கு முன்பாக நடக்கும். கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள், , அவர்கள் கர்த்தருடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். அவர்கள் கர்த்தருடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, கர்த்தருடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். 

சங்கீதம் 89:13-16

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚  

  Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

You have a mighty arm; Strong is Your hand, and high is Your right hand. Righteousness and justice are the foundation of Your throne; Mercy and truth go before Your face. Blessed are the people who know the joyful sound! They walk, O Lord, in the light of Your countenance. In Your name they rejoice all day long, And in Your righteousness they are exalted.

 Psalm 89:13-16 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தரே உங்கள்் பலத்தின் மகிமையாயிருக்கிறார், அவருடைய தயவினால் உங்கள் கொம்பு உயரும். கர்த்தரால் உங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் உங்களுடைய ராஜாவும் உண்டு. அப்பொழுது கர்த்தர் தம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தின் தெரிந்து கொள்ளப்பட்டவனை உயர்த்தினார். தன் தாசனாகிய தாவீதைக்கண்டு பிடித்ததர், தன் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினார். 

சங்கீதம் 89:17-20 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite.   

For You are the glory of their strength, And in Your favor our horn is exalted. For our shield belongs to the Lord, And our king to the Holy One of Israel. Then You spoke in a vision to Your holy one, And said: “I have given help to one who is mighty; I have exalted one chosen from the people. I have found My servant David; With My holy oil I have anointed him, 

Psalm 89:17-20 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தரின் கை உன்னோடே உறுதியாயிருக்கும், அவர் புயம் உன்னைப் பலப்படுத்தும். சத்துரு உன்னை நெருக்குவதில்லை, நியாயக்கேட்டின்மகன் உன்னை ஒடுக்குவதில்லை. உன் சத்துருக்களை உனக்கு முன்பாக மடங்கடித்து, உன்னைப் பகைக்கிறவர்களை வெட்டுவார். கர்த்தரின் உண்மையும் அவர் கிருபையும் உன்னோடிருக்கும், கர்த்தரின் நாமத்தினால் உன் கொம்பு உயரும்.

 சங்கீதம் 89:21-24 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛   

Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

With whom My hand shall be established; Also My arm shall strengthen him. The enemy shall not outwit him, Nor the son of wickedness afflict him. I will beat down his foes before his face, And plague those who hate him. “But My faithfulness and My mercy shall be with him, And in My name his horn shall be exalted. 

Psalm 89:21-24 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் உன் கையைச் சமுத்திரத்தின் மேலும், உன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பார். நீ கர்த்தரை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவாய். கர்த்தர் உன்னை அவருக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப் பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவார். அவர் கிருபையை என்றென்றைக்கும் உனக்காகக் காப்பார், அவர் உடன்படிக்கை உனக்காக உறுதிப்படுத்தப்படும். 

சங்கீதம் 89:25-28

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

Also I will set his hand over the sea, And his right hand over the rivers. He shall cry to Me, ‘You are my Father, My God, and the rock of my salvation.’ Also I will make him My firstborn, The highest of the kings of the earth. My mercy I will keep for him forever, And My covenant shall stand firm with him. 

Psalm 89:25-28 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் உன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வார். உன் பிள்ளைகள் கர்த்தர் நியாயங்களின்படி நடவாமல், கர்த்தருடைய வேதத்தை விட்டு விலகி, கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், கர்த்தருடைய நியமங்களை மீறிநடந்தால், அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பார். 

சங்கீதம் 89:29-32

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚   

 Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite.   

His seed also I will make to endure forever, And his throne as the days of heaven. “If his sons forsake My law And do not walk in My judgments, If they break My statutes And do not keep My commandments, Then I will punish their transgression with the rod, And their iniquity with stripes. 

Psalm 89:29-32 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 ஆனாலும் கர்த்தருடைய கிருபையை உன்னை விட்டு விலக்காமலும், கர்த்தர் உண்மையில் பிசகாமலும் இருப்பார். அவருடைய உடன்படிக்கையை மீறாமலும், அவர் உதடுகள் விளம்பினதைமாற்றாமலும் இருப்பார். ஒருவிசை அவர் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டார், தாவீதுக்கு அவர் பொய்சொல்லார். உன்னுடைய  சந்ததி என்றென்றைக்கும் இருக்கும், உன் சிங்காசனம் சூரியனைப்போல அவருக்கு முன்பாக நிலைநிற்கும். 

சங்கீதம் 89:33-36

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite.   

 Nevertheless My lovingkindness I will not utterly take from him, Nor allow My faithfulness to fail. My covenant I will not break, Nor alter the word that has gone out of My lips. Once I have sworn by My holiness; I will not lie to David: His seed shall endure forever, And his throne as the sun before Me; 

Psalm 89:33-36 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தர் சந்திரனைப்போல உன் சந்ததி என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினார். ஆனாலும் அவர் உங்களை வெறுத்துத்தள்ளிவிட்டார், அவர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானார். கர்த்தரது அடியானுடன் அவர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, உன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினார். உன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, உன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினார். கர்த்தர் அவரது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நீ் உன் மடியில் சுமக்கும் உன் நிந்தையையும் நினைத்தருளுவார்.

 சங்கீதம் 89:37-40,51 

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚    

Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite.  

   It shall be established forever like the moon, Even like the faithful witness in the sky.” Selah But You have cast off and abhorred, You have been furious with Your anointed. You have renounced the covenant of Your servant; You have profaned his crown by casting it to the ground. You have broken down all his hedges; You have brought his strongholds to ruin. With which Your enemies have reproached, O Lord, With which they have reproached the footsteps of Your anointed. 

Psalm 89:37-40,51 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 வழிநடக்கிற யாவரும் உன்னைக் கொள்ளையிடுகிறார்கள், உன் அயலாருக்கு நிந்தையானாய். உன் சத்துருக்களின் வலது கையை கர்த்தர் உயர்த்தி, உன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தார். உன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, உன்னை யுத்தத்தில் நிற்காதபடி செய்தார். உன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, உன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினார். கர்த்தர், அவரது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நீ உன் மடியில் சுமக்கும் உன் நிந்தையையும் நினைத்தருளுவார்.

 சங்கீதம் 89:41-44,51

 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

    Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite. 

All who pass by the way plunder him; He is a reproach to his neighbors. You have exalted the right hand of his adversaries; You have made all his enemies rejoice. You have also turned back the edge of his sword, And have not sustained him in the battle. You have made his glory cease, And cast his throne down to the ground. With which Your enemies have reproached, O Lord, With which they have reproached the footsteps of Your anointed. 

Psalm 89:41-44,51 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 ஆண்டவர் தாவீதுக்கு அவருடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின அவரது பூர்வ கிருபைகள் அவருடைய சத்துருக்கள் அவருடைய ஊழியக்காரரையும்,  அவர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், கர்த்தர், அவரது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நீ உன் மடியில் சுமக்கும் உன் நிந்தையையும் நினைத்தருளுவார். கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். 

சங்கீதம் 89:52 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛   

Remembering the Covenant with David, and Sorrow for Lost Blessings A Contemplation of Ethan the Ezrahite.  

  Lord, where are Your former lovingkindnesses, Which You swore to David in Your truth? Remember, Lord, the reproach of Your servants— How I bear in my bosom the reproach of all the many peoples, With which Your enemies have reproached, O Lord, With which they have reproached the footsteps of Your anointed. Blessed be the Lord forevermore! Amen and Amen. 

Psalm 89:49-52 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 ஆண்டவர்,  தலைமுறை தலைமுறையாக உங்களுக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், ஆண்டவர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார். அவர் மனுஷரை நீர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறார். அவரது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.

 சங்கீதம் 90:1-4 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛    

The Eternity of God, and Man’s Frailty A Prayer of Moses the man of God. 

Lord, You have been our dwelling place in all generations. Before the mountains were brought forth, Or ever You had formed the earth and the world, Even from everlasting to everlasting, You are God. You turn man to destruction, And say, “Return, O children of men.” For a thousand years in Your sight Are like yesterday when it is past, And like a watch in the night.

 Psalm 90:1-4 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 தேவன் மனிதர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறார், நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள், காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். நாம் அவரது கோபத்தினால் அழிந்து, அவரது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். நம்முடைய அக்கிரமங்களை அவருக்கு முன்பாகவும், நம்முடைய அந்தரங்க பாவங்களை அவரது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினார். 

சங்கீதம் 90:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛    

The Eternity of God, and Man’s Frailty A Prayer of Moses the man of God. 

You carry them away like a flood; They are like a sleep. In the morning they are like grass which grows up: In the morning it flourishes and grows up; In the evening it is cut down and withers. For we have been consumed by Your anger, And by Your wrath we are terrified. You have set our iniquities before You, Our secret sins in the light of Your countenance. 

Psalm 90:5-8

 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 நம்முடைய நாட்களெல்லாம் தேவனது கோபத்தால் போய்விட்டது, ஒரு கதையைப்போல் நம்முடைய வருஷங்களைக் கழித்துப்போட்டோம். நம்முடையஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம். தேவனது கோபத்தின் வல்லமையையும், அவருக்குப் பயப்படத்தக்க விதமாய் தேவனது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நாம் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவை நமக்குப் போதித்தருளுவார். 

சங்கீதம் 90:9-12 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛    

The Eternity of God, and Man’s Frailty A Prayer of Moses the man of God. 

For all our days have passed away in Your wrath; We finish our years like a sigh. The days of our lives are seventy years; And if by reason of strength they are eighty years, Yet their boast is only labor and sorrow; For it is soon cut off, and we fly away. Who knows the power of Your anger? For as the fear of You, so is Your wrath. So teach us to number our days, That we may gain a heart of wisdom.

 Psalm 90:9-12 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. கர்த்தர், திரும்புவார், அவர் கோபமாயிரார். அவரது அடியாருக்காகப் பரிதபிப்பார். உங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே உங்களை அவரது கிருபையால் திருப்தியாக்குவார். தேவன் உங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நீங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உங்களை மகிழ்ச்சியாக்குவார். அவரது கிரியை அவரது ஊழியக்காரருக்கும், அவரது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. உங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் உங்கள்மேல் இருப்பதாக, உங்கள் கைகளின் கிரியையை உங்களிடத்தில் உறுதிப்படுத்துவார், ஆம், உங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளுவார். 

சங்கீதம் 90:13-17 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛    

The Eternity of God, and Man’s Frailty A Prayer of Moses the man of God. 

Return, O Lord! How long? And have compassion on Your servants. Oh, satisfy us early with Your mercy, That we may rejoice and be glad all our days! Make us glad according to the days in which You have afflicted us, The years in which we have seen evil. Let Your work appear to Your servants, And Your glory to their children. And let the beauty of the Lord our God be upon us, And establish the work of our hands for us; Yes, establish the work of our hands.

 Psalm 90:13-17

 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.


💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 உன்னதமானவரின் மறைவிலிருக்கிற நீ சர்வவல்லவருடைய நிழலில் தங்குவாய். நீ கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவாய். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார், அவர் செட்டைகளின் கீழே நீ அடைக்கலம் புகுவாய், அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். 

சங்கீதம் 91:1-4

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛     

Safety of Abiding in the Presence of God He who dwells in the secret place of the Most High Shall abide under the shadow of the Almighty. I will say of the Lord, “He is my refuge and my fortress; My God, in Him I will trust.” Surely He shall deliver you from the snare of the fowler And from the perilous pestilence. He shall cover you with His feathers, And under His wings you shall take refuge; His truth shall be your shield and buckler. 

Psalm 91:1-4

 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்குவரும் பலனைக் காண்பாய்.

 சங்கீதம் 91:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛  

   Safety of Abiding in the Presence of God   You shall not be afraid of the terror by night, Nor of the arrow that flies by day, Nor of the pestilence that walks in darkness, Nor of the destruction that lays waste at noonday. A thousand may fall at your side, And ten thousand at your right hand; But it shall not come near you. Only with your eyes shall you look, And see the reward of the wicked.

 Psalm 91:5-8 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். 

சங்கீதம் 91:9-12 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛    

 Safety of Abiding in the Presence of God    Because you have made the Lord, who is my refuge, Even the Most High, your dwelling place, No evil shall befall you, Nor shall any plague come near your dwelling; For He shall give His angels charge over you, To keep you in all your ways. In their hands they shall bear you up, Lest you dash your foot against a stone.

 Psalm 91:9-12 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். நீ கர்த்தரிடத்தில் வாஞ்சையாயிருக்கிற படியால் உன்னை விடுவிப்பார், அவர் நாமத்தை நீ அறிந்திருக்கிறபடியால் உன்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பார். நீ  அவரை நோக்கிக் கூப்பிடுவாய், அவர் உனக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வார், ஆபத்தில் அவரே உன்னோடிருந்து,உன்னைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவார். நீடித்த நாட்களால் உன்னைத் திருப்தியாக்கி, அவர் இரட்சிப்பை உனக்குக் காண்பிப்பார். 

சங்கீதம் 91:13-16

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

     Safety of Abiding in the Presence of God     You shall tread upon the lion and the cobra, The young lion and the serpent you shall trample underfoot. “Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name. He shall call upon Me, and I will answer him; I will be with him in trouble; I will deliver him and honor him. With long life I will satisfy him, And show him My salvation.”

 Psalm 91:13-16 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், பத்துநரம்பு வீணையினாலும், தம்புறாவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே அவரது கிருயையையும், இரவிலே அவரது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். கர்த்தர், அவரது செய்கைகளால் உன்னை மகிழ்ச்சியாக்கினார், அவரது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவாயாக. 

சங்கீதம் 92:1-4

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    Praise to the Lord for His Love and Faithfulness A Psalm. A Song for the Sabbath day.

 It is good to give thanks to the Lord, And to sing praises to Your name, O Most High; To declare Your lovingkindness in the morning, And Your faithfulness every night, On an instrument of ten strings, On the lute, And on the harp, With harmonious sound. For You, Lord, have made me glad through Your work; I will triumph in the works of Your hands. 

Psalm 92:1-4

 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. கர்த்தரது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! அவரது யோசனைகள் மகா ஆழமானவைகள். மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான், மூடன் அதை உணரான். துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். கர்த்தர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறார். 

சங்கீதம் 92:5-8 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    Praise to the Lord for His Love and Faithfulness A Psalm. A Song for the Sabbath day. 

O Lord, how great are Your works! Your thoughts are very deep. A senseless man does not know, Nor does a fool understand this. When the wicked spring up like grass, And when all the workers of iniquity flourish, It is that they may be destroyed forever. But You, Lord, are on high forevermore

. Psalm 92:5-8 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

 கர்த்தரது சத்துருக்கள் அழிவார்கள், அவரது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள், சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். உன் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவார், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுவாய். உன் சத்துருக்களுக்கு நேரிடுவதை உன் கண் காணும், உனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை உன் காது கேட்கும். நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 

சங்கீதம் 92:9-12 

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    Praise to the Lord for His Love and Faithfulness A Psalm. A Song for the Sabbath day. 

  For behold, Your enemies, O Lord, For behold, Your enemies shall perish; All the workers of iniquity shall be scattered. But my horn You have exalted like a wild ox; I have been anointed with fresh oil. My eye also has seen my desire on my enemies; My ears hear my desire on the wicked Who rise up against me. The righteous shall flourish like a palm tree, He shall grow like a cedar in Lebanon. 

Psalm 92:9-12 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙. கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் நம்முடைய தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். கர்த்தர் உத்தமரென்றும், நம் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியம் பசுமையுமாயிருப்பார்கள். 

சங்கீதம் 92:13-15

 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    Praise to the Lord for His Love and Faithfulness A Psalm. A Song for the Sabbath day.

 Those who are planted in the house of the Lord Shall flourish in the courts of our God. They shall still bear fruit in old age; They shall be fresh and flourishing, To declare that the Lord is upright; He is my rock, and there is no unrighteousness in Him. 

Psalm 92:13-15 

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙.