Thursday, 30 April 2020

Christian Missionary History Tamil Part 6

முதலூர் "CITY OF REFUGE" என்று அழைக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட முதல் மற்றும் முன்னணி கிராமமாகும் முதலூர் உருவாக்கம்: "முதல் கிராமம்" என்று பொருள்படும் முதலூர்,

1799 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையில் இருந்து அண்மையில் மதம் மாறிய ஒரு குழுவால் நிறுவப்பட்டது, கிராமத்தின் முதல் குடியேற்றக்காரரான டேவிட் சுந்தரநந்தனின் முயற்சியால், முற்றிலும் கிறிஸ்தவ குடியேற்றத்தை உருவாக்க முயன்றார்.

டேவிட் சுந்தரநந்தனின் அயராத உழைப்பு மற்றும் இராணுவ ' கேப்டன் எவரெட் தாராள நன்கொடையுடன். ஆகஸ்ட், 1799 இல் ஒரு செவ்வக நிலம் Rev. ஜீனாய்க் என்ற பெயரில் வாங்கப்பட்டது.

முதலூரில் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவர்களைத் தடுக்க, டேவிட் சுந்தரநந்தன் முதலூரின் இளைஞர்களுடன் சேர்ந்து “சிலம்பம்” கற்றுக் கொடுத்தார், சிலம்பம் அணிக்கு “தாடிகம்பு சேனா” என்று பெயரிடப்பட்டது. எனவே, டேவிட் சுந்தரந்தன் "தாடிகம்பு டேவிட் சுந்தரந்தன்" என்று அழைக்கப்படுகிறார்.

முதலூரில் சிறந்த வடிகால் அமைப்புடன் ஐந்து நேரான தெருக்கள் உள்ளன. கிழக்கு-மேற்கு ஐந்து வீதிகள் மற்றும் வடக்கு-தெற்கு குறுக்கு வீதிகள் இங்கிலாந்தில் கிராம உருவாக்கத்தை ஒத்திருக்கின்றன.

செயின்ட் மைக்கேல் மற்றும் ஆல் ஏஞ்சல்ஸ் சர்ச் உருவாக்கம்: கிராமத்தில் முதல் தேவாலயம் 1799 ஆம் ஆண்டில் பனை ஓலையால் கட்டப்பட்டது,

ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் எரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,

Rev சத்தியநாதன் இரண்டாவது தேவாலயத்தை கட்டினார்.

மூன்றாவது தேவாலயம் 1816 ஆம் ஆண்டில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்டது. டேவிட் சுந்தரநந்தனுக்குப் பிறகு, Rev எச்.பி. நார்மன் முதலூருக்கு ஒரு சிறந்த சேவையை வழங்கினார். அவர் ஒரு சிறந்த கட்டிடக் கலைஞராக இருந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கத்திய வடிவத்தில் ஒரு பெரிய தேவாலயத்தை கட்டினார். இது 2000 க்கும் மேற்பட்டவர்களை வைத்திருக்கும் திறன் கொண்டது.

1883 நவம்பர் 30 ஆம் தேதி புனித ஆண்ட்ரூவின் நாளில் Rev பிஷப் சார்ஜென்ட் இந்த தேவாலயத்தை அர்ப்பணித்தார். தேவாலயத்தின் நீளம் 152 அடி மற்றும் அகலம் 63 அடி. பலிபீடம் அற்புதமான அழகு மற்றும் தரையிலிருந்து நான்கு அடி உயரம் கொண்டது,

இது பாடகர்களுக்கான பிரத்யேக இடமாகும் Rev எச்.பி. நார்மன் குறைந்த கதைகளுடன் தட்டையாக இருந்தார். எனவே, முதலூர் மக்கள் ஏழு தளங்களுடன் 193 அடி உயர கோபுரத்தை கட்டினர்.

கோபுரத்தின் உச்சியில் தங்க சிலுவையுடன் ஒரு கிரீடம் கல் வைக்கப்பட்டது. புதிய தேவாலய கோபுரம் 1929 இல் அர்ப்பணிக்கப்பட்டது. முதலூர் தேவாலயத்தில் சில தனித்துவமான கட்டடக்கலை வடிவமைப்புகள் உள்ளன.

விவிலிய_ எண் கணிதத்தின் படி, ஏழு எண் “முழுமையின் முழுமை” அல்லது “முழுமை” என்பதைக் குறிக்கிறது. தேவாலய கோபுரத்தில் ஏழு தளங்கள் உள்ளன.

உள் தேவாலயத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு வளைவுகள் கொண்ட ஏழு தூண்கள் உள்ளன.

பலிபீடத்தில் சரியாக ஏழு படிகள் உள்ளன. பலிபீட சிலுவையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏழு மெழுகுவர்த்திகள், ஏழு பதக்க விளக்குகள் மற்றும் ஒரு கண்ணாடி ஹெப்டகன் (ஏழு பக்க பலகோணம்) பலிபீடத்தை அலங்கரிக்கின்றன. சமூக மேம்பாடு: அதன் அஸ்திவாரத்திலிருந்து, முதலூர் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைப் பெற்றுள்ளது.

1803 முதல் கல்வி கிடைத்தது, 1891 இல் ஒரு அஞ்சல் சேவை, 1940 இல் பொது போக்குவரத்து, 1965 இல் ஆரம்ப சுகாதார சேவை மற்றும் 1970 இல் முதல் வங்கி (கனரா வங்கி). தொலைத்தொடர்பு சேவை 1990 இல் தொடங்கப்பட்டது. முதலூர் பஞ்சாயத்து 1955 இல் அமைக்கப்பட்டது.

சுவி . தாவீது சுந்தரானந்தனார் உபதேசியார் * முதலூர் கி . பி . 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்பொழுது - தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட நாடார் குலத்தின் நற்செய்தியை பறைசாற்ற கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர் அவ்வின மக்களின் தலைவர் என்று ஐரோப்பாவில் அறியப் அவ்வினத்தின் * முதல் கிறிஸ்தவ உபதேசியார் .

* நெருக்கடி இன்னல்கள் பிரச்சனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாத்தவர் , சாயர்புரம் நாசரேத் , சமாரியா , பெத்லகேம் , எருசலேம் , கடாட்சபுரம் அன்பின் நகரம் , சுவிசேஷபுரம் போன்ற பல கிறிஸ்தவ குடியேற்றங்களின் முன்னோடி , முதலூரின் தந்தை என்று அழைக்கப்படும் * தாவீது . சுந்தரானந்தன் *

சாத்தான்குளத்திற்கும் முதலூருக்கும் இடையில் உள்ள காலன்குடி என்னும் சிற்றூரைச் சார்ந்தவர் . இவரது இயற்பெயர் சின்னமுத்து . இளம் வயதிலேயே பெற்றோர் இறந்துவிட , அவரும் அவரது சகோதரியும் விஜயராமபுரம் என்ற சிற்றூரில் வசித்துவந்த அவரது தாய்மாமா அத்தையினால் வளர்க்கப்பட்டனர் . இளம்வயதிலே மிகவும் புத்திக்கூர்மைமிக்கவராய்த் திகழ்ந்த சுந்தரானந்தன் , மருத்துவம் , தத்துவம் , ஜோதிடம் ஆகியவற்றில் மிக்க ஆர்வம் காட்டினார் .

ஆனால் அவரின் போக்கு அவரது அத்தைக்கு பிடிக்கவில்லை . அவரது 17வயதில் , ஒருநாள் கொடுத்த வேலையை செய்ய தவறியதற்காக அவரது அத்தை அவரை தயிர்கடையும் மத்தால் அடித்துவிட்டார் . அதனால் வருத்தமுற்ற சுந்தரானந்தன் வீட்டைவிட்டு வெளியேறி கருப்பட்டி ஏற்றிச் சென்ற வண்டியின் பின்னால் இராஜபாளையம் சென்றார் .

அங்கிருந்து தஞ்சாவூர் சென்றார் . அங்கு அருட்திரு சுவார்ட்சுடன் தொடர்பு ஏற்பட்டு இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தார் .

* 1798ம் ஆண்டு நெல்லைப் பகுதிகளில் ஊழியம் * செய்து வந்த - சத்தியநாதன் தன் ஊழியத்திற்கு உதவியாக ஒரு உபதேசியாரை அனுப்பும்படி சுவார்ட்சு ஐயரை வேண்ட , சுவார்ட்சு ஐயரவர்கள் தாவீதை அங்கு உதவியாக அனுப்பினார் . தமது 21 வயதில் தாவீது மீண்டும் நெல்லை வந்தார் . கிளாரிந்தாவின் மேற்பார்வையில் நடைபெற்று வந்த பள்ளியில் ஒரு வாரம் பணி செய்துவிட்டு தான் வளர்ந்த ஊராகிய விஜயராம் புரத்திற்குச் சென்றார் .

மரித்துவிட்டார் என்று கருதப்பட்ட சுந்தரானந்தன் , வீடு திரும்பியது அவரது உறவினர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது . தாவீதும் காலம் தாழ்த்தாது கிறிஸ்துவில் தான் கொண்டிருக்கும் விசுவாசத்தையும் கிறிஸ்துவில் தான் கண்ட இன்பத்தையும் தன் உறவினரோடும் இனத்தாரோடும் பகிர்ந்துகொண்டார் .

பின் பாளையங்கோட்டைக்குத் திரும்பி , 1797ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி சத்தியநாதனுடன் மீண்டும் விஜயராமபுரத்துக்கு வந்தார் . தாவீதின் இனத்தார் அவர்களை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று கிறிஸ்துவின் ' ' சுவிசேஷத்தை ஆவலுடன் கேட்டனர் . தொடர்ந்து அப்பகுதியில் * 16 ' நாட்கள் * செய்த ஊழியத்தின் பயனாக நான்கு குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் . விஜயராமபுரத்தில் பள்ளிகூடம் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது . புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது .

இவர்கள் தங்கள் - விசுவாசத்திற்காக கிறிஸ்தவரல்லாதவர் களிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது . விஜயராமபுரத்தில் இருந்த அவர்களின் சிறு ஆலயம் இருமுறை தீக்கிரையாக்கப்பட்டது . அவமானம் , நிந்தை , கேலிபேச்சுகள் பெருகின . இந்த இடர்களிலிருந்து நீங்கி கிறிஸ்தவர்கள் நிம்மதியாக ஓரிடத்தில் வாழ வேண்டுமென்று தாவீது விரும்பினார் .

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ ' கேப்டன் எவரெட் என்பவர் தாவீதுக்கு உதவ முன்வந்தார் . அவரளித்த பணத்தைக் கொண்டு அடையல் என்ற கிராமத்தின் அருகில் ஓர் இடத்தை தாவீது வாங்கினார் இப்புதிய நிலத்தில் ஒரு புதிய ஜெப அறையைக் கட்டினார் . கிணறு ஒன்றையும் தோண்டினார் .

கிறிஸ்தவர்கள் இப்புதிய இடத்தில் குடியேறுமாறு அழைப்புக் கொடுத்தார் . விஜயராமபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் 1799 - ல் இங்கு குடியேறினர்

* இப்புதிய குடியிருப்பு முதலூர் என்று ! அழைக்கப்பட்டது * முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் கிராமமாகையால் அப்பெயர் பெற்றது . 1800ல் முதலூரின் மக்கட்தொகை 200 ஆக பெருகியது . தாவீது , முதலூரின் உபதேசியராக பணியாற்றினார் . கிறிஸ்தவர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பொழுதெல்லாம் இன்னல்களை தாங்க இயலாது கிராமங்களில் இருந்து முதலூரில் குடியேறினார்கள் மேலும் தாவீதின் அயராத உழைப்பால் அவரது இனமக்கள் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் .

ஏப்ரல் 1802க்கும் ஜூன் 1803க்கும் இடையில் பாக்கியநாதன் 70 கிராமங்களை சார்ந்த 5382 பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் . திருச்சபை வளர்ந்து பெருகியது . மீண்டும் துன்பக் காலம் ஆரம்பித்தது . முதலூர் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டார்கள் .

1803 ம் ஆண்டு மே 22 - ம் நாள் முதலூர் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது . பல இன்னல்கள் மத்தியிலும் முதலூர் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்றனர் . தொடர்ந்து பலர் கிறிஸ்துவண்டை சேர்ந்தனர் . நாளடைவில் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது . தாவீதால் அநீதியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை .

தம் மக்களைக் கொடுமையிலிருந்து காக்க வேண்டும் என்று தாவீது எண்ணினார் . முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று எண்ணின் தாவீது * தடிக்கம்புக்காரர் * என்ற கிறிஸ்தவ இளைஞர் குழுவை ஆரம்பித்தார் . எங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனரோ அங்கு தடிக்கம்புக்காரர் சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து விட்டு திரும்புவர் .

ஆனால் இந்தக் காரியம் கடும் விமர்சனத்திற்குள்ளானது . . தாவீதுக்கும் பிற ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை வளர்த்தது . சுற்றுப்புறத்தில் இருந்த கிறிஸ்தவரல்லாத மற்ற மதத்தினர் தாவீதின் இந்த தடிக்கம்புக்காரர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர் . அவரைக் கொல்வதற்கும் வகைதேடினர் .

1806ம் ஆண்டு பெத்லகேம் என்ற ஊரில் தாவீது இறந்து கிடந்தார் . * குட்டம் கிராமத்து மக்கள் தாவீதுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர் * , அதன் விளைவாக அவர் இறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்பினர் . எப்படியாயினும் நம் மண்ணில் இருந்து கிறிஸ்துவுக்காய் எழுந்த மற்றும் வீழ்ந்த முதல் வித்து தாவீது சுந்தரானந்தம் என்பது மறக்க முடியாத உண்மை .

கோகிலா – கிளாரிந்தா ஆன கதை ! எரியும் சிதையில் இருந்து மீண்ட பார்ப்பன பெண் !

கிளாரிந்தா அம்மையார் (1746-1806) : 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் CAPT.HARRY LYTTLETON என்ற ஆங்கில அதிகாரி தஞ்சாவூரில் பணிபுரிந்த அந்த நாட்களில் கணவன் இறந்த பின் மனைவி உடன்கட்டை ஏறும் “சதி” என்ற வழக்கம் இருந்துள்ளது. அம்மாதிரியான ஒரு கொடுமையான சம்பவம் நடைபெறுவதிலிருந்து

ஒரு பிராமண பெண்ணை அந்த ஆங்கில அதிகாரி காப்பாற்றி பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். அந்த பெண் பின்பு கிறிஸ்தவ சமய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். அவரது நினைவிடம் அமைக்கப்பட்ட இடத்திலேயே அவர் பெயரில் சிற்றாலயம் கட்டப்பட்டு “ROYAL CLARINDA” என்று அழைக்கப்படுகிறது. — at Clarinda Church Palayamkottai.


கோகிலா .கிளாரிந்தா ஆன கதை !

(இது ஒரு திருநெல்வேலி சீமையில் இடம்பெற்ற வரலாறு ) எரியும் சிதையில் இருந்து ஒரு பார்ப்பன பெண்ணை கதாநாயகன் மாதிரி அவளை புயலென குதிரையில் வந்து காப்பாற்றி தூக்கி சென்றவன் ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.

ஒரு இளம்பெண்ணை உயிரோடு எரிக்கிறார்களே என்ற மனிதாபிமானத்தோடு தான் அவன் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்றான். கோகிலாவின் உறவினர்கள் கொதித்து எழுந்தார்கள். அவளை சமூக புறக்கணிப்பு செய்தார்கள். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. .

ஆனால், அன்றைய பாதிரியார் ச்வார்ட்சு அவளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தார். காரணம் கோகிலா மராட்டிய ராஜ வம்சத்தை சேர்ந்த பிராமணப்பெண் தஞ்சாவூரில் 1770 இல் மகாராஷ்டிர மன்னர்களின் ஆட்சி இருந்த காலம். கோகிலாவின் கணவன் தஞ்சை அரண்மனையில் முக்கிய அதிகாரி.

என்ன நேரமோ..அவன் திடுதிப்பென்று செத்துப் போனான். அக்கால வழக்கப்படி கோகிலாவை உடன்கட்டை ஏற செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கோகிலாவோ இளம் வயது. சிதையில் தீமூட்டி அவளை உள்ளே தள்ளியபோது, நம்ம தமிழ்ப் பட கதாநாயகன் போல ஹென்றி லிட்டில்டன் என்ற கிழக்கிந்தியக்கம்பெனி படையின் ராணுவ அதிகாரி.காப்பாற்றினான்.

பின்னாளில் பாளையங்கோட்டைக்கு லிட்டில்டன் மாற்றலாகி வந்தார். அவரோடு கிளாரிந்தாவும் வந்து சேர்ந்தார். இருவரும் வாழ்வில் இணைந்து விட்டார்கள்.

கொஞ்ச நாளில் லிட்டில்டன் இறந்து விட்டார். அதன்பிறகு கிளாரிந்தா கிருஸ்தவ இறைப்பணியை செய்ய தொடங்கி விட்டார். தான் வாழ்ந்த வீட்டருகே ஒரு தேவாலயத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டினார். அருகே பொதுமக்கள் பயன்படுத்த ஒரு கிணறு வெட்டினார். தென்னிந்தியாவில் இவர் கட்டிய இந்த தேவாலயமே தென்னிந்திய திருச்சபையின் முதல் தேவாலயம்.

1783 இல் துவங்கி, 1785 இல் முடிந்தது. முன்னாளில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த அதே சுவார்ட்சு பாதிரியார் தான் இந்த தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது வினோதம் தான்.

இந்த கிளாரிந்தா அம்மையார் நிறுவிய முதல் திருச்சபை பதிவேட்டில் 40 பேர் கொண்ட பட்டியல் இருக்கிறது. 1780 இல் எழுதப் பட்டது. கிளாரிந்தாவில் தொடங்கி அவரது சமையல்காரி சாராள், யோவான் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்கள் 13 வகை சாதியினர். இந்தப் பட்டியலில் அக்காயி என்றொரு பிச்சைக்காரியின் பெயரும் அடங்கும்.

இந்த கோகிலா என்ற கிளாரிந்தா கட்டிய தேவாலயம் இன்றும் இருக்கிறது. இவர் வீட்டின் அருகே தோண்டிய கிணறு இன்றும் பாப்பாத்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் குப்பையைக் கொட்டி இப்போது பாழடித்து விட்டனர் மக்கள்.

இந்த கிளாரிந்தா தான் முதன்முதலில் குழந்தைகள் கல்வி பயில ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, ஆசிரியர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் வழங்கினார். அக்கால நாவலாசிரியர் அ.மாதவையா கிளாரிந்தா என்ற ஆங்கில நாவல் எழுதி இருக்கிறார். அதில் கோகிலா பற்றிய பல விபரங்கள் உள்ளன.

குளோரிந்தா பிறந்த குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள் தான் திருநெல்வேலிக்கு முதல் ஊழியக்காரி ஞானஸ்நானம் பெற்ற குளோரிந்தா சுவிசேஷத்தை அறிவித்து வந்தார் அநேகரை கிறிஸ்துவின் மந்தையில் இணைக்க விரும்பினார் . தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்களிடம் சுவிசேஷத்தை அறிவித்தார் . குளோரிந்தாவின் வீடு வாஞ்சையை அறிந்திருந்த சுவார்ட்ஸ் பாளையங்கோட்டை திருச்சபையின் பொறுப்பைக் குளோரிந்தாவிடம் ஒப்புக் கொடுத்தார் .

ஆண்டவரின் ஊழியத்தை உண்மையோடு செய்தார் குளோரிந்தா , குளோரிந்தாவின் ஊழியத்தினால் திருச்சபை வளர்ந்து பெருகியது . சுவிசேஷத்தை அறிய அநேகர் அவருடைய வீட்டிற்கு வந்தார்கள் . வெளியே சென்றும் அவர் சுவிசேஷத்தை அறிவித்தார்

* முதல் சபை டாப்பு * ( பதிவேடு ) குளோரிந்தா ஞானஸ்நானம் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்து சென்றன . 1780ஆம் ஆண்டு சபையில் 40 அங்கத்தினர் இருந்தார்கள் .

1780 ஆண்டு முதல் சபை டாப்பு எழுதப்பட்டது குளோரிந்தாவின் பெயர் சபை டாப்பில் முதலாவதாக எழுதப்பட்டது .

* குளோரிந்தா தான் பிறந்த பிராமணக் குலத்தினால் புறக்கணிக்கப்பட்டவள் .

* குளோரிந்தா ஆரம்பித்த சபையில் 40 பேரில் 13 இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் .

அந்த நாற்பது பெயர்கள் .

  1. குளோரிந்தா பிராமண சாதி
  2. சாராள்
  3. ஹென்றி லிட்டில்டன்
  4. ஜாண்
  5. மனைவி மேரி
  6. மகள் சூசன்னா
  7. மகள் கிறிஸ்டினா
  8. தாவீது .
  9. சாலொமோன்
  10. பாஸ்கல்
  11. மனைவி பாலி
  12. மகன் சாமுவேல்
  13. தாவீது வடுகர் சாதி
  14. மனைவி பட்டி
  15. பிச்சை முத்துப் பண்டிதர் - சலவைத் தொழிலாளி சாதி
  16. நாகல நாயக்கர் , வலங்கை மறித்தான் - பறையர் சாதி
  17. ஞானமுத்து ஈழவர் சாதி
  18. மாசிலாமணி பிள்ளை
  19. ஞானமுத்து சவளக்காரன்
  20. நல்லதம்பி ஆசாரி - தச்சர்
  21. கேவசகாயம் பிள்ளை - கிருநெல்வேலி நகர்
  22. மனைவி ஞானப்பூ
  23. மகள் சூசையம்மாள்
  24. மகன் வேதநாயகம் ( வேதநாயகம் சாஸ்திரியார் )
  25. மகள் பாக்கியம்
  26. மகன் சுவிசேஷமுத்து
  27. ஞானப்பிரகாசம் செட்டியார்
  28. குருபாதம் ஆசாரி
  29. அக்காயி - பிச்சைக்காரி
  30. ராயப்பன் - குதிரைக்காரன்
  31. ராயப்பன் - பள்ளர் சாதி
  32. ராயப்பன் - மறவர் சாதி
  33. * * - - பிராமண சாதி
  34. மகள் பெட்ஸி வாலிமூர்
  35. வளர்ப்பு மகன் சாமு வேல்
  36. வேலைக்காரி - சின்னம்மாள்
  37. மகன் ராயப்பன்
  38. மகள் சவரியம்மாள்
  39. சுவாமிதாசன் - பணிக்கர் சாதி
  40. பாக்கியநாதன் - சவளக்காரன்

உன்னதமான தேவனுடைய ஊழியர்களின் தொகுப்பிலிருந்து திரட்டியது

15 வயதில் இறக்க வேண்டிய பெண்ணான கிளாரிந்தா, தனது 60 ஆவது வயதில் பாளையங்கோட்டையில் இறந்தார். சென்னை மாகாணத்தில் தென்னிந்திய திருச்சபை வரலாற்றை எழுத வேண்டும் எனில், கோகிலா என்ற கிளாரிந்தாவின் வாழ்க்கையில் இருந்து தான் தொடங்கவேண்டும். 25.2.1796 இல் இவரது நினைவு நாள் .

ஹென்றி மார்ட்டின்: 1781 – 1812

ஆண்டவருக்காக நான் எரிந்து போகட்டும் என்று கூறிய ஹென்றி மார்ட்டின் 1781-ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள கார்ன்வல் என்ற இடத்தில் பிறந்தவர்.

செல்வச் செழிப்புள்ள வியாபாரியின் மகனான இவர் சிறு பிராயத்திலேயே சகல வசதிகளையும் பெற்றிருந்தார். பளிப்படிப்பிற்குப் பின், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நுழைந்த இவர் கணிதத்தில் முதல் மாணவனாகத் தேறினார். வாலிப வயதில் ஆண்டவரைத் தேடாமல் வாழ்ந்து வந்த இவரை அன்புத் தந்தையின் மரணம் ஆவிக்குரிய தேடலை ஏற்படுத்தியது. இவரது சகோதரியின் ஜெபங்களும், போதகரின் ஆலோசனைகளும், டேவிட் பிரய்னார்ட் எழுதிய புத்தகமும் ஹென்றி மார்ட்டின் தன்னை ஆண்டவரிடம் பூரணமாக அர்ப்பணிக்க உதவியது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து வந்த ஹென்றி மார்டினை, டேவிட் பிரய்னார்ட், வில்லியம் கேரி போன்ற மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு கவர்ந்தது.

அதனால் தானும் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டுமென வாஞ்சை கொண்டார். மிஷனெரிப் பணிக்காக, தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் செலவழித்தார். இந்த உலகத்தை வெறுத்து, தேவனை மட்டும் மகிமைப்படுத்தும் நோக்கம் கொண்டவனாக தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

அவர் திருமணம் செய்ய விரும்பிய லிடியா என்ற பெண், மிஷனெரியாக வர விருப்பம் கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் திருமணத்தை கைவிட்டுவிட்டு தேவ அழைப்புக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தார். நெருங்கிய நண்பன் ஒருவனின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைவரான சார்லஸ் கிரண்ட் என்பவரைச் சந்தித்தபோது மார்ட்டினை கிழக்கிந்தியக் கம்பெனியின் போதகராக நியமித்து இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்ப வாக்குப் பண்ணினார்.

அவரது வாக்குப்படி 1805-ம் ஆண்டு மார்ட்டின் ஒரு ஆங்கிலிக்கன் போதகராகக் குருப்பட்டம் பெற்றார். அடுத்த மாதமே கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒன்பது மாத கப்பல் பிரயாணத்திற்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார். அப்போது, அவருக்கு வயது இருபது நான்கு. கல்கத்தாவில் கரையிறங்கிய மார்ட்டின்

ஆயிரக்கணக்கான குழந்தைகளை பட்டினி மரணத்திலிருந்து காப்பாற்றி ஆதரித்து வரும் டேவிட் பிரவுனை சந்தித்து, அவருடன் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது தெய்வ சிலைகளைத் தேரோட்டமாக இழுத்துவரும் பெரும் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் நெருக்கடியில் ஒரு சிறுவன் அந்த தேரின் சக்கரத்தின் அடியில் விழுந்து நசுங்கியபோது மார்ட்டின் நிறுத்துங்கள் என்று உரத்த சத்தமாகக் கத்தினார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும் சிலர் தானாகவே அந்த சக்கரத்தின் அடியில் விழுந்து தங்களைப் பலியாக்கிக் கொண்டதையும் பார்த்து அதிர்ந்து போனார்.

இவர்களது மூடநம்பிக்கையை எப்படி மாற்றுவது? என்று அதிக பாரம்கொண்ட அவர் தற்கால மிஷனெரி ஊழியத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம்கேரியிடம் சென்றார். பதிமூன்று வருட மிஷனெரி அனுபவம் கொண்ட மூத்த மிஷனெரியான கேரி மூலம் ஆண்டவரது வார்த்தை மட்டுமே மக்களை மூடப்பழக்கவழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதை அறிந்துகொண்டார்.

டேவிட் பிரவுனின் தோட்டத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரையில் கணவனது இறந்த உடலுடன் விதவையான மனைவியும் உயிருடன் எரிக்கப்படுவதையும் அடிக்கடி மார்டின் பார்த்தார்.

இந்த மூடநம்பிக்கைகள் மாறவேண்டுமாயின் விரைவில் இந்திய மக்களின் கையில் சத்திய வேதம் கொடுக்கப்படவேண்டும் என எண்ணினார். அதற்கென ஹென்றி மார்ட்டின் வங்காளம், சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தான் அராபிய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். பாட்னா என்ற இடத்தில் அரசாங்க சபைப்போதகராக, காலை நேரங்களில் பணி புரிந்துவிட்டு சாயங்கால நேரத்தில் வேதத்தை இந்துஸ்தானி, பாரசீகம், அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அதோடு இந்தியர்களை வேதத்தை கற்கச்செய்ய சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பள்ளிகள் அமைத்து எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஊழியம் நிமித்தமாக மார்ட்டின் பல மைல் தூரம் நடந்து சென்றார்.

அவரது உயர் அதிகாரிகள் நீங்கள் இப்படி அதிக வெப்பமான இந்தக் கால சூழ்நிலையில் தெருவில் நடக்கக் கூடாது. அது வெள்ளை மனிதரான உங்களுக்கு மதிப்பும் இல்லை என்றனர். அதற்குப் பதிலாக மார்ட்டின் என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் நடந்து சென்றே ஊழியம் செய்தார். நான் அவருடைய ஊழியக்காரன் மட்டுமே என்றார்.

அன்றிருந்து இந்திய மக்கள் தொகையான அறுபது மில்லியன் மக்களுக்கு இந்த நற்செய்தி கிடைக்க வேண்டும் என்ற பாரத்துடன் இந்தியில் இரவு நேரங்களில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். ஒரு அதிகாரத்தை மொழி பெயர்க்க 10 மணி நேரம் ஆனது. கடின உழைப்பின் பயனாக இந்தி மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது.

அதற்குப்பின் அராபிய மொழியில் வேதம் இருந்தால் இந்தியர் மட்டுமல்ல அராபியர், பார்ஸிகன், சீரியர், சீன, ஆப்பிரிக்கத் தேசத்தின் பெரும் பகுதியினர், மற்றும் துருக்கி மக்களுக்கு நற்செய்தியைக் கையில் கொடுக்கமுடியுமே என்ற சவாலுடன் அராபிய பாரசீக மொழிகளளக் கற்று அதில் வேதத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.

தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்ற வசனத்தின்படி, ஒரு சமயம் 400 பிச்சைக்கார‌ர்களை அழைத்து அவர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர்களில் பலர் சாதுக்கள், பணம், அரிசியை எதிர்பார்த்து வந்த இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டனர். சில வாலிப முகமதிய சகோதரர்கள் இந்த வெள்ளை மனிதன் பிச்சைக்காரர்களுக்கு என்ன சொல்கிறார் என்று ஒளிந்திருந்து கேட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டனர்.

பல முகமதியருடன் நெருங்கிப்பழகி அளவளாவியும் சுவிசேஷத்தைப் போதித்தார். முகமதியர்கள் மத்தியிலும் சிறந்த ஊழியம் செய்தார். அதன் பயனாகச் சில முகமதியர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, சிறந்த கிறிஸ்தவத் தொண்டர்களாகப் பணியாற்றினார்கள். தீனாப்பூரில் ஐந்து பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் மூலம் அநேக ஏழைப் பிள்ளைகள் படிப்பறிவு பெற்றனர்.

இவருடைய முயற்சியால் ஒரு ஆலயம் கட்டப்பட்டு 1806 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிறிஸ்துவின் உவமைக்கு விளக்கம் ஒன்றை இந்தியில் எழுதி வெளியிட்டார். ஜெபப்புத்தகத்தையும் இந்தியில் மொழிபெயர்த்தார். மார்ட்டினின் கடின உழைப்பும், இந்திய தெருக்களின் புழுதியும் அவரது நுரையீரலை பாதிக்க ஆரம்பித்தன. இந்தியாவின் வெப்பமும் அவரை அதிகம் பாதித்தது. ஓய்வே எடுக்காமல் அதிக கடினமாக அவர் உழைத்தார். பதினெட்டு மாதத்தில் அராபிய பாரசீக மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார்.

அவரது உடல் அதிக பெலவீனப்பட்டபோது, டாக்டர்கள் அவரிடம் நீர் உடனே இந்தியாவை விட்டு வெளியேறி உமது தாய்நாடு செல்லவேண்டும் என்றார்கள். ‘இந்தியாவை விட்டு வெளியேறி பாரசீகம் போக விரும்புகிறேன். நான் மொழி பெயர்த்த பாரசீக புதிய ஏற்பாட்டை அதே மொழிபேசும் மக்களுக்குக் கொடுத்து அதைத் திருத்தம் செய்ய விரும்புகிறேன்’ என்றார். டாக்டரோ ‘நீர் அங்கு வாழவே முடியாது. நரகத்தைப் போன்று அதிக வெப்பம் உள்ள பகுதி அது’ என்றார். தேவனுக்காக பெரிய காரியத்தைச் செய்வதே எனது நோக்கம் என்று கூறிவிட்டு பெர்சியாவை நோக்கிப் பயணமானார் அவர்.

இந்துமகா சமுத்திரத்தைக் கடந்து பெர்சியாவின் புஷ்ஷிர் என்ற இடத்தை அடந்தபோது எரிபந்தமாக எரிகிற அந்த வெப்பமான சூழ்நிலை அவருக்கு அதிகத் தலைவலியைத் தந்தது. பெர்சியாவின் பண்டிதர்களிடம் தனது புதிய ஏற்பாட்டைக் கொடுத்தபோது, ஒரு பள்ளிச் சிறுவன் இதனை மொழி பெயர்த்துள்ளதுபோல இருக்கிறது என்று சொல்லி அங்குள்ள பெரிசிய நண்பர்கள் அதனைத் திருத்தம் செய்ய முன் வந்தனர். பலமணி நேரம் அவர்களுடன் தரையில் உட்கார்ந்து திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார்.

அங்கு சிலவேளைகளில் வெப்பம் 126 டிகிரியை தொட்டது. வெப்பம் தாங்கமுடியாமல் ஷிராஜ் என்ற மலைபாங்கான நகரில் 1811-ம் ஆண்டு சென்று தங்கி, தனது பணியைத் தொடர்ந்தார். ஒன்பது மாதங்களின் கடின உழைப்பினால் ஒரு நேர்த்தியான பாரசீக மொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். பெர்சிய வேதாகமத்தை பெரிசியாவின் அதிபதி ஷாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற விரும்பினார். 600 மைல் தொலைவிலுள்ள டேகரான் என்ற இடத்தில் அந்த அதிபதி இருந்தார். மார்ட்டின் அதிக பெலவீன சரீரத்துடன் 30 நாட்கள் பயணப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றார்.

அதிபதியை சந்திக்க அங்கு இருந்த வைசிராய் அனுமதி மறுத்துவிட்டார். டெப்பிரிஜ் என்ற இடத்திலுள்ள பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுக்க அனுமதி தரப்பட்டது. சுமார் 400 மைல் தூரத்தை 30 நாட்கள் பயணம் செய்து டெப்பிரிஜ் என்ற இடத்தை அடைந்தார். அதிக காய்ச்சலுடன் மரணத்தை நெருங்கிவிட்ட மார்ட்டின் பாரசீக புதிய ஏற்பாட்டை பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்புதலுக்காக பத்திரமாக ஒப்படைத்தார். அதன்பின் தனது சரீர சுகத்திற்காக இங்கிலாந்து திரும்ப முயற்சித்தபோது கான்ஸ்டாண்டி னோபிளிலிருந்து 250 மைல் தூரத்திலிருந்த தோகட் என்ற இடத்தில் தனது 31-ம் வயதில் (1812-ம் ஆண்டு) தேவனுடைய இராஜ்யம் சென்றடைந்தார்.

தரிசனங்களை தரிசாக மாறாவிடாது காக்கும் தரிசன வீரர்கள் நீண்ட நாட்கள் வேண்டுமானால் வாழாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நிறைவேற்றி முடித்த பணி வாழையடி வாழையாக, நின்று மக்களை இயேசுவின் பக்கம் திருப்பவே செய்கிறது. ஆம்! ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்த வேதாகமம் இன்னும் அநேகரை தேவனண்டை திருப்பும் பணியை ஓய்வு ஒழிவு இன்றி செய்கிறது.

கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.


இளமைக் காலம்

இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டிஎன்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று

1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர்நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.


மொழியியல் ஆய்வுகள்

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார்.

திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்ல எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே.”

வரலாற்று ஆய்வுகள் திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.

மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக “தின்னவேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார்.

இது 1881 ஆம் ஆண்டில் மதராஸ் அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட ராபர்ட் எரிக் ஃபிரிக்கென்பர்க் (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.

கால்டுவெல் இயற்றிய தமிழ் நூல்கள் நற்கருணை தியான மாலை (1853)தாமரைத் தடாகம் (1871)ஞான ஸ்நானம் (கட்டுரை)நற்கருணை (கட்டுரை) உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும்நூலாக உள்ளது.

அதுபோலத் தமிழக வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும்மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரானகால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலகஅளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தைஅந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் “தேவ பாஷை’ எனவும் தமிழை “நீச்சபாஷை’ எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவைஎன நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர்.இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.

தமிழ்மொழிமிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையேதெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள்திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக்கால்டுவெல் வெளிப்படுத்தியவர்.

தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்துஇயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டிநிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்தஅழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால்கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.


கால்டுவெல்லின்வருகை

கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும்கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறுஅனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.

கால்டுவெல் அவர்கள்அயர்லாந்து நாட்டில் உள்ள “கிளாடி’ எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில்பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டுபெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று “கிளாஸ்கோ’ நகரில்வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக்கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில்பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனைவாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. கால்டுவெல் தம் இருபதாம்அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர்சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோபல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்தநூல்களையும் சமய நூல்களையும் கற்றார்.இதன் பயனாக இரண்டுந அச்செம்மொழியின் பெருமையைமாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல்பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின்வகுப்புரைகளே ஆகும

். இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச்சமயப் பணிக்கு என 1838ல் “அன்னமேரி’ என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப்பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சுகப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர்.பழுதுற்ற கலத்தைப் “பிளிமத்’ என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர்.தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம்செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும்குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணிபுரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார்.

அவர் வழியாகக் கால்டுவெல்அம்மொழிகளைக் கற்றார். கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்புஇருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் “துருவர்’எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில்மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ளதிருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போதுமக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் எனநினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார்.மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ்மி­ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர்சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டுமகிழ்ந்தார்.அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு

உரையாடினார்.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டுமகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக்கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

நீலமலையிலிருந்துஇறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறுஇழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத்தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடிஉண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்குஇல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டுமாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள்.

சத்திரத்தில் இடம்கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒருவீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். மதுரை வந்தடைந்தபின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டுஉரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841).

பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒருவிரிவுரையும் செய்தார்.பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையயான்றுநிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம்சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில்நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.இடையன்குடி என்பது பெரும்பாலும்பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும்நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும்உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார்.

அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராகமாற்றினார்.1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார்அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில்ஒருவாரம் தங்கினார்.

500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது. இடையன்குடியில்மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்தகாலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல்கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம்கால்டுவெல்லின் கவனம் திரும்பியது.

திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல்முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில்உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததைஉணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார்.

கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில்தங்கியிருந்துள்ளார். கால்டுவெல் “தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்’ உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன்செய்துள்ளார்.மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில்இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின்திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல்எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின்தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசாஎன வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.கொற்கைத் துறைமுகம் பற்றியஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும்கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார்.

ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும்சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார்.இன்றுள்ளகொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார்.

இவ்வூரும் பண்டைய கடற்கரைத்துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார். மேலும் மகாவம்சம்முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல்எழுதியுள்ளார்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றியபலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில்பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும்கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையேஉள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத்தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள்எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும்வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோபல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின்ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில்தொல்காப்பியம்

முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்தஇவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இராபர்ட்கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம்நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றிமதித்துள்ளார்.””திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்குமிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல்எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல்கண்காணியரே…

இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாளமொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும்திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன்மாரிக்குப்பட்டுள்ளதேயயனினும் பொருந்தும் “”(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் “….தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும்கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத்தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவுசெய்துவிட்டார்.” (தமிழ்வரலாறு, ப.33) எனவும்

“கால்டுவெல் ஐயர்கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்’ (த.இ.வ. ப. 48) எனவும்பாவாணர் குறிப்பிடுவார். கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர்.பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவுநிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும்வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காதஇடம் பெற்றவர்.

இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல்அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள்தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையயல்லாம்மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத்தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார். கால்டுவெல்தம்

29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும்நன்கறிந்தவர்.இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர்.பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.எலிசா வழியாகக் கால்டுவெல்பேச்சுத் தமிழைக் கற்றார்.

கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்குமக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் (புddஷ்ஐஆமிலிஐ) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள்திருச்சியில் “வியத்தர்’ என்பவரை மணந்தாள். இளைய மகள் “லூயிசா’ ஆங்கிலப்படைவீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.

கால்டுவெல் வாழ்க்கைஎளிமையானது.பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சிகூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார்.மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில்உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணிபுரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவிசெய்தார்.

கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடுசென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84). கால்டுவெல்திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல்சென்று தங்கியிருந்தார்.

அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதைவசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார்.ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று

1891 ஆகத்துமாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக்கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது. கால்டுவெல்பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“”நான் அயர்லாந்துதேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில்ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகஇந்தியப்பெருநாடும்,அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக்கவர்ந்துகொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்.

இந்தியர்களுள் ஒருவராகஇருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ்பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

பாகம் 1

கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாறு நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

86 வருடம் நன்மை செய்த இயேசுவை எப்படி மறுதளிப்பேன் இயேசுவின் சீடரான யோவானின் ஆவிக்குரிய மகன்களில் (சீஷர்களில்) ஒருவரான பொலிகார்ப் (Polycorp) கி.பி 69-ல் பிறந்து ஸ்மைர்னா பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். இன்றைய துருக்கியில் உள்ள லிஸ்மிர் (Lzmir, Turkey) அந்த நாட்களில் ஸ்மைர்னா (Smyrna) என்று அழைக்கப்பட்டது. இந்த ஸ்மைர்னா பட்டணத்தில் அப்போஸ்த்தலராகிய பவுல் கிறிஸ்துவை அறிவித்து இருந்த்தால் ஒரு சிறு கூட்ட கிறிஸ்தவர்கள் அந்த பட்டணத்தில் இருந்தார்கள்.

இந்த ஸ்மைர்னா சபையானது கிறிஸ்துவின் நிமித்தம் துன்புறுத்தப்பட்ட ஆசியாவின் ஏழு சபைகளுள் ஒன்றாகும். அப்போஸ்த்தலராகிய யோவான் எழுதிய வெளிப்படுத்தின புத்தகத்தில் 1:11 - ல் அதை நாம் வாசிக்கலாம். கிறிஸ்து மரித்து உயிர்த்த முதல் நூற்றாண்டில் அநேக கிறிஸ்துவர்கள் ரோமானிய அரசர்களால் துன்புறுத்தப்பட்டனர். அப்போஸ்தலர்கள் இரத்த சாட்சியாக மரித்தனர். இந்த கால கட்டத்தில் தான் இயேசுவின் சீடரான யோவான் பத்மூ தீவில் இருந்து விடுதலை செய்யப்பட்டு எபேசு பட்டணத்தில் வந்து தன்னுடைய இறுதி நாட்களில் சபையினரை விசுவாசத்தில் திடப்படுத்தினார்.

இந்த எபேசு பட்டணமானது ஸ்மைர்னா பட்டணத்திற்கு அருகில் இருந்த படியால் அநேக கிறிஸ்த்தவர்கள் யோவானின் போதகங்களை கேட்க்க வருவதுண்டு. இந்த பிரகாரமாக வந்து கிறிஸ்துவை சொந்த இரத்ச்சகராக ஏற்றுக்கொண்டவர் தான் பொலிகார்ப். இவர் யோவானின் சீடர்களில் ஒருவரானார். பின் நாட்களில் யோவான் பொலிகார்பை ஸ்மைர்னா திருச்சபையின் பிஷப்பாக (தலைவராக அல்லது ஆயராக) ஏற்படுத்தினார்.

கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் கிறிஸ்தவர்கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். இளம் வயதிலிருந்து முதிர் வயது வரை கிறிஸ்துவ சேவை செய்த்தால் இவரது பெயரை அறியாதவர் அந்த நாட்களில் இல்லை.

பாகாள் தெய்வங்களை வழி படுபவர்கள் கூட இவரது பேரில் நல்ல மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும் தங்கள் தங்கள் தெய்வங்கள் கிறிஸ்துவர்களால் நிராகரிக்கப்படுவதை உணர்ந்த இவர்கள் பொலிகார்ப்பின் விசாரிக்கும்படி ரோமஆட்சியாளர்களிடம் முறையிட்டனர். இதை அறிந்த ஸ்மைர்னா சபை மக்கள் அவரை தலைமரைவாகும்படி வற்புறுத்தினர். பொலிகார்ப்போ இறுதி வரை மந்தையை மேய்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 86 வயது நிரம்பிய பொலிகார்பின் மரணம் நெருங்கிவிட்டதை தேவனும் கனவில் வெளிப்படுத்தினார். இவர் மரிப்பதர்க்கு மூன்று நாட்களுக்கு முன்பதாக இவரது தலையணை தீயில் எரிவதை கனவில் கண்டார். அதன்பின்பு தான் தீயால் எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் என்ற தேவ சித்த்த்தை அவர் சபை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

நாம் மரணத்திற்கு அருகாமையில் செல்ல செல்ல நித்திய மேன்மையின் அருகில் செல்கிறோம் என்று சபை மக்களை தைரியபடுத்தினார். இப்படியாக மரணத்திற்கு தப்பிக்க அதிக வழிகள் இருந்தும் தேவசித்தம் தன்னில் நிறவேற தன்னை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் காணலாம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்


பாகம் 2

86 வருடம் நண்மை செய்த இயேசுவை எப்படி மறுதலிப்பேன் கிறிஸ்துவுக்காய் இரத்த சாட்சியாக மரித்த புனித பொலிகார்ப்பின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சி... ரோமப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் (Marcus Aurelius) ஆட்சியின் ஆறாம் ஆண்டில் ரோம போர்ச்சேவகர்களால் பொலிகார்ப் கைது செய்யப்பட்டார். அன்பின் அப்போஸ்தலனாகிய யோவானின் சீடரல்லவா இந்த பொலிகார்ப். தன்னை கைது செய்ய வந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தார். இதை கண்ட சேவகர்கள் இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை ஏன் கைது செய்து அழைத்து வர சொல்கிறார்கள் என்று வியந்தனர்.

இந்த சேவகர்களிடம் தனக்கு ஒரு மணி நேரம் ஜெபிக்க நேரம் தருமாறு பொலிகார்ப் வேண்டிக்கொண்டு ஜெபித்து சபையினரிடம் இருந்து விடைபெற்று ரோமபுரிக்கு சென்றார். அந்த நாட்களில் கிறிஸ்துவை வெளியரங்கமாக அறிக்கை செய்பவர்கள் அநேகர் கூடியிருக்கும் மைதானத்தில் மிருகங்களுக்கு இறையாக்கப்படுவார்கள். இல்லையேல் தீக்கிரையாக்கப் படுவார்கள்.

இந்த மைதானத்திற்குள் எண்பத்தாறு வயது நிரம்பிய முதிர் வயதான பொலிகார்ப் அழைத்து செல்லப்படும் போது பரலோகத்தில் இருந்து "திடங்கொண்டு இந்த மனிதர்களோடு விளையாடு" என்ற குரல் கேட்கின்றது.

ரோம ஆளுநர் பொலிகார்பிடம் "கிறிஸ்துவை மறுதலித்து ரோமானிய கடவுளை வணங்கி ஜீவனை காத்துகொள்ளுமாறு" வற்புறுத்தினார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. பொலிகார்பிடம் இருந்து வந்த விசுவாச வார்த்தைகள் "எண்பத்தாறு வருடம் நான் சேவித்து வரும் இயேசு இந்நாள் வரை எனக்கெந்த தீமையையும் செய்யவில்லை. இப்படியிருக்க எப்படி நான் என்னை இரட்சித்த இயேசு இராஜனை மறுதலிக்க முடியும்?" என்று கேட்டார்.

இதை கேட்டவுடன் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் அவரை தீக்கிரையாகும்படி கூக்குரலிட்டனர். தீக்கிரையாகி இரத்த சாட்சியாக தான் மரிக்கவேண்டும் என்று ஏற்கனவே சொல்லிருந்தபடியாக இது நடந்தது. தனது கடைசி நேரத்திலும் கிறிஸ்துவை சாட்சியாய் அறிவித்து அந்த மக்கள் மனமாறும்படியாக கதறினார்.

இறுதியில் அவர் கைகள் கட்டப்பட்டு அவர்மேல் நெருப்பு வைக்கபட்டது. அந்த நெருப்பில் அவர் அவியாமல் அவரது உடல் தங்கம் போல மின்னியது. கொளுந்துவிட்டு எறிந்த தீயின் மத்தியில் தேவனை அவர் துதிப்பதை பார்த்த அநேகர் இயேசுவை மெய்தெய்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இதனால் கோபம் கொண்ட ரோம ஆளுநர் ஈட்டியால் அவரை குத்தி கொலை செய்ய சேவகர்களுக்கு கட்டளையிட்டான். இப்படியாக பொலிகார்ப் இரத்த சாட்சியாக மரித்தார். இவரது நினைவாக வருடம்தோறும் அவர் இறந்தநாளை கிறிஸ்தவர்கள் நினவுகூர்ந்து வருகின்றனர். பிப்ரவரி 23-ம் நாள் இவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகின்றது.

இவர் இரத்த சாட்சியாக மரித்தாலும் இன்றளவும் கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருகின்றார். நாமும் கிறிஸ்துவுக்காக தைரியத்தோடு ஊழியம் செய்வோம். தேசத்தை சுதந்தரிப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

ஆர்தன்கேனன் மார்காசிஸ். அவர் தான் நாசரேத்தின் தந்தை என அழைக்கப்படும் ஆர்தன்கேனன் மார்காசிஸ். ஒரு மாபெரும் மனித நேயர்! மதம் கடந்து மனிதர்கள் நலனுக்காக தன்னலம் அற்று செயலாற்றிய உன்னதர். பிரார்த்திக்கும் உதடுகளை விட செயலாற்றும் கைகளை நம்பினவர்.

மக்கள் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் சும்மா பிரார்த்தனையில் மட்டும் இருக்கல் ஆகாது தன்சார்பாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பல அமைப்புகளை உருவாக்கியவர்

மிஷனறி ஆர்தன் கேனன் மார்காசிஸ் இங்கிலாந்தை சேர்ந்த பெற்றோரின் எட்டு பிள்ளைகளில் கடைக்குட்டியாக 24-12-1852 அன்று இங்கிலாந்திலுள்ள லெமிங்டனில் பிறந்தார். கிறிஸ்தவ நெறியில் வளர்க்கப்பட்டவர். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், முதலில் இறையியலும் பின்பு மருத்துவவும் கற்று தேர்ந்தார்.

மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கும் வேளையில் கால்டுவெல் பிஷப்பை சந்திக்கின்றார். இந்தியாவில், தமிழகத்தில் தென்கோடியில் அடர்ந்த காட்டில் திருநெல்வேலியில் சேவையாற்ற மிஷனறி தேவைப்படுவதாக தெரிவித்ததும் மருத்துவத்தில் தான் மேற்கொள்ள இருந்த மேற்படிப்பை உதறி தள்ளி விட்டு, யேசு நாதரின் சேவகராக இந்தியாவை நோக்கி தனது 22 வது வயதில் பயணத்தை ஆரம்பித்தார்.

குழந்தைப்பருவத்தில்இருந்தே ஆஸ்த்மா நோயால் பாதிப்படைந்த ஆர்தன்கேனன் மார்காசிஸ் உடல்நிலை எதிர்மறையாக இருந்தாலும் இறைவனின் பெயரால் செய்ய போகும் மனித சேவைக்கு தடங்கலாக ஒரு போதும் எடுத்துக் கொள்ளவில்லை. உன்னை போல் உன் அயலானை நேசி, கடவுளை நேசிப்பது என்பது மனிதனை சேவிப்பது ஊடாக என்ற நெறியில் ஆழ்ந்து நம்பிய ஆர்தன் கேனன் மார்காசிஸ் தன் சேவையை இடையன்குடியிலும் துவங்கி பின்பு நாசரேத்தில் தொடர்கின்றார்

மார்காசிஸ் என்ற மனிதரின் செயல்பாடுகள் நாசரேத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களை மட்டும் முன் நிறுத்தி இருக்கவில்லை. சுற்றியுள்ள பல கிராம மக்கள் நலனையும், சுயசார்பையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டே இருந்தது. வெறும் ஏழு மைல் பரப்பளவில் இருந்த இந்த ஊரில் 1803 ல் முதன் முதலில் எட்டு குடும்பம் மட்டுமே கிறிஸ்தவம் தழுவியது. நாசரேத்தின் அடையாளமாக திகழும் உயர்ந்த கோபுரம் கொண்ட தூய யோவான் ஆலயம் பனை ஓலைகளால் 1803 ல் கட்டப்பட்டது.

1830 அடைக்கலம் ஐயரால் மார்காஸிஸ் ஐயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. பிரம்மாண்டமாக ஒரு ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயர் ஆசைப்பட்டாலும் அவர் காலத்திற்கு பின் 1920ல் தான் தற்போது காணும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

நாசரேத்தில் உள்ள லூக் மருத்துவ மனை 1870 ல் டாக்டர் ஜெ. எம் ஸ்ட்ராச்சனால் ஆர்தன் கேனன் மார்காசிஸ் ஐயரின் தலைமையில் துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையின் சேவையை சுற்று வட்டாரத்திலுள்ள 20-30 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மக்கள் பயண்படுத்தி வருகின்றனர். யேசுவின் சுவிசேஷகர் லூக்காவின் நினைவாக பிற்காலத்தில் 1892 ஆண்டுவாக்கில் லூக் மருத்துவமனை என்ற பெயர் மாற்றப்பட்டது.

தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிப்படந்தது மட்டுமல்லாது; கொள்ளை நோயால் கால்வாசி மக்கள் மாண்டனர். இச்சமயம் ஆதரவற்று அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு என ஆர்தர் மார்காஸின் 1877ல் ஒரு அனாதை ஆசிரமம் துவங்கினார்.

அரசும் 70க்கு மேற்பட்ட குழந்தைகளை இவரின் மேற்பார்வையில் வளர்க்க கொடுத்தது.இந்த குழந்தைகள் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்ற கூறிய நோக்கில் அடுத்த வருடமே தொழில் கல்வி பாடசாலையும் ஆரம்பித்தார். அங்கு நெய்தல், மர, இரும்பு வேலைப்பாடுகள் கற்று கொடுக்கப்பட்டது. இந்த குழந்தைகளை பராமரிப்பது வளர்ப்பது எளிதாக இருக்கவில்லை. அவர்களை சிறந்த நெறியில் வளர்த்தார்.

கல்யாண வயது வந்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். 1884 ல் முதன்முதலாக தையல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதுடன் தையல் கற்று கொடுக்கும் பள்ளியையும் ஆரம்பித்தார். வெறும் தொழில் கல்வி என்று மட்டுமே நிறுத்தாது 1877 ல் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தார். மக்கள் சேவையில் அத்துடன் திருப்தி அடையவில்லை.

’ஆங்கிலோ வெனாக்குலர் பள்ளி’ என்ற பெயரில் 1882ஆம் ஆண்டு ஆண் குழந்தைகளுக்கான இடை நிலை பள்ளி ஆரம்பித்தார்.. இந்த பள்ளி மெட்ராஸ் மாகாணத்திலுள்ள மிகச்சிறந்த பள்ளி என்ற பாராட்டை 1885 ல் பெற்றது.

ஆண்களுக்கான மேல்நிலைப் பள்ளி இடையன்விளையில் ஆரம்பிக்க வேண்டும் என இருந்த கால்ட்வெல் பிஷப்பின் விருப்பத்தை மீறி; 1889 ல் நாசரேத் பள்ளியை உயர்நிலை பள்ளியாக உயர்த்தியதால் கால்டுவெல் பிஷப்பின் எதிர்ப்பையும் சந்தித்தார்.

மனக்கசப்பில் இருந்த பிஷப் 1892 வாக்கில் நாசரேத் உயர்நிலை பள்ளியை சில காலம் மூட உத்தரவிட்டார். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல கல்வி; பெண் குழந்தைகளும் சமநிலையை எட்ட வேண்டுமெனில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பெண் குழந்தைகளுக்காக சிறந்த பாடசாலை வேண்டும் என ஆர்வம் கொண்டார். அதன் விளைவாக பொது கல்வி திட்டத்தில் 1886 ல் பெண் குழந்தைகளுக்கு என பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்.

1888 ஆம் ஆண்டு, முதல் செட் மாணவிகள் மெட்ரிக் கல்வி பெற்று வெளியேறினர். இந்த பள்ளி தான் முதன் தென் இந்தியாவில் பெண்களுக்கான கல்விக்கூடமாக விளங்கியது. இதன் தரமான கல்வி சூழல் மெட்ராஸ் மாகாணத்தால் பாராட்டும் பெற்றது. இந்த நிறுவனங்களை எல்லாம் வரும் காலம் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால் சிறந்த தலைமையை உருவாக்க வேண்டிய தேவையையும் மனதில் கொண்டு இறையியல் கல்லூரியும் 1890 துவங்கினார்.

ஆர்தன் கேனன் மார்காசிஸ் நாசரேத் என்ற சிற்றூரை அவரின் குழந்தை போல் பாராமரித்து வளர்த்தி கொண்டு வந்தார். கல்வியோடும் மருத்துவ மனையோடும் மட்டும் அவருடைய சேவையை நிறுத்தி கொள்ளவில்லை.

இயற்கை வளங்களுடன் மக்கள் வாழ வேண்டும் என்ற நோக்கில் வாளயடியில் இருந்து நாசரேத் வரை தெருவோரம் ஆலமரம் அரசமரம் , வேம்பு மரங்களை நட்டு உருவாக்கினார். தபால் சேவைக்கு என 25-12-1894 அன்று தாபால் அலுவலகம் துவங்கினார்.

நாசரேத்திலுள்ள 5 வது தெரு மார்காசிஸ் திட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் தடம் நாசரேத் வழி செல்லும் படியாக அமைத்தார். வயதானவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் வயதனவர்களுக்கான பாடசாலைகளை 1880 ல் நாசரேத் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் துவங்கினார்,

நலிந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ’எஸ் பி ஜி’ நாசரேத் மரண உதவி நிதி (“S.P.G. Nazareth Christian Death Aid-Fund”) என்ற அமைப்பை 1884 ல் துவங்கினார்.

அடுத்த ஆறு வருடத்திற்கு உள்ளாக இதன் மூலம் பெறப்பட்ட 66,331 ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்தார். அதே போன்று எஸ் பி. ஜி விதவை அமைப்பு (“S.P.G. Widows’ Association”) மூலம் நலிந்த விதவைகளுக்கு உதவினார். குடும்பத்தில் யாரேனும் இறந்தால் வட்டியில்லா கடம் கொடுப்பது வழியாக அந்த குடும்பத்தை பணநெருக்கடியில் இருந்து மீட்கும் நோக்கில் ”த்ரிஃப்ட் சமூக நிதி” (Thrift Fund Society) என்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார். இப்படியாக நாசரேத் என்ற ஊரை ஒரு நெடிய வளர்ச்சி பாதையில் நடத்தி சென்றவர் ஆவார் ஆர்தர் கேனன் மார்காசிஸ்.

உயிர்பிரியும் தருவாயிலும் உன்னத ஊழியம் – ஜான் ஹார்ப்பர்

1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை… “ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்” என்று புகழ் பெற்ற “டைட்டானிக்” என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நேரம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. பனிப்பாறை வெட்டியதில் கப்பல் ஏறத்தாழ இரண்டாகப் பிளந்துவிட்டது. கப்பலின் தலைவர், ஒரு துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். சப்தம் கேட்டு விழித்த பிறகு தான், பயணிகள் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். அதில் பயணித்தவர்கள் நூறோ, இருநூறோ அல்ல. 1528 பேர். எங்கும் அலறல் ஒலி. உயிர் மீட்சி படகுகள் மற்றும் ஜாக்கெட்களைத் தேடி அவர்கள் அங்குமிங்கும் ஓடினர். பிழைப்போம் என்ற நம்பிக்கை பயணிகளுக்கு அறவே போய் விட்டது.

அப்போது, கப்பலில் பயணித்த பாடல் குழுவினர், “ஆண்டவரே! எங்களை உம் அருகில் சேர்த்துக் கொள்ளும்” என்று பொருள்படும்படியான பாடலைப் பாடினர். பல பயணிகள் அவர்கள் அருகே வந்து நின்று அவர்களும் இணைந்து பாடினர்.

அந்தக் கப்பலில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஹார்ப்பரும், அவரது எட்டு வயது மகள் நானா மற்றும் அவரது மனைவி சகோதரி ஜெசி லெயிட்டக் ஆகியோரும் பயணம் செய்தனர். அந்த மகள் மீது அவருக்கு பாசம் அதிகம். அவர் கப்பலின் தலைவனைச் சந்தித்தார். கெஞ்சிக்கூத்தாடி ஒரு உயிர் மீட்சிப் படகைப் பெற்றார். அதில் மகளையும், ஜெசியையும் ஏற்றி, மகளுக்கு முத்தமிட்டு “குட்பை” சொல்லி அனுப்பிவிட்டார். அதன்பின் அவருக்கு ஒரு உயிர் மீட்சி ஜாக்கெட் கிடைத்தது. அதை அணிந்து கொண்டு அவர் தப்பியிருக்கலாம். ஆனால், அங்குமிங்கும் ஓடிய அவர், அந்தக் கடைசி நேரத்திலும் தனது ஊழியத்தைக் கைவிடவில்லை. “இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்பொழுது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று சப்தமிட்டார்.

கப்பல் இப்போது முழுமையாக மூழ்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வேறு வழியின்றி ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலில் குதித்தார். அவரருகே ஸ்காட்லாந்தைச் சேர்ந்த “அக்கியுலா வெப்” என்ற இளைஞன் உயிரைக் காக்க நீந்திக் கொண்டிருந்தான். பனிக்கடலாக இருந்ததால் அவனால் நீண்டநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான் என்ற நிலையில், “தம்பி! நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். “இல்லை” என்றான் அவன். “அப்படியானால் இதை நீ பிடி,” என்று தன் ஜாக்கெட்டை கழற்றி அவனருகே வீசினார்.” “இதை நீ அணிந்து கொள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்போது, நீ இரட்சிக்கப்படுவாய். என்னைக் குறித்து நீ கவலைப்படாதே. நான் கீழ் நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தாலும், மேலே போகிறேன்,” என்றார்.

அந்த இளைஞன் அதை அணிந்து கொண்டான். சற்று நேரத்தில் கடலில் அவர் மூழ்கிவிட்டார். “அந்தக் கப்பல் மூழ்காமல் இருந்திருக்குமானால் ஹார்ப்பர் சிகாகோ நகரிலுள்ள ஒரு சபையில் பிரசங்கம் மட்டுமே செய்திருப்பார். ஆனால், தேவனோ அவரது தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில், தன்னுயிரைக் கொடுத்து பிற உயிரைக் காக்கும் மனப்பாங்கை அவரது மரணத்தின் மூலம் தந்துள்ளார்.

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோ 15:13-14). இயேசுவின் சிநேகிதராயிருக்க விரும்பினால் உயிர் பிரியும் தருவாயிலும் அழிகின்ற ஆத்துமாக்களை காப்பாற்ற வேண்டும்.

ஹானிங்டன் (1847-1885) ஜேம்ஸ் ஹானிங்டன் (JAMES HANNINGTON) இங்கிலாந்தில் சுசெக்ஸ் (SUSSEX) என்னும் பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை முடித்து ஒரு வங்கியில் பணியாளராக இருந்தார். பின்னர் இறையியலைக் கற்றுகொள்வதில் ஆர்வமுள்ளவராக இறையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பின்னர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் நற்செய்தி ஊழியத்தில் தன்னை முற்றிலுமாக இணைத்துக் கொண்டார்.

1875 ல் ஹங்ட்பையர் என்ற அவரது சொந்த ஊரிலே தூய ஜார்ஜ் ஆலயத்தின் பொறுப்பாளராக ஊழியம் செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் சர்ச் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்து, அதின்மூலம் ஆப்ரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிற்கு மிஷனரியாக சென்றார். அந்த நாட்டை ஐரோப்பியர்கள் அடிமை வியாபார மைய்யமாக வைத்திருந்தனர். மேலும் அந்தநாடு மிகக் கொடூரமும், பாலியல் நோய்கள், மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களின் பிறப்பிடமாகவும் இருந்தது. அங்கு ஊழியம் செய்பவர்களுக்கு பல இன்னல்கள் இருந்ததன. இந்த நிலையில் ஜாம்பியா சென்ற ஜேம்ஸ் ஹானிங்டன் வியாதிப்பட்டதால் இங்கிலாந்து திரும்பும் நிலையாயிற்று.

1883 ம் ஆண்டு ஜேம்ஸ் ஹானிங்டன், கேன்டர்பரி ஆர்ச் பிஷப்பாக (ARCH BISHOP OF CANTERBURY) உயர்த்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து உகண்டா தேசத்தின் மிஷனரி பணித்தளதிற்க்கு பொறுப்பாளராக அனுப்பப்பட்டார். அங்கு சென்று விக்டோரியா நயன்சா என்ற புகழ் பெற்ற அருவிக்கு அருகாமையில் புதிய பணித்தளத்தை தொடங்கினார். உள்ளூர்வாசிகளுக்கு பள்ளிகளை நிறுவினார். மக்கள் மத்தியில் ஜேம்ஸ் ஹானிங்டனின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. கிறிஸ்துவின் நற்செய்தியும் பரவ ஆரம்பித்தது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மக்கள் பெருகினார்கள். அவர் அணைத்து மக்கள் மீது பாரபட்சமின்றி அன்பைக் காட்டினார். சிறியோர் முதல் பெரியோர் வரை அவரை நேசித்தார்கள்.

இவரது வளர்ச்சியில் பொறாமை கொண்ட சிற்றரசன் வாங்கா (MWANCA) பல பொய்யான குற்றங்களை வனைந்து அவரை சிறையில் அடைத்தான். சிறையில் அடைப்பதற்கு அந்த சிற்றரசன் தெரிந்து கொண்ட இடம் ஒரு அசுத்தமான குடிசை. அவ்விடம் விஷப் பூசிகளினாலும், எலிகளாலும் நிறைந்து இருந்தது. பேராயர் ஒரு வாரத்திற்குள்ளாகவே குடிசையிலே வியாதிப்பட்டு இறந்து விடுவார் என அச்சிற்றரசன் எண்ணினான்.

ஆனால் பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனோ மரிக்கவில்லை. இந்த அற்புதத்தை பொறுத்துக் கொள்ள இயலாத அச்சிற்றரசன் அவரை வெளியேற்றி கொலை செய்ய உத்தரவிட்டான்.

1885 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ம் நாள், பேராயர் ஜேம்ஸ் ஹானிங்டனை பொது மேடையில் நிறுத்தி ஈட்டியால் குத்தி அவரைக் கொன்றனர். அவர் குத்தப்படும் போது “உகாண்டாவில் கிறிஸ்தவம் பிரவேசிக்கும் வழியை என் இரத்தத்தால் விலைக்கு வாங்கி விட்டேன். கிறிஸ்தவம் இனி எளிதில் உகாண்டா தேசத்தில் வளரும் என்று சிற்றரசன் வாங்காவிற்க்கு சொல்லுங்கள்” என்று தனது மரண வேளையில் சொன்னார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஆங்கலிக்கன் திருச்சபைகளை வெகுவாய் உலுக்கிற்று. அவருடைய மரணத்தை தொடர்ந்து இங்கிலாந்தில் மிஷனரி வாஞ்சையுள்ள அநேகர் எழுந்தார்கள். அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உகாண்டாவிற்கு செல்ல மனப்பூர்வமாக முன் வந்தார்கள். அவர்களிலும் அநேகர் ஜேம்ஸ் ஹானிங்டன் போலவே இரத்த சாட்சியாக மரித்தார்கள்.

ஜேம்ஸ் ஹானிங்டன் தரிசனத்தில் கண்டது போலவே இன்று உகாண்டாவின் 90% மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியிருகின்றார்கள். மிஷனரிகள் புதைக்கபடுவதில்லை, விதைக்கபடுகின்றார்கள் என்ற கூற்று எவ்வளவு பெரிய உண்மை. உகாண்டாவில் மிஷனரிகள் சிந்திய இரத்தம் வீன்போகவிலை. ஜேம்ஸ் ஹானிங்டனின் தரிசனமும் விருதாய் மாறிவிடவில்லை.

இருண்ட கண்டத்தினுள் மெய்யான ஒளியாம் இயேசு இன்றளவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். இதை வாசிக்கின்ற நீங்கள் இயேசுவுக்காய் பிரகாசிக்க ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? சிந்திப்போம் உடனடியாய், செயல்படுவோம் இயேசுவிக்காய். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

No comments:

Post a Comment