Friday, 27 January 2017

நீதிமொழிகள் 24 :28-34

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே சோம்பேறியின் வயலையும் மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன் . இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது: நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்: அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் இன்னும் கொஞ்சம் கைமுடங்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலும் வரும். நீதிமொழிகள் 24 :28-34

No comments:

Post a Comment