👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Dr. அகஸ்றின் ஜெபக்குமர்
அனுபவங்கள்
ஆரம்பம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஆரம்பம்
“ மகனே நீ இல்லாவிடில் வேறு எனக்கு யாருமில்லை ” " மகனே நீ இல்லாவிடில் வேறு எனக்கு யாருமில்லை " என்ற வார்த்தைகள் இடிமுழக்கமாய் , ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் பேசுவது போல் தெளிவாய் உரைக்கிறது .
உயரே இரண்டு அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து , இந்த சத்தத் திற்கும் கீழ்ப்படியத் தயங்கும் வாலிபன் மேல் விழுகிறது .
மரியாள் கேட்டதுபோல , இது எப்படியாகும் ? என்ற கேள்வி உள்ளத் தில் ஓங்கி ஒலித்தாலும் , நிற்க பெலனற்று நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து " இதோ அடியேன் " என்ற அர்ப்பணத்திற்குப் பின்னரே சத்தமும் ஓய்ந்தது , கண்ணீரும் நின்றது .
அதற்குப் பின் உள்ளத்தில் ஒரு கேள்வியும் இல்லை ; இனி எப்படி செயல்படவேண்டும் என்ற சிந்தனை மாத்திரமே முன் நின்றது .
1972 ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி வேலையை விடவும் ஆணை பிறந்துவிட்டதினால் எந்த குழப்பமும் இல்லை . பெற்றோரைச் சரி செய்வதும் , வேலை செய்யும் கம்பெனியைச் சரி செய்வதும் , தன் பொறுப்பு என தேவனே சொல்லிவிட்டபடி யால் அதனைக் குறித்தும் கவலையில்லை .
காணப்போகும் பிரதேசம் புதிது , மொழி தெரியாது , யார் தாங்குவார்கள் ? மாற்றுக் கலாச்சாரத்தில் எப்படி ஊழியம் செய்வது ? என்ற கேள்விகள் பின்னால் தூக்கி எறியப்படுகின்றன . யார் அந்த வாலிபன் ? என்ன நடந்தது ? படியுங்கள் உள்ளே ....
No comments:
Post a Comment