Monday, 27 June 2016

சங்கீதம் 75 :1-10

நீ தேவனை துதி, அவரது நாமம் சமீபமாயிருக்கிறதென்று அவரது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. நீ வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும், துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொல். இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி, ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார், பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். நீயோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணு. துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடு, நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். சங்கீதம் 75 :1-10

No comments:

Post a Comment