Tuesday, 21 June 2016

சங்கீதம் 73 :1-7,27,28

சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். துன்மார்க்கரின் வாழ்வை நீ காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டாய் மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை, அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும் கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. இதோ, கர்த்தரை விட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள், அவரைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பார். நீயோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம், நீ அவரது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் உன் நம்பிக்கையை வைத்திரு. சங்கீதம் 73 :1-7,27,28

No comments:

Post a Comment