Monday, 23 May 2016

சங்கீதம் 63 :1-11

உன்னுடைய தேவனை அதிகாலமே தேடுகிறாய், வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே உன் ஆத்துமா அவர் மேல் தாகமாயிருக்கிறது, உன் மாம்சமானது அவரை வாஞ்சிக்கிறது. அப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் அவரைப்பார்க்க ஆசையாயிருந்து, அவரது வல்லமையையும் அவரது மகிமையையும் கண்டாய் ஜீவனைப்பார்க்கிலும் அவரது கிருபை நல்லது, உன் உதடுகள் அவரைத் துதிக்கட்டும் உன் ஜீவனுள்ளமட்டும் நீ அவரைத் துதித்து, அவரது நாமத்தைச் சொல்லிக் கையெடு நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல உன் ஆத்துமா திருப்தியாகும், உன் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் அவரைப் போற்றும். உன் படுக்கையின்மேல் நீ அவரை நினைக்கும்போது, இராச்சாமங்களில் அவரைத் தியானிக்கிறாய் அவர் உனக்குத் துணையாயிருந்ததினால், அவரது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறாய் உன் ஆத்துமா அவரைத் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கிறது, அவரது வலதுகரம் உன்னைத் தாங்குகிறது. உன் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள், நரிகளுக்கு இரையாவார்கள். நீயோ தேவனில் களிகூருவாய், அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள், பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும் சங்கீதம் 63 :1-11

No comments:

Post a Comment