Monday, 1 June 2020

சிறுகதை 255-262

255             சவப்பெட்டி காணிக்கை

பிரேசில் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த பழைய தேவாலயத்தின் சுவர்களும் கூரையும் மிகுந்த சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஒரு ஞாயிறு ஆராதனைக்கு பின் ஆலயத்தின் பாதிரியார், "நம் ஆலயத்தை செப்பனிடும் பணிக்கு நம்மிடம் போதிய பண வசதி இல்லை, ஆகவே அதற்குத் தேவையான பணத்தை நாம் சேர்பதற்காக ஒரு Special fund raising programme-ஐ (Sale) நடத்தலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அன்றைய தினம்
 சம்பளம் வாங்குபவர்கள் பணமாகவும், வியாபாரம்/ தொழில் செய்பவர்கள், தாங்கள் வியாபாரம்/தொழில் செய்யும் சம்மந்தபட்ட பொருட்களையே, ஆலயத்தில் காணிக்கையாக கொண்டு வந்து வைத்தால் அதனை நாம் ஏலம் விட்டு அதன்மூலம் வருமானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். கடவுள் உங்களை  ஆசீர்வதித்தற்கு ஏற்ப பொருட்களை வந்து படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
         பாதிரியார் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது, காய்கறி வியாபாரம் செய்பவர்கள் காய்கறியும், ஆடை வியாபாரம் செய்பவர்கள் ஆடையும், ஹார்ட்வேர்ஸ் வியாபாரம் செய்பவர்கள் அதற்கேற்றாற் போன்ற பொருட்களையும், மாத சம்பளம் வாங்குபவர்கள் பணத்தையும் வந்து படைத்தனர். சபையார் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்தனர், அப்போது கோயிலின் முகப்பு வாசலை கண்ட சபையாருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது,  காரணம் ஏலத்திற்கு வந்த பொருட்களில் ஒரு புத்தம் புதிய அழகிய சவப்பெட்டியும் (Coffin box) இருந்தது. நமது ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில்  அடக்க ஆராதனை நடைபெறாதே, யார் இறந்து விட்டது? என்ன இது புதிதாக முளைத்துள்ளது? இதுவும் ஏலத்திற்கா? இதை யார் ஏலம் எடுப்பார்கள்? என ஒருவரை ஒருவர் கேட்டு முணுமுணுத்தனர். அப்போது அங்கு வந்த கோயில்பிள்ளையிடம் விசாரித்தனர். அதற்கு அவர் "அதோ கட்டம் போட்ட சட்டை போட்டுக் கொண்டு நிற்கிறாரே, அவர் கொண்டு வந்து வைத்துள்ள காணிக்கை பொருள் இது. அவர் ஒரு சவப்பெட்டி செய்யும் ஆச்சாரி (carpenter)" என்றார். சபையார் அனைவரும் அவரை ஒரு மாதிரி ஏளனமாக
 பார்த்தனர், ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. பாதிரியார் சொன்னதுபோல், நீங்கள் என்ன தொழில் செய்து பிழைக்கிறீர்களோ, அதில் காணும் பொருட்களை படையுங்கள் என்றார்,  நான் சவப்பெட்டி (Coffin box) செய்து பிழைப்பு நடத்துகிறேன் அதனால் சவப்பெட்டியையே காணிக்கையாக வைத்துள்ளேன், என்றார்  
          ஆராதனை முடிந்தவுடன் ஏலம் தொடங்கியது. எல்லா பொருட்களையும் சபையார் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இறுதியாக அந்த சவப்பெட்டியை ஏலத்திற்கு எடுத்து வந்து நிறுத்தினர். அனைவரும் திகைத்து அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தனர், யார் முகத்திலும் ஈயாடவில்லை. அங்கு ஒரே மயான அமைதி. யார் இதை ஏலம் கேட்டு வாங்கப் போகிறார்கள் என்று எல்லாருக்கும் ஒரே Tension. யாருமே சவப்பெட்டியை வாங்கலைனனா என்ன செய்வார்கள்? 
       அப்பொழுது திடீரென சவப்பெட்டி செய்பவரின், வயதான நண்பர் ஒருவர் எழுந்து, அந்த சவப்பெட்டியை 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு விட்டு, அதனை பாதிரியாருக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார், உடனே பாதிரியார் முறைத்து எழுந்தாரே பார்க்கலாம். எப்படியோ உடன் சுதாரித்துக்கொண்டு அதை 30 ஆயிரத்திற்கு அவர் ஏலம் கேட்டு அதனை P.C secretary க்கு தாம் அளிப்பதாகக் கூறினார். P.C secretary சட்டென துடித்தெழுந்து சவப்பெட்டியை 50,000 ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை உபதேசியாருக்கு அளிப்பதாக கூறினார், உடனே உபதேசியார் "என்ன Secretary என்னை சாக சொல்றீங்களா" என கோபமாக கேட்டு எழுந்து, சவப்பெட்டியை 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு அதனை அவர் அருகில் அமர்ந்திருந்த Treasurer-க்கு அளிப்பதாகக் கூறினார்.  Treasurer எழுந்து சவப்பெட்டியை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு மற்றொருவருக்கு என்றும், அந்த மற்றவர் எழுந்து அதற்குமேல் தொகை கோரி அடுத்தவர் என்று கூறவே, இப்படி மாறி மாறி சவப்பெட்டி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றது.1தரம், 2தரம் என, கடைசியாக மாட்டினவர்கள் முழி பிதுங்கி கடுப்பாகி செய்வதறியாது நின்றனர்.  
     அப்பொழுது புதிதாக அந்த ஊருக்கு சுற்றுறுலா வந்திருந்த மிகுந்த செல்வந்தர் ஒருவர் எழுந்து அந்த சவப்பெட்டியை 2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்டு, அதனை சவப்பெட்டி செய்யும் அந்த ஆச்சாரிக்கே அன்பளிப்பாக கொடுப்பதாக கூறினார். அந்த ஆச்சாரியும் சந்தோஷமாக அதனை ஏற்றுக்கொண்டு புன்முறுவலுடன் தான் காணிக்கையாக படைத்த சவப்பெட்டியை தன் வீட்டிற்குச் சுமந்து சென்றார். அவரை கேவலமாக நோக்கிய கண்கள் தரையை குத்தி நின்றது. சல்லி காசும் போடாமல் எல்லாரையும் காட்டிலும்  பெரிய தொகையை ரூ 2லட்சம் Contribute பண்ணின அந்த நபரை பார்ப்பதற்கே வெட்கி தலை குனிந்து நின்றனர். 

         கடவுளின் ஊழியத்தை நீங்கள் பல வழிகளில் செய்யலாம்/தாங்கலாம். அவைகளை சிலர் ஏளனமாகவும், சிறுமையாகவும் நோக்கலாம். உங்கள் மனதை கர்த்தர் அறிவார். நீங்கள் உங்களின், பெருமைக்காக/சுயவிளம்பரத்திற்காக,  கட்டாயமாகவும், விசனமாகவும் போலியாக மனமில்லாமல் செய்யும் சேவைகளை/ஊழியத்தை அவர் ஒருநாளும் ஏற்கமாட்டார். God wants you just the way you are. He will turn your shame into honour.


 256     கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகு ! 



தேவ ஊழியர் ஒருவரிடம் ஒரு அன்பான தாய் தன் மனதின் பாரங்களை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள் : 

ஐயா ஒரு வாலிய பையன் என் வாலிப மகளுக்கு நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று அவளுடன் பேசிப் பேசி அவள் மனதைக் கலைத்து விட்டான் . என் மகள் கள்ளம் கபடற்றவள் . அவளால் மனிதர்களின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியவில்லை .

 நாங்கள் இதனால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்திருக்கிறோம் . நிம்மதியே இல்லை என்று கூறினார்கள் . தேவ ஊழியர் ஜெபித்த போது : “ வெள்ளம் போல் சத்துரு வரும்போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் ' ஏசாயா 59:19 ) என்ற வசனத்தை கர்த்தர் வாக்குத்தத்தமாகக் கொடுத்தார் . இந்த வசனத்தைப் பிடித்துக் கொண்டு , 

விசுவாசத்தோடு தொடர்ந்து ஜெபியுங்கள் . கர்த்தர் கிரியை செய்வார் என்று ஆலோசனை சொல்லி ஊழியர் அவர்களை அனுப்பி வைத்தார் . அவர்களும் அப்படியே ஜெபித்து வந்தார்கள் . மகளிடம் இதைப்பற்றி ஒன்றும் பேசாமல் அவளிடம் மிகுந்த அன்பு செலுத்தினார்கள் . 

பெற்றோரின் அன்பு ஒருபுறம் . அந்தப் பையனுடன் கொண்ட தொடர்பு மறுபுறம் மகளை நெருக்கியது . அந்தப் பையனுடனான நட்பை தொடரவும் முடியாமல் , முறிக்கவும் முடியாமல் தடுமாறினாள் . 

நாட்கள் கடந்தன . மறுபடியும் ஒரு நாள் அந்தத்தாய் தேவ ஊழியரிடம் ஜெபிக்க வந்தார்கள் . அவர் ஜெபித்தபோது பரிசுத்த ஆவியானவர் ஒரு காரியத்தை வெளிப்படுத்தினார் . அம்மா . உங்கள் மகளிடம் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருக்கிறது . அந்தக் குறிப்பிட்ட பொம்மையில் பில்லிசூனியம் உள்ளது . எனவே அதை உடனே அகற்றி , சுட்டெரித்துப் போடும்படி ஆவியானவர் சொல்கிறார் என்று சொன்னார் . 

வீட்டுக்கு வந்தவுடன் தாய் தன் மகளிடம் : “ உன்னிடம் ஏதாவது புது பொம்மை இருக்கிறதா ? அது உனக்கு யார் கொடுத்தார்கள் " என்று கேட்டார்கள் .

 தன்னிடம் அந்தச் சிறிய பொம்மை இருப்பது தாய்க்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்ட மகள் : வேலை வாங்கித் தருவதாகக் கூறிய அந்தப் பையன்தான் எனக்கு அந்தப் பொம்மையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான் என்றாள் . 

அந்தப் பொம்மையில் பில்லி சூனியம் ( witchcraft ) வைக்கப்பட்டுள்ளதை பரிசுத்த ஆவியானவர் தேவ ஊழியர் மூலம் வெளிப்படுத்தியதைப் பற்றித் தாய் சொன்னார்கள் . மகள் அதிர்ச்சியுற்றாள் . தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட சதியினைப் புரிந்து கொண்ட அந்த வாலிப மகள் பொம்மையைத் தாயிடம் கொடுத்தாள் . தாய் அதை நெருப்பினால் சுட்டெரித்துப் போட்டார்கள் . 

மகள் தெளிவு பெற்றாள் . வேண்டாத அந்த நட்பைத் துண்டித்துக்கொண்டாள் . கண்ணீருடன் இயேசுவிடம் ஜெபித்து மன்னிப்பைப் பெற்றுக் கொண்டாள் . மகிழ்ச்சியடைந்த பெற்றோர் தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள் . 

கர்த்தருடைய கிருபையால் விரைவில் பக்தியுள்ள நல்ல ஒரு குடும்பத்தில் இரட்சிக்கப்பட்ட ஒரு நல்ல மணமகனை அவளுக்குத் தெரிந்து கொண்டார்கள் . திருமணம் சிறப்பாக நடைபெற்றது . இன்றும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் .

 இதை வாசிக்கும் அன்பான வாலிபப் பிள்ளைகளே . உங்கள் பெற்றோரின் தூய்மையான அன்பையும் , பாசத்தையும் உதாசீனப்படுத்தி , தவறான வழிகளைத் தெரிந்து கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள் . கர்த்தருக்குப் பயந்து தீமைக்கு விலகுங்கள் . தினமும் வேதம் வாசித்து ஜெபிக்க மறவாதிருங்கள் . 

வேதமே வெளிச்சம் . ஜெபமே ஜெயம் . நீங்கள் வேத வசனங்களின்படி எச்சரிப்படைந்து உங்கள் வழிகளைக் காத்துக்கொண்டால் , சாத்தான் உங்களை வழிதப்பச் செய்ய முடியாது . பரிசுத்த ஆவியானவர் நித்தமும் உங்களைச் சரியான வழியில் நடத்துவார் . உங்கள் எதிர்காலம் நிச்சயமாய் ஆசீர்வாதமாயிருக்கும் . 

தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும் , எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் மகா பரிசுத்தமுள்ள உன் சிருஷ்டிகராகிய தேவனை நினைத்து , அவருடைய மேலான கற்பனைகளைக் கைக்கொள்ளவது அவசியம் . சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள் ; அவரே உங்கள் பயமும் , அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக . ( ஏசாயா 8:13 ) 



257                  வீட்டு ஜெபக்குழுக்கள்  
                            ( Home Prayer Cells ) " 

பால்யாங்கிசோ கொரியாவில் சபையை நிறுவி ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு வயது 28. 

அந்தக் காலக் கட்டத்தில் அவர் இருதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் , பிரசிங்கிப்பதை விட்டு விட்டு வேறு வேலை எதையாவது செய்வதுதான் ஒரே வழி என்றும் டாக்டர்கள் கூறிவிட்டார்கள் .

 சரீரம் மிகவும் பலவீனப்பட்டு சபை ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்ய இயலாத நிலையில் அவர் இருந்தார் .

 ஆனாலும் கர்த்தர் கொடுத்த ஊழியத்தைச் செய்யாமல் பின்வாங்கக் கூடாது என்று தீர்மானித்தார் . அவர் மூலமாக கொரியா தேசத்தில் பெரிய சபையைக் கட்டி எழுப்பப் போவதாகவும் , அவரைப் படிப்படியாகக் குணமாக்கப் போவதாகவும் கர்த்தர் அவருக்கு வாக்குக் கொடுத்திருப்பதை நினைத்து தைரியம் கொண்டார் . 

அவர் படுக்கையில் படுத்துக் கொண்டு , என்னுடைய பெரிய சபையை நான் தனிமையாக எவ்வாறு நிர்வகிக்கப் போகிறேன் என்று ஒரு நாள் சிந்தித்துக் கொண்டிருந்தார் . 

அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் : ' என் ஜனங்கள் வெளியேறி வளரட்டும் ' என்று பேசினார் 

. ' ஆண்டவரே என்ன சொல்லுகிறீர் ' என்று கேட்டார் . அவர் தொடர்ந்து ' என் ஜனங்கள் பால்யாங்கிசோவின்  ஆளுகையிலிருந்து வெளியே புறப்பட்டுப்போய் , வளரட்டும் ' என்றார் .

 தொடர்ந்து ' அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நின்று ஊழியம் செய்ய உதவி செய் ' என்றார் . 

இந்தக் காரியத்தைக் குறித்து அவர் வேதத்தை ஆராய்ந்து பார்க்க இந்த வார்த்தைகள் அவரைத் தூண்டின .

 அப்போஸ்தலர் 2 : 46,47 வசனங்களை வாசித்த போது , 

ஆதிசபையில் இரண்டு விதமான கூட்டங்கள் நடைபெற்றதைப் பற்றிக் கவனித்தார் . ஆதி 

 சீஷர்கள் தேவாலயத்தில் அனுதினமும் கூடி , தேவனை ஆராதித்தார்கள் . அது மட்டுமல்லாமல் , வீடுகள் தோறும் அப்பம்பிட்டு ஐக்கியம் பாராட்டினார்கள் . இது அவரது கவனத்தை ஈர்த்தது . அது வரை சபை என்பது ஒரு பொதுவான கட்டிடம் ( ஆலயம் ) என்பதே அவருடைய எண்ணமாயிருந்தது . 

ஆனால் ஒரு வீடு சபையாக மாற முடியும் என்று அவர் ஒரு போதும் எண்ணியதேயில்லை . அவர் அதுவரை அறிந்திராத ' வீட்டு ஊழியம் ' ஒன்றும் இருக்கிறது என்பதை அன்று அறிந்து கொண்டார் . 

அவர் தொடர்ந்து வேதத்தை வாசித்த போது , லீதியாளின் வீட்டில் கூடி வந்த சபையைப் பற்றியும் ( அப் 16:40 ) ; ஆக்கில்லா . பிரிஸ்கில்லாள் வீட்டில் கூடிவந்த சபையைப் பற்றியும் ( ரோமர் 16 : 3-5 ) , பிலேமோனின் வீட்டில் கூடிய சபையைப் பற்றியும் ( பிலேமோன் 1 : 2 ) கவனத்தைச் செலுத்தினார் . 

எனவே சபை மக்களை உற்சாகப்படுத்தி வீடுகளில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதைத்தான் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உணர்த்துகிறார் என்பதையும் , அது வேதத்தின் அடிப்படையில் தான் இருக்கிறது என்பதையும் அவர் புரிந்து கொண்டார் . 



258  உருவத்தை பார்த்து


10 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.


259    கணிப்பு


ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. 

அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்
,அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவறக்கூடாது.

260     உண்மையைப் பலி கொடுத்து


ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு
ஆட்டையும் வளர்த்து வந்தான்.
அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக
இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால்
பாதிக்கப்பட்டது.
அதனால், அந்த விவசாயி குதிரைக்குச்
சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான்..
மருத்துவர் அந்த குதிரையின் நிலையைப்
பார்த்து,
“நான் மூன்று நாட்கள் வந்து மருந்து
தருகிறேன். அந்த மருந்தைக் குதிரைக்குச்
சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட
குதிரை எழுந்து நடந்தால் சரி,
இல்லையெனில் அதனைக் கொன்றுவிட
வேண்டியது தான்” என்று சொல்லியபடி
குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச்
சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக்
கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக்
குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக்
கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர்,
குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய
மருந்தைக் கொடுத்துச் சென்றார்.
அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான்,

அந்த விவசாயி.பின்பு சிறிது நேரம்
கழித்து,அங்கு வந்த ஆடு, அந்தக்
குதிரையிடம், "நண்பா, நீ எழுந்து நடக்க
முயற்சி செய்.
நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக்
கொன்று விடுவார்கள்" என்று அந்த
குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார்.
அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு,
அந்த விவசாயிடம் "நாளை குதிரை
நடக்கவில்லையெனில், அதனைக் கொன்றுவிட வேண்டும்.

இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி,
மற்றவர்களுக்கும் பரவிவிடும்." என்று
சொல்லிச் சென்றார்.
இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர்
சென்றதும், குதிரையிடம் வந்து,
“நண்பா!
எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய்.
நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக்
கொன்று விடுவார்கள்” என்று சொல்லியது.
அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக
எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக
அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து
போகும்படியாக குதிரை ஓடியது.
மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை
அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், "என் குதிரை நன்றாகக்
குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத்
தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த
மருந்துதான் காரணம்.

என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு
நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும்.
இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து
கொண்டாடி விடுவோம்” என்றான்.

குதிரை ஆட்டின் ஊக்கத்தால் எழுந்து
நடந்தாலும் மருத்துவர் கொடுத்த
மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்....
இப்படித்தான் இந்த உலகில் யாரால் நன்மை
கிடைத்தது என்பதை உணராமல், பலரும்
உண்மையைப் பலி கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்.



261 பணம்

தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு
பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ
ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர்
கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை.

'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர்
டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த
காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு,
'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று
முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்
கண்டக்டர்..

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ
காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண்
கலங்கினார். தோளில் கிடந்த துண்டை
எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்
கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த
மற்றொரு நபர் அவரை இறுக்க
பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச்சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது
என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை
விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில்
என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகமாக
இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே
பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பஸ் ஸ்டாப்பில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும்தெரிந்து கொள்ளலாம் என்று மனது விரும்பியது.. அவர்களை பின்தொடர்ந்தேன்..

தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு
நடக்கத் தொடங்கினர் இருவரும். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள்சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர்.அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன்மகனை கீழே கிடத்தி ,தலையிலையும் நெஞ்சிலையும் அடித்துக்கொண்டு கதறி
அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார், என்ன
காரணம் என்று எனக்கு எதுவும்
தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும்
தெளிவாகப் புரிந்தது. இறுதிச் சடங்கைகூடதிருவிழா போல் கொண்டாடும் இந்தக்
காலத்தில், இறந்து போன தன் மகனை பாடைகட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம்பணம் இல்லை என்று.

உயிருக்குயிரான தன் மகனை தோளில்
சுமந்துக் கொண்டு, துக்கத்தை நெஞ்சில்
புதைத்துக்கொண்டு, கண்டக்டருக்கு
தெரியாமல் இறந்து போன தன் மகனை
மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த
அந்த தந்தையின் வலி, இன்னமும் என் மனதில்
நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை
என்று நினைத்தேன். மரணித்த பின்னரும் பணம்
தேவைப்படுகிறது இந்த உலகத்தில்..



262    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் 

இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்தபொம்மை வாங்குவதற்கு தேவையானபணம் இல்லை என்று சொன்னார். அந்தசிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்குறைவாக உள்ளது என்றார். அந்தசிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான். 

மேலும் அவன்பேச தொடர்ந்தபோது என் இதயம்நின்று விட்டது போல் உணர்தேன். 

அவன்கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள்.
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.
எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன்கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,


மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளானது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. 

ஆனால்ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...

No comments:

Post a Comment